எவனோ என் அகம் தொட்டு விட்டான் - அகம் 61
அத்தியாயம் 61: தீவிர சிகிச்சைப் பிரிவின் கதவையே வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தான் ஆதித்யன்.கலங்கிச் சிவந்திருந்த அவனுடைய கண்கள்...அந்த அறைக்கதவை விட்டு...இம்மியளவு கூட நகரவில்லை.மருத்துவர்களும்...செவிலியர்களும் அந்த அறைக்குள் உள்ளே நுழைவதும்...வெளியே வருவதுமாய் பதட்டத்துடன் அலைந்து கொண்டிருந்தனர். அனைவரது விழிகளிலும் ஒரு பதட்டம்...கவலை குடிகொண்டிருந்தது.இருக்காதா பின்னே...?உள்ளே அடிபட்டுக் கிடப்பது அவர்களது முதலாளியின் மனைவி...!வெளியே இடிந்து போய் அமர்ந்திருப்பதோ...அவர்களது முதலாளி...!ஆம்...!அது ஆதித்யனுடைய மருத்துவமனைதான்...! சென்னைக்கு அருகில்...அதுவும் அவர்களது மருத்துவமனை இருக்கும் பகுதியில் விபத்து நேர்ந்திருந்ததால் நித்திலாவை உடனடியாக அவர்களது மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்க்க முடிந்திருந்தது. பைத்தியம் பிடித்தவனைப் போல்...நித்திலாவை கைகளில் தூக்கிக் கொண்டு சாலையில் ஓடிக் கொண்டிருந்தவனை......