எவனோ என் அகம் தொட்டு விட்டான் - அகம் 53
அத்தியாயம் 53 : சோக சித்திரமாய் கட்டிலில் சாய்ந்திருந்த நித்திலாவின் விழிகள் இரண்டும் அழுதழுது சிவந்து போயிருந்தன.பால் போன்ற வெண்மையான அவளின் கன்னங்களில்....ஆதித்யனின் விரல் தடங்கள் பதிந்து கன்றி சிவந்திருந்தன. இளங்காலைப் பொழுது மெல்ல மெல்ல புலர்ந்து கொண்டிருக்க....சூரியனின் கதிர்கள் அறைக்குள் எட்டிப் பார்க்க ஆரம்பித்தன.இரவு முழுவதும் அழுது கொண்டிருந்தவளின் கண்ணீர் கூட வற்றிப் போயிருந்தது.அவள் அழுது கொண்டிருந்ததை...அவன் அறிந்திருந்தாலும் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டான்.இரவு இருவருமே சாப்பிடவில்லை.தங்களது அறைகளுக்குள் சென்று முடங்கிக் கொண்டனர். கையில்....ப்ரெட் டோஸ்ட்...ஆப்பிள் ஜூஸ் அடங்கிய தட்டுடன் நித்திலாவின் அறைக்குள் நுழைந்தான் ஆதித்யன். "கமான் பேபி....!வேக் அப்....!எழுந்து போய் ப்ரெஷ் ஆகிட்டு வா...!ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிடலாம்....!",கையிலிருந்த தட்டை டீபாயின் மேல் வைத்தபடி அவன் அவசரப்படுத்த.. "ம்ப்ச்....!",சலிப்போடு அவனை நிமிர்ந்து பார்த்தவள்...ஒன்றும் பேசாமல் மீண்டும் கட்டிலில் சாய்ந்து கொண்டாள். அவளருகில் வந்து அவள் கையைப் பற்றி எழுப்...