இடுகைகள்

எவனோ என் அகம் தொட்டு விட்டான் - அகம் 51

  அத்தியாயம் 51 :   "இது எல்லாம் எதுக்கு டா மச்சான்....?வேண்டாம்....!",கௌதம் மறுத்துக் கொண்டிருக்க..   "நான் ஒண்ணும் என் நண்பனுக்காக இதைப் பண்ணல.....!என்னுடைய தங்கச்சி வீட்டுக்காரனுக்காகத்தான் இதைப் பண்றேன்....!",கூறியபடியே அவன் கையில் ஒரு கத்தை காகிதத்தைத் திணித்தான் ஆதித்யன்.   இவர்கள் இருவரையும் புன்னகை முகத்துடன் பார்த்தபடியே....ஆதித்யனின் குடும்ப வக்கீல்...சோபாவில் அமர்ந்திருந்தார்.ஆதித்யனின் அருகில் நித்திலா நிற்க....கௌதமின் அருகில் புது மணப்பெண்ணாய் மெல்லிய சரிகையிட்ட புடவை கட்டி...நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்து...தளரப் பின்னிய கூந்தலில் பூச்சூடி....மஞ்சள் தாலி மின்ன நின்றிருந்தாள் சுமித்ரா.   "உன் தங்கச்சி வீட்டுக்காரனுக்கு இதெல்லாம் தேவையில்லை....!உன்னுடைய நட்பு மட்டும் போதும்....!",தன் கையில் அவன் திணித்த காகிதத்தை வாங்க மறுத்தபடி அவன் கூற..   "அந்த நட்பு அவனுக்கு எப்பவும் கிடைக்கும்....!இது உன்னுடைய மேரேஜ்க்கு நாங்க தர்ற கிஃப்ட்....!அதுவும் சுமித்ராவிற்கு அண்ணனா நானும்....அண்ணியா நிலாவும் தர்ற கிஃப்ட்.....!இதை நீ மறுக்க கூடாது.....!...