இடுகைகள்

எவனோ என் அகம் தொட்டு விட்டான்...!!! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எவனோ என் அகம் தொட்டு விட்டான் - அகம் 53

  அத்தியாயம் 53 :   சோக சித்திரமாய் கட்டிலில் சாய்ந்திருந்த நித்திலாவின் விழிகள் இரண்டும் அழுதழுது சிவந்து போயிருந்தன.பால் போன்ற வெண்மையான அவளின் கன்னங்களில்....ஆதித்யனின் விரல் தடங்கள் பதிந்து கன்றி சிவந்திருந்தன.   இளங்காலைப் பொழுது மெல்ல மெல்ல புலர்ந்து கொண்டிருக்க....சூரியனின் கதிர்கள் அறைக்குள் எட்டிப் பார்க்க ஆரம்பித்தன.இரவு முழுவதும் அழுது கொண்டிருந்தவளின் கண்ணீர் கூட வற்றிப் போயிருந்தது.அவள் அழுது கொண்டிருந்ததை...அவன் அறிந்திருந்தாலும் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டான்.இரவு இருவருமே சாப்பிடவில்லை.தங்களது அறைகளுக்குள் சென்று முடங்கிக் கொண்டனர்.   கையில்....ப்ரெட் டோஸ்ட்...ஆப்பிள் ஜூஸ் அடங்கிய தட்டுடன் நித்திலாவின் அறைக்குள் நுழைந்தான் ஆதித்யன்.   "கமான் பேபி....!வேக் அப்....!எழுந்து போய் ப்ரெஷ் ஆகிட்டு வா...!ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிடலாம்....!",கையிலிருந்த தட்டை டீபாயின் மேல் வைத்தபடி அவன் அவசரப்படுத்த..   "ம்ப்ச்....!",சலிப்போடு அவனை நிமிர்ந்து பார்த்தவள்...ஒன்றும் பேசாமல் மீண்டும் கட்டிலில் சாய்ந்து கொண்டாள்.   அவளருகில் வந்து அவள் கையைப் பற்றி எழுப்...

எவனோ என் அகம் தொட்டு விட்டான் - அகம் 52

  அத்தியாயம் 52 :   ஆதித்யனின் காரில் அமர்ந்திருந்த நித்திலாவின் மனம் முழுக்க...ரணம்..ரணம்..ரணம் மட்டுமே....!பெற்றவர்களின் பாசத்தில் மூழ்கி முடிவெடுத்து விட்டாளே தவிர...தன்னவனின் முகம் பார்த்து...'நீ வேண்டாம்....!உன் காதல் வேண்டாம்....!',என்று அவளால் மட்டும் எப்படி சொல்ல முடியும்.....?   அவள் உயிரில் கலந்தவன் அல்லவா அவன்....?அவள் இதயத்துடிப்பில் உறைந்திருப்பவன் அல்லவா அவன்....?   மனதிற்குள் மலர்ந்து மணம் பரப்பிக் கொண்டிருக்கும் காதலை....கசக்கி எறிவது ஒன்றும் அவ்வளவு சுலபமான காரியம் அல்லவே....?   காரில் ஏறியதிலிருந்து அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தான் ஆதித்யன்.அவள் மனதிற்குள் ஏதோ போராட்டம் நடந்துக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்தாலும்....அவன் வாயைத் திறந்து எதையும் கேட்கவில்லை.'அவளே கூறட்டும்....!' என்று அமைதி காத்தான்.   பிரம்மை பிடித்தவள் போல் சாலையையே வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் நித்திலா.விழிகளில் இருந்த கண்ணீரை இமை சிமிட்டி அடக்கினாள்.பயணம் நீண்டு கொண்டிருந்ததே தவிர...அவள் வாயைத் திறந்த பாடாக இல்லை.   போக்குவரத்து நெரிசல்கள் அடங்கி...