எவனோ என் அகம் தொட்டு விட்டான் - அகம் 51
அத்தியாயம் 51 :
"இது எல்லாம் எதுக்கு டா மச்சான்....?வேண்டாம்....!",கௌதம் மறுத்துக் கொண்டிருக்க..
"நான் ஒண்ணும் என் நண்பனுக்காக இதைப் பண்ணல.....!என்னுடைய தங்கச்சி வீட்டுக்காரனுக்காகத்தான் இதைப் பண்றேன்....!",கூறியபடியே அவன் கையில் ஒரு கத்தை காகிதத்தைத் திணித்தான் ஆதித்யன்.
இவர்கள் இருவரையும் புன்னகை முகத்துடன் பார்த்தபடியே....ஆதித்யனின் குடும்ப வக்கீல்...சோபாவில் அமர்ந்திருந்தார்.ஆதித்யனின் அருகில் நித்திலா நிற்க....கௌதமின் அருகில் புது மணப்பெண்ணாய் மெல்லிய சரிகையிட்ட புடவை கட்டி...நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்து...தளரப் பின்னிய கூந்தலில் பூச்சூடி....மஞ்சள் தாலி மின்ன நின்றிருந்தாள் சுமித்ரா.
"உன் தங்கச்சி வீட்டுக்காரனுக்கு இதெல்லாம் தேவையில்லை....!உன்னுடைய நட்பு மட்டும் போதும்....!",தன் கையில் அவன் திணித்த காகிதத்தை வாங்க மறுத்தபடி அவன் கூற..
"அந்த நட்பு அவனுக்கு எப்பவும் கிடைக்கும்....!இது உன்னுடைய மேரேஜ்க்கு நாங்க தர்ற கிஃப்ட்....!அதுவும் சுமித்ராவிற்கு அண்ணனா நானும்....அண்ணியா நிலாவும் தர்ற கிஃப்ட்.....!இதை நீ மறுக்க கூடாது.....!",பிடிவாதமாய் உரைத்தான் ஆதித்யன்.
அது ஒப்பந்த பத்திரம்.....!ஆதித்யன்...தனது தொழில்கள் அனைத்திலேயும் கௌதமை பங்குதாரராக மாற்றியிருந்தான்.அதற்கான ஒப்பந்த பத்திரம்தான் அது....!அதைத்தான் கெளதம் மறுத்துக் கொண்டிருந்தான்.
"இந்த அத்தனை தொழில்களுடைய முதலீடும் உன்னுடையது ஆதி....!என்னுடைய முதலீடுன்னு இதுல ஒண்ணுமே இல்ல....!இந்த தொழில்கள் அத்தனைக்கும் உரிமைக்காரனா நீ மட்டும்தான் இருக்க முடியும்....!இருக்கணும்.....!",உறுதியுடன் கெளதம் கூற..
"இந்த முதலீடு அனைத்தும் என்னுடையதுதான்.....!நான் ஒத்துக்கிறேன்....!ஆனால்...இந்த தொழில்களோட வளர்ச்சியில உனக்கும் பங்கு இருக்கு....!முதலீடு வேணும்னா என்னுடையதா இருக்கலாம்....!ஆனால்...உழைப்பு நம்மளுடையது.....!நான் தொழிலைக் கையிலெடுத்த நாள்ல இருந்து....நீ எனக்குத் துணையா இருந்து...உன் உழைப்பைக் கொடுத்திருக்க....!தயவு செய்து இதை மறுக்காதே டா....!",அவனை விட உறுதியாக ஆதித்யன் கூற..
நித்திலாவும் ஆதித்யனுக்கு ஆதரவாகப் பேசினாள்.
"ஒத்துக்கோங்க அண்ணா....!உங்க ரெண்டு பேருடைய நட்பு தொழில்லையும் இணையட்டுமே....!",அவளும் அவள் பங்கிற்கு வற்புறுத்தினாள்.
நித்திலாவிடம் இந்த ஏற்பாட்டைப் பற்றி ஆதித்யன் ஏற்கனவே கூறியிருந்தான்."நம்ம சார்பா...கெளதம்..சுமித்ராவிற்கானத் திருமண பரிசு இதுதான்....!'என்று அவளிடம் கூறியிருந்தான்.
இப்பொழுது....கெளதம்..சுமித்ராவிடம் அந்தப் பத்திரத்தை ஒப்படைக்கும் போது கூட...'எங்கள் சார்பாக' என்று நித்திலாவையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டானே ஒழிய....அவளைப் பிரித்து வைக்கவில்லை.
அப்பொழுதும் கெளதம் அப்படியே நிற்க....வற்புறுத்தி அவன் கையில் பத்திரத்தை வைத்தவன்,"நம்ம நட்பை நீ மதிக்கறதா இருந்தால்....இதை நீ மறுக்க கூடாது கெளதம்....!",ஆதித்யனின் இந்தப் பிடிவாதத்தில் அமைதியாக அந்தப் பத்திரத்தை வாங்கிக் கொண்டான் கெளதம்.
"சரி வாங்க....!அக்ரிமெண்ட்ஸ் பேப்பர்ஸ்ல சைன் பண்ணிடலாம்.....!",வக்கீல் அழைக்கவும்..
"ஒரு நிமிஷம் அங்கிள்.....!",வக்கீலிடம் உரைத்த ஆதித்யன்....நித்திலாவிடம் திரும்பி கண்ணசைக்க...அவள்...பையில் இருந்து ஒரு நகைப் பெட்டியையும்....மற்றொரு பத்திரத்தையும் எடுத்தாள்.
"இன்னும் என்னடா.....?",கெளதம் வினவ..
"இது என் தங்கச்சிக்கு....!உனக்கு இல்ல....!உன் கையாலேயே கொடு நிலா....!",ஆதித்யன் கூற..
அவள்..."வாழ்த்துக்கள்....!",என்றபடி அந்தப் பரிசை சுமித்ராவிடம் நீட்டினாள்.
அடையாறில் ஒரு பங்களாவை சுமித்ராவின் பெயரில் வாங்கியிருந்தான் ஆதித்யன்.அதோடு வைர நகையும் கூட....!எப்படியும் இரண்டின் மதிப்பே கோடியைத் தாண்டும்....!
"ஹைய்யோ....!அண்ணா....!இவ்வளவு பெரிய பரிசெல்லாம் எனக்கு வேண்டாம்....!",சுமித்ரா மறுக்க..
"நான் 'அண்ணன்'ன்னு வெறும் வாய் வார்த்தையா சொல்லலை ம்மா....!என் மனப்பூர்வமாகத்தான் சொன்னேன்....!ஒரு அண்ணனா....என் தங்கச்சிக்கு செய்ய வேண்டிய கடமை இது.....!வாங்கிக்கோ....!",அவனது குரலில் தெரிந்த பாசத்தின் ஆழத்தை அவளால் மீற முடியவில்லை.
'என்ன செய்வது....?' என்று தெரியாமல் அவள்...கௌதமை நோக்கினாள்.
அதைக் கவனித்த ஆதித்யன்,"எதுக்கும்மா அவனைப் பார்க்கிற....?அவன் எதுவும் சொல்ல மாட்டான்....!சொல்லவும் கூடாது....!என் தங்கச்சிக்கு நான் செய்யறேன்.....!அதைக் கேட்க அவனுக்கு உரிமையில்லை.....!நீ இதை வாங்கிக்கோ....!",உரிமையுடன் அவன் வற்புறுத்த...கண்கலங்க அதை வாங்கிக் கொண்டாள் சுமித்ரா.
"தேங்க்ஸ் அண்ணா....!",நெகிழ்ச்சியில் அவளுக்கு வார்த்தைகளே வரவில்லை.
சூழ்நிலையை இலகுவாக்கும் பொருட்டு,"ஷப்பா....!கெளதம் அண்ணா.....!இதுக ரெண்டும் ஓவராகத்தான் ஃபிலிம் காட்டுது....!பெரிய பாசமலர் சிவாஜி கணேஷன்...சாவித்திரின்னு நினைப்பு....!",சலித்துக் கொள்வது போல் நித்திலா கூற..
அதுவரை....அனைத்தையும் புன்னகை முகமாய் பார்த்துக் கொண்டிருந்த திவ்யா,
"அடா அடா....!இதுக்கே சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாம் போலவே....!சுமித்ரா அண்ணிக்கு ஒரு அண்ணன்தான்....!அவங்களுக்கே இவ்வளவு கிடைக்கதுன்னா....எனக்கு ரெண்டு அண்ணன்.....!எனக்கு எவ்வளவு கிடைக்கும்.....?",சிறு குழந்தை போல் குதூகலித்தபடி அவள் கூற..
"ம்...ரெண்டு அண்ணன் கிட்டே இருந்தும்....ரெண்டு அடி கிடைக்கும்....!",செல்லமாய் அவள் காதைப் பிடித்துத் திருகினான் ஆதித்யன்.
"ஓகே ப்பா....!அதுதான்....எல்லாமே சுபமா முடிஞ்சிடுச்சே.....!வந்து சைன் பண்ணிக் கொடுத்தீங்கன்னா....ரெஜிஸ்ட்ரேஷன் வேலைகளை ஆரம்பிச்சுடலாம்....!",வக்கீல் கூற கௌதமும்...ஆதித்யனும் சோபாவில் வந்து அமர்ந்தனர்.
பிறகு அவர்களிடம் வேண்டிய இடங்களில் கையெழுத்து வாங்கி விட்டு பத்திரங்களை எடுத்துக் கொண்டு வக்கீல் கிளம்பி விட...பெண்கள் மூவரும் சமைக்க விரைந்தனர்.
"அப்புறம் மச்சான்.....!எப்போ ஹனிமூன் கிளம்பறீங்க....?",ஆதித்யன் வினவ..
"ஹனிமூனுக்கு போகிற ஐடியா இல்லை டா....!அதெல்லாம் பிறகு பார்த்துக்கலாம்.....!",என்றான் கெளதம்.
"பிறகு பார்த்துக்கலாம்ன்னா எப்போ....?உனக்கு ரெண்டு குழந்தை பிறந்ததுக்கு அப்புறமா.....?கல்யாணமான புதுசுல போனாத்தான்....அது ஹனி மூன்...!இல்லைன்னா....அது ஃபேமிலி மூன் ஆகிடும்....!சுமித்ராவுக்கும் ஆசை இருக்கும்ல.....?ஒழுங்கா....என் தங்கச்சியைக் கூட்டிட்டு ஹனிமூன் கிளம்பற வழியைப் பாரு....!",ஆதித்யன் அதட்ட..
நண்பனிடம் எப்படிக் கூறுவது....?என்று தயங்கிக் கொண்டிருந்தான் கெளதம்.
"இல்லை டா....!",அவன் மென்று விழுங்கிக் கொண்டிருக்க..
ஆதித்யனோ..."எதுக்குடா இந்த முழி முழிச்சுக்கிட்டு இருக்க....?சுமித்ரா கூட ஏதாவது சண்டை போட்டியா....?நீ அமைதியாகவே இருக்க மாட்டியா.....?எதுக்கு அந்தப் பொண்ணை போட்டு இப்படி பிராண்டற.....?",சிறு அதட்டலுடன் வினவினான் ஆதித்யன்.
"ம்ப்ச்....!சண்டையெல்லாம் இல்லை டா....!நாங்கதான் திவ்யாவோட கல்யாணம் முடிஞ்ச பிறகு...எங்க வாழ்க்கையைத் தொடங்கலாம்ன்னு தள்ளிப் போட்டு இருக்கிறோம்....!",அமைதியான குரலில் உரைத்தான் கெளதம்.
அவன் கூறி முடித்த அடுத்த நொடி....ஆதித்யன் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்தான்.
"ஹா...ஹா...!மச்சான்....!ஹைய்யோ....!ஹா..ஹா...!",அவன் பாட்டிற்கு சிரித்துக் கொண்டிருக்க..
"வாயை மூடு டா....!இப்போ எதுக்கு பல்லை காண்பிக்கிற....?",சற்றுக் கடுப்புடன் வந்தன கௌதமின் வார்த்தைகள்.
"ஹையோ மச்சான்....!ஹா..ஹா...!தன் வினை தன்னைச் சுடும்.....!நீதானே எனக்கு சாபம் விட்ட....'பர்ஸ்ட் நைட் அன்னைக்கு உனக்கு எதுவும் நடக்காது...ன்னு....இப்போ பார்த்தியா...உன் நிலைமையை....!ஹா..ஹா....!",ஆதித்யன் மேலும் சிரிக்க ஆரம்பிக்க..
இங்கு கௌதமிற்கு வயிறெரிந்தது."வாயை மூடுடா கிராதகா....!உன்னுடைய கொள்ளிக் கண்ணுதான் எங்க மேல பட்டுடுச்சு.....!",சோபாவில் இருந்த தலையணையை எடுத்து அவனை மொத்த ஆரம்பித்தான் கெளதம்.
அவனது அடியில் இருந்து தப்பித்தவாறே,"சரி....சரி டா மச்சான்....!ஜோக்ஸ் அபார்ட்....உன் தங்கச்சிக்காக அவள் இவ்வளவு பெரிய முடிவு எடுத்திருக்கான்னா....அவள் உன்மேல எவ்வளவு காதல் வைச்சிருக்கணும்.....!யூ ஆர் லக்கி....அண்ட்....அந்தப் பொண்ணை நல்லா பார்த்துக்கிறது உன் கடமை....!",கனிவுடன் ஆதித்யன் கூற..
"ஷ்யூர் டா.....!",காதலாகக் கூறினான் கெளதம்.
இப்படியாக....அரட்டையிலும்...சிரிப்பிலும்..விளையாட்டிலும் அன்றைய தினம் கழிந்தது.
..................................................................................................................
நாட்கள் மிக அழகாகப் பறந்தன....!
திருமணத்திற்குப் பிறகான வாழ்க்கையை ரசித்து அனுபவித்தனர் கௌதமும்...சுமித்ராவும்....!காலையில் எழுந்து சமையல் செய்து....குளித்துக் கிளம்பி....இடையிடையே கௌதமின் சீண்டல்களையும்....காதல் விளையாட்டுகளையும் சமாளித்து....அவனையும் கிளப்பி விட்டு....திவ்யாவையும் கல்லூரிக்கு அனுப்பி விட்டு....கணவனும் மனைவியும் ஒன்றாக அலுவலகத்திற்கு கிளம்புவர்.
"வேலைக்கு வருவது உன் இஷ்டம்.....!",என்று கூறிவிட்டான் கெளதம்.
அவள்தான் வீட்டில் சும்மா இருப்பதற்கு போர் அடிக்கிறது என்று வேலைக்கு கிளம்பி விட்டாள்.
மாலை எப்பொழுதும் போல் சுமித்ரா வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பி விடுவாள்.இவள் வீட்டிற்கு வரும் போது....திவ்யாவும் கல்லூரி முடிந்து வந்து விடுவாள்.
திவ்யாவிடம் அரட்டையடித்தபடியே வீட்டை ஒதுக்குவது....பாத்திரங்களைத் துலக்குவது....அடுத்த நாளிற்குத் தேவையான காய்கறிகளை நறுக்கி வைப்பது....என் ஒவ்வொரு வேலையாக முடித்து விடுவாள் சுமித்ரா.
உதவிக்கு வரும் திவ்யாவை 'வேண்டாம்....!' என்று பிடிவாதமாக மறுத்து விடுவாள்.
"இவ்வளவு நாள் நீதானே செய்த....?இனி நான் செய்கிறேன்.....!நீ உட்கார்ந்து வேடிக்கைப் பாரு.....!அதுவும் இல்லாம....நாளைக்கு கல்யாணத்துக்குப் பிறகு போற இடத்துல நீதானே எல்லாத்தையும் செய்தாகணும்.....!அதுவரைக்கும்...அம்மா வீட்டில ஜாலியா ரெஸ்ட் எடு.....!",புன்னகை முகமாய் கூறியபடி மறுத்து விடுவாள்.
திவ்யாவிற்கு நெகிழ்ச்சியில் கண்ணீரே வந்து விடும்.தன்னை ஒரு குழந்தையைப் போல் பார்த்துக் கொள்ளும் சுமித்ராவின் பின்னாலேயே..."அண்ணி....!அண்ணி...!" என்று சுற்றிக் கொண்டிருப்பாள்.
கெளதம் கூட கிண்டல் செய்வான்."உங்க அண்ணி உன்னை மடியில படுக்க வைச்சு சோறு ஊட்டாதது ஒண்ணுதான் குறை.....!",கிண்டலாகக் கூறினாலும் அவன் பார்வை காதலுடன் மனைவியை வருடும்.அவனுக்கு சற்றும் குறையாத காதல் பார்வையை அவனை நோக்கி வீசி வைப்பாள் அவனுடைய காதல் கண்மணி....!
ஆதித்யன்....நித்திலாவைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை....!சிறு சிறு ஊடல்களும்....செல்ல செல்ல பிடிவாதங்களும்....குட்டி குட்டி மோதல்களும் அவர்களது காதலை அழகாக்கிக் கொண்டிருந்தன....!
அன்று....அமெரிக்க ப்ராஜெக்ட் சம்பந்தமான ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுவதற்காக....அமெரிக்க நிறுவனம் சார்பாக....மூன்று டைரக்டர்கள் சென்னை வந்திருந்தனர்.அவர்களை வரவேற்பதற்காக....ஆதித்யனும் நித்திலாவும் ஏர்போர்ட்டில் காத்திருந்தனர்.
"எங்கே ஆது....?இன்னும் அவங்களைக் காணோம்....?",தன் அருகில் அமர்ந்து மொபைலில் எதையோ முக்கியமான விஷயத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவனைப் பிராண்டிக் கொண்டே அமர்ந்திருந்தாள் நித்திலா.
"வந்திடுவாங்க பேபி....!ப்ளைட் டிலேன்னு இப்போத்தானே இன்ஃபார்ம் பண்ணினாங்க....!இன்னும் அரை மணி நேரத்துல வந்திடுவாங்க.....!",தன் மொபைலில் இருந்து பார்வையை உயர்த்தாமலேயே கூறினான் ஆதித்யன்.
சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்தவள்...மீண்டும் ஆரம்பித்தாள்.
"எப்போ ஆது அவங்க வருவாங்க....?எனக்குப் போரடிக்குது....!",அவன் கையை சுரண்டினாள் அவள்.
"ப்ச்....!வருவாங்க டி....!கொஞ்ச நேரம் அமைதியா உட்கார மாட்டியா.....?என்னைப் போட்டு நச்சரிச்சுக்கிட்டே இருக்க.....!",அவனே மொபைலில் தொழில் விஷயமாக எதையோ பார்த்துக் கொண்டிருந்தான்.அவனிடம் சென்று நச்சரித்தால்...அவன் என்ன செய்வான்....?
கிட்டத்தட்ட ஏர்போர்ட்டில் நுழைந்ததில் இருந்து அவள் இப்படித்தான் அவனை முரண்டிக் கொண்டே இருந்தாள்.அவ்வளவு நேரம் பொறுமையாக பதிலளித்துக் கொண்டிருந்தவன்....அப்பொழுதுதான் பொறுக்க முடியாமல்...சிறு அதட்டல் போட்டான்.உடனே....அவனுடைய செல்ல பேபிக்கு மூக்கு விடைத்து விட்டது....!
"போடா....!நீ மட்டும் வந்திருக்க வேண்டியதுதானே....?என்னை எதுக்கு இங்கே கூட்டிட்டு வந்து 'கொட்டு..கொட்டு..'ன்னு உட்கார வைச்சிருக்க....?என் மொபைலையும் ஆபிஸ்ல வைச்சிட்டு வந்துட்டேன்.....!நீயும் என்கூட பேசாம....மொபைலையே முறைச்சுக்கிட்டு உட்கார்ந்திருக்க.....!"படபடவென பொரிய ஆரம்பித்தாள் நித்திலா.
அவள் அப்படித்தான்.....!ஆதித்யன் அவளை சிறு அதட்டல் கூட போடக் கூடாது என்பாள்...!சிறிதாக அவன் முகத்தை சுளித்து விட்டால் போதும்....உதட்டைப் பிதுக்கிக் கொண்டு....மூக்கு விடைக்க....
முகத்தை தூக்கி வைத்துக் கொள்வாள்....!
"சரி...சரி...!என் பேபிக்கு கோபம் வந்துடுச்சா.....?ஒரு முக்கியமான விஷயம் பார்த்துட்டு இருந்தேன் பேபி....!",அவளை சமாதானப்படுத்தியபடியே போனை அணைத்தான் அவன்.
அவனுக்குத் தெரியும்.....!தன்னுடைய சிறு அதட்டலைக் கூட அவள் தாங்க மாட்டாள் என்று....!எனவே....முடிந்த அளவிற்கு பொறுமையாகத்தான் இருப்பான்....!ஆனால்....அவனது செல்ல குட்டிம்மா....இல்லாத அழிச்சாட்டியம் எல்லாம் செய்து....அவனது பொறுமைக்கு சோதனை வைத்துக் கொண்டே இருப்பாள்....!அப்படி இருந்தும் அவன் பொறுமையை இழுத்துப் பிடித்து அவளிடம் அமைதியாகத்தான் போவான்....!
தன் கண்ணசைவிலேயே எதிரிகளை மிரட்டி அரள வைக்கும் அந்த அராஜகக்காரன்....அந்த சிறு பெண்ணின் அழிச்சாட்டியத்திற்கு அடிபணிந்து பொறுமையை கடைபிடிப்பான்....!
"இப்பவே நீ என்னை இப்படி மிரட்டற....?என்னைக் கண்டுக்கவே மாட்டேங்கிற....?",சிறு பிள்ளையாய் அவள் குற்றம் சுமத்த..
"இல்லை டா குட்டிம்மா.....!அத்தான் ஏதோ தெரியாம பேசிட்டேன்....!ஸாரி டா...!",வித விதமாகப் பேசி அவளை சமாதானப்படுத்தினான் அவன்.
அப்பொழுதும் அவள் 'உம்'மென்று அமர்ந்திருக்கவும்...."இந்தா....!என் மொபைல்...!உனக்குப் பிடிச்ச ஆங்க்ரி பேர்ட்ஸ் கேம் விளையாடு.....!",என்று தன் மொபைலை நீட்டினான்.
இப்படித்தான் அவன்...அவளை சமாதானப்படுத்துவான்.....!சிறு குழந்தை போல் அவள் அடம்பிடிக்கும் போதெல்லாம்....இப்படித்தான் மொபைலை நீட்டுவான்.அவளும் சமர்த்தாய் தன் கோபத்தை தூக்கியெறிந்து விட்டு மொபைலை வாங்கி விளையாட ஆரம்பித்து விடுவாள்....!
அன்றும் எப்பொழுதும் போல் தன் கோபத்தை உதறி விட்டு,"ஹை....!தேங்க் யூ ஆது....!",என்று குதூகலித்தபடி விளையாட ஆரம்பித்து விட்டாள்.
அவன் ஆதித்யன்.....!மிகப் பெரும் தொழிலதிபன்....!ஒவ்வொரு நொடியையும் பணமாக்கும் வித்தகன்....!அப்படிப்பட்டவன்....தொழில் சம்பந்தமாய் பார்த்துக் கொண்டிருந்த வேலையை மூட்டைக் கட்டி வைத்து விட்டு....ஆங்க்ரி பேர்ட்ஸ் விளையாடுவதற்காக அவளிடம் தன் மொபைலைக் கொடுத்து விட்டு....கையைக் கட்டிக் கொண்டு அமைதியாய் உட்கார்ந்திருந்தான்....!
அவள் ஆங்க்ரி பேர்டில் மூழ்கியிருக்க...அவன்...அவளின் குழந்தைத் தனத்தில் லயித்திருக்க....ஒரு வழியாக...அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த விமானம் தரையிறங்கி விட்டதற்கான அறிவிப்பு வந்தது.
பயணிகள் ஒவ்வொருவறாக வெளியே வர ஆரம்பிக்க...அந்த மூவரையும் எதிர்பார்த்து ஆதித்யனும்...நித்திலாவும் எழுந்து நின்றனர்.
அமெரிக்க மண்ணிற்கே உரிய வெள்ளைத் தோலுடனும்....உயரத்துடனும்....நடுத்தர வயதில் இரு ஆண்களும்....ஆதித்யனின் வயதில் ஒரு வாலிபனும் இவர்களை நோக்கி வந்தனர்.
"ஹாய் யங் மேன்.....!ஐ ஆம் வின்ஸ்டன்....!",ஆர்பரிப்புடன் அந்த நடுத்தர வயதுக்காரர் ஆதித்யனுடன் கை குலுக்க..
"ஹலோ மிஸ்டர்.வின்ஸ்டன்...!ஐ ஆம் ஆதித்யன்....!",கம்பீரமாக கை குலுக்கினான் ஆதித்யன்.
"ஐ ஆம் ஜான்....!",மற்றொரு நடுத்தர வயதுக்காரர் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள..
"ஹாய்...!ஐ ஆம் ராபர்ட்....!",அந்த இளைஞனும் ஆதித்யனுடன் கை குலுக்கினான்.
"வெல்கம் டூ இந்தியா கைஸ்....!அண்ட்...திஸ் இஸ் நித்திலா.....!மை பெர்சனல் செக்ரெட்டரி.....!",தன்னருகில் நின்றிருந்த நித்திலாவை....ஆதித்யன் அறிமுகப்படுத்தி வைக்க..
"வாவ்....!பியூட்டி....!நைஸ் டூ மீட் யூ.....!",ராபர்ட் சற்று ஆர்வத்துடன் அவளிடம் கை குலுக்குவதற்காக கையை நீட்ட....அவன் விழிகளில் தெரிந்த அதீத ஆர்வத்தில் சற்று நிதானித்த நித்திலா..
"வணக்கம்....!",என்று கரம் குவித்தாள்.
"ஹோ....!டமில் கல்ச்சர்....!",அதற்கும் புன்னகைத்தபடியே....அவளைப் போலவே கரம் குவித்தவன்..."வானகம்....!",என்று திக்கித் திணறி உச்சரிக்க முயன்றான்.
முதலில் ராபர்ட்டின் ஆர்வத்தில் சற்று எரிச்சலடைந்த ஆதித்யன்...பிறகு நித்திலாவின் செய்கையில் தனக்குத் தானே புன்னகைத்துக் கொண்டான்.
அதன் பிறகான உரையாடல்கள் அங்கு ஆங்கிலத்தில் இருந்தாலும்...இங்கு தமிழில்....!
"ஓகே....!லெட்ஸ் கோ.....!உங்களுக்காக புக் பண்ணியிருக்க ரூம்க்கு போகலாம்....!பர்ஸ்ட்....நல்லா ரெஸ்ட் எடுங்க....!இன்னைக்கு ஈவ்னிங் பில்டிங்க்ஸை பார்க்க போகலாம்....!",என்றபடி தனது டிரைவருடன் அவர்களை ஒரு காரில் அனுப்பி வைத்தவன்...நித்திலாவுடன் தனது காரில் அவர்களைப் பின்தொடர்ந்தான்.
ஹோட்டலுக்குச் சென்று அவர்களுக்கான அறைகளைக் காட்டி விட்டுத்தான் கிளம்பினான் ஆதித்யன்.
"தி கிரேட் பிசினெஸ் மேன்....!இவ்வளவு தூரம் எங்களை வெல்கம் பண்ண வருவீங்கன்னு நினைக்கல....!",ஜான் கூற..
"எங்க ஊருக்கு வந்து இருக்கீங்க....!நாங்கதானே பார்த்துக்கணும்....!",சிறு முறுவலோடு கூறினான் ஆதித்யன்.
அன்று மட்டுமல்ல....!அவர்கள் அங்கு இருந்த ஐந்து நாட்களும் ஆதித்யனும் நித்திலாவும்....அவர்களுக்கு கட்டிடங்களை சுற்றிக் காண்பிப்பதில் இருந்து....உணவு உண்பது வரை அவர்களுடன்தான் செலவளித்தனர்.
ஒவ்வொரு முறை நித்திலாவைப் பார்க்கும் போதும்....ராபர்ட்,"பியூட்டி....பியூட்டி.....!",என்று அழைத்து ஆதித்யனின் வயிறை எரிய வைத்தான்.
அவளும் அவ்வப்போது அவனிடம் சிரித்துப் பேசி....ஆதித்யனின் காதில் புகை வர வைத்தாள்.
இந்த ஐந்து நாட்களில்....அனைவரும் ஒன்றாக சுத்தியதில்....ஆதித்யன் பார்த்து பார்த்து அவளைக் கவனித்துக் கொண்டதில் இருந்த காதலையும்....அக்கறையையும் அவர்கள் கண்டு கொண்டனர்.அவன் செய்த ஒவ்வொரு சின்ன விஷயத்திலும் அவள் மீதான அக்கறை புலப்பட்டது.
ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்து இட்டு விட்டு புறப்படும் போது..."கங்கிராட்ஸ் மேன்.....!உங்க அழகான காதலுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள்...!லவ்லி கப்புள்....!",என்று பாராட்டி விட்டுத்தான் விமானம் ஏறினர்.
*******************
ஆதித்யனின் கார் கோவை செல்லும் நெடுஞ்சாலையில் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது.
"நீ இல்லாம நாலு நாள்....நான் எப்படி டி இருப்பேன்.....?",அதோடு பதினெட்டாவது முறையாக நித்திலாவைப் பார்த்து அந்தக் கேள்வியை கேட்டு வைத்தான் ஆதித்யன்.
"நாலு நாள்தானே ஆது....!கண்ணை மூடி கண்ணைத் திறக்கறதுக்குள்ள அந்த நாலு நாள் ஓடிப் போயிடும்....!",அவளும் பத்தொன்பதாவது முறையாக அதே பதிலைக் கூறினாள்.
நந்தினிக்குத் திருமணம் நிச்சயமாகியிருந்தது...!இன்னும் இரண்டு நாட்களில் கோவையில் அவளுக்குத் திருமணம்.அதில் கலந்து கொள்வதற்காக 'லீவ் வேண்டும்....!' என்று கேட்டவளிடம்....வழக்கம் போல் விடுமுறை அளிக்க மறுத்தான் ஆதித்யன்.அவனிடம் கெஞ்சி....கொஞ்சி...அதட்டி...உருட்டி ஒருவழியாக நான்கு நாட்கள் விடுமுறை வாங்கியிருந்தாள்...!
அதுவும்....'கோவை வரைக்கும் நான்தான் கொண்டு வந்து விடுவேன்....!' என்ற ஆதித்யனின் கண்டிஷனோடு.இதோ...இப்பொழுது கோவைப் பயணம் ஆரம்பமாகியிருந்தது.
"நாளை மறுநாள் தானே கல்யாணம்....!கல்யாணத்தைன்னைக்கு....காலையில போய் நின்னா ஆகாதா....?நானே உன்னைக் கொண்டு போய் விடறேன்....!ஓகே வா....?இப்போ...சென்னைக்கே காரைத் திருப்பட்டா.....?",ஆர்வமுடன் வினவினான் ஆதித்யன்.
"ஷ்.....!ஆது....!எதுக்கு இப்படி பிடிவாதம் பிடிக்கறீங்க....?நாலே நாள்....நீங்க என்னை நினைச்சுக்கிட்டே இருப்பீங்களாம்.....!நான்...நந்துவுடைய கல்யாணத்தை முடிச்சிட்டு ஓடி வந்திடுவேனாம்.....!சரியா....?",
"ம்ஹூம்....!நீ போக வேண்டாம்.....!",பிடிவாதமாகத் தலையாட்டியபடி சாலையோர மர நிழலில் காரை நிறுத்தி விட்டான் ஆதித்யன்.
'இதென்னடா வம்பா போச்சு....!ரெண்டு நாளா போராடி...நாக்கு வரள கத்தி...பெர்மிஷன் வாங்கி வைச்சிருக்கிறேன்....!இப்போ என்னடான்னா...வேதாளம் முருங்கை மரம் ஏறின மாதிரி....மறுபடியும் மரத்து மேல ஏறி உட்கார்ந்திருக்காரே....!' தனக்குள் புலம்பியபடியே அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
அவன்....தன் உதடுகளை அழுந்த மூடியிருந்த விதமே அவனுடைய பிடிவாதத்தை பறைசாற்றியது....!தலைமுடி கலைந்து....நெற்றியில் படிந்திருக்க...புருவம் சுருங்க சாலையை வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தான் ஆதித்யன்.
"ஆது.....!",அவள் அழைக்க..
"...............",அப்படியே அமர்ந்திருந்தான் அவன்.
"என் செல்ல நாய்க்குட்டிக்கு என்ன பிடிவாதம்....?",அவன் முகவாயைப் பற்றி அவள் தன்னை நோக்கித் திருப்ப..
"ம்ப்ச்....!",சலித்தபடி அவள் கையைத் தட்டி விட்டவன் மீண்டும் சாலையை வெறிக்க ஆரம்பித்தான்.
அவனைப் பார்க்கும் பொழுது....அவளுக்கு ஒரு முரட்டுக் குழந்தையைப் பார்ப்பது போல்தான் இருந்தது.
'சரியான அராஜகக்காரன்....!என்னை ஊருக்கு அனுப்பறதுக்கு...எவ்வளவு பிடிவாதம் பிடிக்கிறான் பாரு....!' செல்லமாக மனதிற்குள் திட்டிக் கொண்டவள்..
அவனை நெருங்கி அமர்ந்து....அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.
"ஆது.....!",அவள் மெதுவாக அழைக்க..
"போடி....!",முறைத்துக் கொண்டான் அவன்.
"நான்...நந்துவுடைய கல்யாணத்துக்காக மட்டும் ஊருக்கு போகலை....!நம்ம கல்யாணத்தைப் பத்தி பேசறதுக்காகவும்தான் போறேன்....!",
இந்த விஷயம் அவனுக்குப் புதிது....!எனவே...தனது பிடிவாதத்தை சிறிது தளர்த்தியவனாய்.."என்னடி சொல்ற....?",என்றான்.
"ம்...நம்ம விஷயத்தைப் பத்தி அம்மா...அப்பாக்கிட்ட சொல்லிடலாம்ன்னு இருக்கேன்....!இன்னும் எவ்வளவு நாள்தான் மறைக்கிறது.....?நான் வரும் போது ஒரு முடிவோடுதான் வருவேன்....!",
அவள் கூறவும்...பட்டென்று அவளை நிமிர்ந்து பார்த்தவன்,"நீ மட்டும் தனியா இந்த நிலைமையை ஃபேஸ் பண்ண வேண்டாம்....!நானும் உன்கூட வர்றேன்....!உன் பேரண்ட்ஸ்கிட்ட நான் பேசறேன்....!",அவனது ஆண்மையின் தைரியத்தில் அவளது மனம் கர்வம் கொண்டது.
'இவன் என்னுடையவன்....!எந்த சூழ்நிலையிலும் என்னைத் தனியாக விட மாட்டான்....!',அவன் காதல் தந்த பெருமையோடு அவனை நோக்கியவள்,"வேண்டாம் ஆது....!" என்று மறுத்தாள்.
அவளது மறுத்தலில்...அவனுக்கு கோபம் வந்தது.
"ஏன்....?",கூர்மையான பார்வையுடன் உறுமினான்.
அந்த உரிமையான கோபத்திலும்....அவளின் கன்னி மனது தொலைந்துதான் போனது...!
அவனது மீசையைப் பிடித்துத் தன் இரு கைகளாலும் செல்லமாக இழுத்தவள்,"ஷப்பா...!உடனே துளைக்கிற பார்வையை பார்க்க ஆரம்பிச்சிடுவீங்களே....?நான் எதுக்கு சொல்றேன்னா...நான் காதலிக்கிற விஷயமே என் அம்மா அப்பாவுக்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கும்....!இதுல....நீங்களும் வந்து அவங்க முன்னாடி நின்னா...அவங்களுக்கு ஒரு மாதிரி இருக்கும்....!நம்ம விஷயம் என் மூலமா தெரிய வர்றதுதான் சரி....!",பொறுமையாக எடுத்துக் கூறினாள் அவள்.
"அவங்களுக்கு ஒரு மாதிரி இருக்குமா....?இல்ல....உனக்கா.....?",மீண்டும் அதே துளைக்கும் பார்வை.
அவனது கேள்வியில் அவள் தன் உதட்டைக் கடித்துக் கொண்டாள்.
உண்மைதானே....!என்னதான் அவனுடைய காதலில் சுகமாய் மூழ்கிப் போனாலும்....அவள் மனதின் ஒரு மூலையில் அரித்துக் கொண்டிருக்கும் குற்றவுணர்வை அவளால் தடுக்க முடியவில்லையே....!
"ப்ளீஸ் ஆது....!இந்த விஷயத்தை என் போக்கில் விட்டுருங்களேன்....!",அவள் பார்வையில் தெரிந்த இறைஞ்சலில்....அவன் தன் பிடிவாதத்தைக் கைவிட்டான்.
"சரி....!உன் இஷ்டம்....!ஆனால்...ஒண்ணை மட்டும் நல்லா ஞாபகம் வைச்சுக்கோ....!உன்னை....உனக்காக கூட விட்டுத் தர நான் தயாரா இல்ல....!அண்டர்ஸ்டாண்ட்......?",அவள் விழிகளுக்குள் ஆழப் பார்வை பார்த்தப்படி அழுத்தமான குரலில் உரைத்தவன் காரை கிளப்பினான்.
ஒருவேளை....அதுதான் அவன் செய்த தவறோ.....?அவள் இஷ்டம் என்று விட்டுக் கொடுக்காமல்....எப்பொழுதும் போல் பிடிவாதமாக இருந்திருக்க வேண்டுமோ....?காதலின் விளையாட்டை யார்தான் அறிவார்....?
அவனுடைய அந்தக் குரலில்....எப்பொழுதும் போல் அப்பொழுதும் நித்திலாவின் அடிவயிறு ஜில்லிடத்தான் செய்தது.ஆனால்....அந்த பயத்தையும் காதல் கொண்ட மனம் வரவேற்றதுதான் விந்தையிலும் விந்தை.....!
சிறிது நேர அமைதிக்குப் பிறகு...அவளே ஆரம்பித்தாள்.
"இப்போ எதுக்கு 'உம்'முன்னு முகத்தை வைச்சிருக்கீங்க....?",அவனது விலகலைத் தாங்க முடியாமல் எரிந்து விழுந்தாள் அவள்.
"என் முகம்....நான் 'உம்'முன்னு வைச்சிருக்கிறேன்....!உனக்கென்னடி வந்துச்சு.....?",வள்ளென்று கடித்தான் அவன்.
அவளைப் பிரிந்து நான்கு நாட்கள் இருக்க வேண்டுமே...என்ற கடுப்பு அவனுக்கு....!
"நான் மட்டும் உங்களைப் பிரிஞ்சு சந்தோஷமாகவா இருக்கப் போகிறேன்....?உங்களுடைய பிரிவு எனக்கும்தான் வேதனையைத் தரும்....!அதைப் புரிஞ்சுக்காம....இப்படி முகத்தை தூக்கி வைச்சுக்கிட்டு....என்மேல எரிஞ்சு விழறீங்க.....?நானும்தான் உங்களைக் காதலிக்கிறேன் ஆது....!உங்க மீதான என்னுடைய தேடலும் அதிகமானதுதான்.....!",குரல் கமற...கூறியவளின் விழிகளில் கண்ணீர் அணைகட்டி நின்றது.
அவளது கண்ணீரைப் பார்த்தவன்....தன் தவறை உணர்ந்தவனாய் மானசீகமாகத் தன் தலையில் கொட்டியபடி காரை நிறுத்தினான்.
'ச்சே....!அவளுக்கும்தானே வருத்தம் இருக்கும்....!அதைப் புரிஞ்சுக்காம....ரொம்பவும் அவளைப் படுத்தறோம்.....!',தன்னைத் தானே திட்டிக் கொண்டான்.
"ஸாரி டி....!உன்னைப் பிரிந்து இருக்கணும்ங்கிற ஒரு கோபத்துலதான் இப்படி நடந்துக்கிட்டேன்....!",மன்னிப்பு கேட்டபடியே அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.
அவனது மார்பில் பூனைக் குட்டியாய் சுருண்டு கொண்டவள்....மேலும் அழ ஆரம்பித்தாள்.
"போடா....!நானும்தான் உன்னை ரொம்பவும் மிஸ் பண்ணுவேன்....!",மூக்கை உறிஞ்சினாள் அவள்.
"எனக்குத் தெரியும் டா பேபி....!என் குட்டிம்மா என்னை விட்டுட்டு இருக்க மாட்டாங்க....!",
"தெரியுதில்ல....?அப்புறம் எதுக்கு இப்படி கோபமா இருக்க....?",
"இல்லையே.....!உன் அத்தானுக்கு கோபம் இல்லையே.....!நீ ஜாலியா ஊருக்குப் போய் உன் பிரெண்ட் கல்யாணத்தை அட்டெண்ட் பண்ணிட்டு வா....!சரியா....?",தன் மார்பில் இருந்து அவள் முகத்தை நிமிர்த்தியவன்....சிறுகுழந்தை போல் தேம்பிக் கொண்டிருந்தவளின் கண்ணீரைத் துடைத்து விட்டு....நெற்றிப் பொட்டில் முத்தம் பதித்தான்.
அவனது தோளில் சாய்ந்து அவளும்...அவளது உச்சி வகிட்டில் தாடையைப் பதித்து அவனும்....வெகுநேரம் அமைதியாய் அமர்ந்திருந்தனர்.இருவருமே அந்த ஏகாந்தமான அமைதியைக் கலைக்க விரும்பவில்லை.
கோவையில் அவளது வீடு இருக்கும் தெருவில் அவளை இறக்கி விட்டவன்....சில பல அணைப்புகளுடனும்....செல்ல செல்ல கொஞ்சல்களுடனும் அவளை வழியனுப்பி வைத்தான்.
...............................................................................................................
திருமணத்திற்கு முதல் நாளே நித்திலா....நந்தினியின் வீட்டிற்கு சென்று விட்டாள்.முகம் முழுக்க புன்னகையுடனும்....கல்யாணப் பெண்ணிற்கே உரிய கனவுகளுடனும்.....கன்னம் இரண்டும் போட்டி போட்டுக் கொண்டு வெட்கச் சிவப்பில் மிளிர்ந்து கொண்டிருக்க....வளைய வந்த தோழியைப் பார்ப்பதற்கு நித்திலாவிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.
வேண்டுமென்ற அளவிற்கு நந்தினியை கலாய்த்து தள்ளி விட்டாள்.அந்த திருமண வீட்டின் பரபரப்பையும்....தோழியின் வெட்கப் புன்னகையையும் பார்க்கும் போது....ஏனோ நித்திலாவிற்கு ஆதித்யனின் ஞாபகம்தான் வந்தது.
'எனக்கும்... ஆதுவுக்கும் இப்படித்தான் கல்யாணம் நடக்கும்....!',அவள் விழிகளிலும் கனவுகள் விரிந்தன.சென்ற முறை....அவள் கோவை வந்திருந்த போது....ஆதித்யன்தான் அவளுக்கு அடிக்கடி போன் செய்து தொல்லை பண்ணிக் கொண்டிருந்தான்.ஆனால்...இம்முறை நொடிக்கு பத்து தடவை இவள்....அவனுக்கு அழைத்தாள்.
"என் குட்டிம்மாவுக்கு என்னாச்சு.....?அடிக்கடி போன் பண்ணிக்கிட்டே இருக்காங்க....!",அவன் கொஞ்ச..
"ம்ம்...உன் குட்டிம்மாவுக்கு என்னென்னமோ ஆச்சு.....!",சிறு குழந்தையாய் பிதற்றினாள் அவள்.
"அடடா....!இன்னும் மூணு நாள்தான் இருக்கு....!இன்னையில் இருந்து நாலாவது நாள் என் பேபி....அத்தான் முன்னாடி இருப்பாங்க....!ஒகே வா....?",
"ம்ஹீம்....!எனக்கு இப்பவே நீ வேணும்.....!",செல்லமாக சிணுங்கினாள் அவனது குட்டி ராட்சசி.
எப்பொழுதும் அவன்தான்....அவளிடம் இப்படி அடம்பிடிப்பான்.இன்றோ....அவள் அடம்பிடித்தாள்.
சன்னமாக சிரித்துக் கொண்டவன்,"என் செல்ல குட்டிமால்ல.....!இன்னும் மூணே நாள்தான்....!சமர்த்துப் பொண்ணா அங்கேயே இருப்பாங்களாம்....!அத்தான் சொன்னால் கேட்டுக்குவாங்கல்ல.....!",கெஞ்சிக் கொஞ்சி மிஞ்சி சமாதானப்படுத்தினான் அந்த அழகிய காதலன்.
ஒருவழியாக அவளை சமாதானப்படுத்தி போனை வைப்பதற்குள் ஆதித்யனுக்கு போதும் போதும் என்றாகி விட்டது.போனை அணைத்தவன்...'என் குட்டி பேபி....!' என்று மனதிற்குள் கொஞ்சிக் கொண்டே....தனது வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தான்.
நந்தினியின் திருமணம் மிக அழகாக நடந்தேறியது.மணப்பெண் தோழியாக நித்திலாதான் இருந்தாள்.அவ்வப்போது நந்தினியைக் கிண்டலடித்துக் கொண்டும்....திருமணத்திற்க்கு வந்திருந்த தோழிகளுடன் அரட்டையடித்துக் கொண்டும்....நேரம் மிக அழகாகக் கரைந்து கொண்டிருந்தது.
திருமணம் முடிந்ததும் மணமக்களை....மாப்பிள்ளையின் சொந்த ஊரில் இருக்கும் குலதெய்வக் கோவிலுக்கு அழைத்துச் சென்று விட....நித்திலா கிளம்பி தங்கள் வீட்டிற்கு வந்து விட்டாள்.
நித்திலாவின் சொந்தத்தில் ஒருவருக்குத் திருமணம் என்பதால்....அவளது பெற்றோர்கள் அங்கு சென்று விட்டு அப்பொழுதுதான் வீடு திரும்பியிருந்தனர்.
"என்னம்மா நித்தி....கல்யாணமா நல்லபடியா முடிஞ்சுதா....?",கிருஷ்ணன் விசாரிக்க..
"ம்....அதெல்லாம் ஒரு குறையும் இல்லைப்பா.....!நம்ம நந்து பொதுவாகவே வாயாடி....!இன்னைக்கு என்னடான்னா....குனிஞ்ச தலை நிமிராம மணமேடையில் உட்கார்ந்திருந்தாள் ப்பா....!",ஆச்சரியத்துடன் கூறியபடியே தந்தையின் அருகில் சோபாவில் 'பொத்'தென்று அமர்ந்தாள் நித்திலா.
"கல்யாணப் பொண்ணுன்னா...அப்படித்தான் இருக்கணும்.....!பின்ன பரக்கா வெட்டியாட்ட சிரிச்சுக்கிட்டா நிற்பாங்க....!",மகளிடம் கூறியபடியே கையில் சுடச்சுட காபி டம்ளரோடு வந்தார் மீனாட்சி.
"வாவ்....!காபி....!மை ஸ்வீட் மம்மி....!நந்துவுடைய வீட்டுக்குப் போனதில் இருந்து சரியான தூக்கமே இல்ல.....!ஸ்ட்ராங்கா ஒரு காபியை குடிச்சிட்டு நல்லா படுத்து தூங்கணும்ன்னு நினைச்சுக்கிட்டு வந்தேன்.....!கொடுங்க....!கொடுங்க....!"ஆர்வமுடன் காபியை வாங்கிப் பருகினாள் நித்திலா.
"உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா....?அதுதான்...நீ வந்ததை பார்த்த உடனே காபி கலக்க ஆரம்பிச்சுட்டேன்....!",ஆதுரத்துடன் மீனாட்சி கூற...வாஞ்சையுடன் மகளின் தலையைப் பிடித்து விட்டார் மீனாட்சி.
'என்னைப் பத்தி உங்களுக்குத் தெரியாத சில விஷயங்களும் எனக்குள்ள இருக்குதும்மா....!' மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் நித்திலா.
யோசனையுடன் அமர்ந்து விட்டவளைப் பார்த்த கிருஷ்ணன்,"காபி குடிச்சிட்டா போய் படுத்து தூங்கு டா....!",இதமாக வினவ..
"ம்ம்....!",முணுமுணுத்தபடியே தனது அறைக்குள் வந்தவள்...முதல் வேலையாக ஆதித்யனுக்குத்தான் அழைத்தாள்.
"ஆது....!",அவள் குரலில் இருந்த அலைப்புறுதலை அவன் கண்டு கொண்டான்.
தாயின் மடி தேடும் கன்றாய்....அவனது மடி தேடி அழைத்தவளின் குரலில்....அவன்....அவனையும் அறியாமல்,"குட்டிம்மா....!" என்று விளித்திருந்தான் காதலாக.
அவன் அப்பொழுது முக்கியமான மீட்டிங்கில் இருந்தான்.தொழிலதிபர்களுக்கான மீட்டிங் அது....!அந்த மீட்டிங் ஹாலில் போடப்பட்டிருந்த நீண்ட டேபிளின் இருபுறமும்....பல தொழிலதிபர்கள் அமர்ந்திருக்க....அந்த டேபிளின் நடு நாயகமாக போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தான் ஆதித்யன்.
நித்திலாவின் அழைப்பை அவன் ஒருபோதுமே புறக்கணித்ததில்லை.எந்த ஒரு முக்கியமான மீட்டிங்கில் இருந்தாலும்...அவள் போன் காலை அட்டெண்ட் செய்து..'மீட்டிங்கில் இருக்கிறேன் பேபி....!அப்புறம் கூப்பிடறேன்....!',என்று விபரம் கூறிவிட்டுத்தான் போனை அணைப்பான்.
அன்றும் அந்த எண்ணத்துடன்தான் மொபைலைக் காதில் வைத்தவன் செவியில்,"ஆது....!",என்ற அவளின் குரல் அலைப்புறுதலோடு ஒலிக்கவும்....அவன்....அவனையும் அறியாமல்,"குட்டிம்மா....!",என்று விளித்து விட்டான்.
அமர்ந்திருந்த அத்தனை தொழிலதிபர்களும் ஆச்சரியத்தோடு நிமிர்ந்து ஆதித்யனைப் பார்த்தனர்.அவர்கள் அனைவரும் அறிந்த ஆதித்யன் வேறு விதமானவன்....!அவன் கண்டிப்பானவன்....!தொழில் உலகின் சாம்ராஜ்யபதி....!அவன் மீட்டிங்கில் போனை அட்டெண்ட் செய்வது என்பதே பெரிய விஷயம்....!அதிலும்....'குட்டிம்மா.....!' என்ற அவனது காதல் விளிப்பும்....அவன் கண்களில் தெரிந்த கனிவும் அவர்களுக்குப் புதிதிலும் புதிதானது....!
ஆதித்யனுக்கு அருகில் முதலாவதாக அமர்ந்திருந்த கெளதம்....யாரும் அறியாமல் நண்பனின் கையை அழுத்திப் பிடிக்க....அதில் தன்னை சுதாரித்துக் கொண்டவன்...."எக்ஸ்க்யூஸ் மீ ஜென்டில்மென்....!",என்று மன்னிப்பு கேட்டபடி வெளியேறி விட்டான்.
"ஆது....!",போனிலேயே அவள் தேம்ப ஆரம்பிக்க..
"பேபி....!என்னாச்சு டா....?எதுக்கு அழற.....?",பதட்டத்துடன் சமாதானப்படுத்தினான் அவன்.
"ஆது.....!எனக்கு பயமா இருக்கு....!",,
"எதுக்குடா பயம்....?நம்ம விஷயத்தை உன் பேரண்ட்ஸ்கிட்ட சொல்லிட்டியா....?அவங்க ஏதாவது திட்டினாங்களா....?",
"இல்ல ஆது...!இன்னும் சொல்லல....!அவங்ககிட்ட சொல்றதுக்கே எனக்குப் பயமா இருக்கு...!ஒரு மாதிரி குற்றவுணர்வா இருக்கு அத்தான்....!",தன் மனதை மறைக்காமல் அவனிடம் புலம்பினாள் நித்திலா.
அவள் மனது எந்தளவிற்கு சஞ்சலமடைந்திருக்கிறது என்பதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.
அவள்...அவனை மிகவும் தேடும் சமயங்களில் மட்டும்தான் 'அத்தான்...' என்று அழைப்பாள்.
அவள் மனதைப் புரிந்து கொண்டவனாய்,"நான் கிளம்பி அங்கே வர்றேன் பேபி....!நாம ரெண்டு பேரும் சேர்ந்தே உன் பேரண்ட்ஸ்கிட்ட பேசலாம்....!",உறுதியான குரலில் கூறினான்.
"இல்லல்ல....!வேண்டாம்....!",அவசர அவசரமாக மறுத்தாள் அவள்.
"ப்ச்....!ஏண்டி....?",அவனது கோபத்தில் அவள் அமைதி காத்தாள்.
சில நொடிகள் இருவருமே பேசவில்லை.ஒரு சீறலான மூச்சுடன் ஆதித்யன்தான் ஆரம்பித்தான்.
"சரி....!நான் வரல...!நீ பயப்படாம...அமைதியா உன் பேரண்ட்ஸ்கிட்ட பேசு....!என்ன நடந்தாலும்...நான் உனக்குத் துணையா இருக்கேன் பேபி...!இதை நீ மறக்கக் கூடாது....!",
"ம்...!",
"பயப்படக் கூடாது.....!",
"ம்....!",
"என்ன நடந்தாலும் சரி...நான் பார்த்துக்குவேன்....!",
"ம்....!",
"நாளைக்கு காலையில கிளம்பிடுவதானே.....?உங்க ஊர் பஸ் ஸ்டாண்ட்ல வெயிட் பண்ணு....!நான் வந்து கூட்டிட்டு வர்றேன்.....!",
"வேண்டாம்.....!உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்....!நானே வந்திடறேன்.....!",
"எனக்கு எந்த சிரமமும் இல்ல....!ஒரு வேலையா உங்க ஊருக்கு வர வேண்டி இருக்கு....!நாளைக்கு காலையில பதினோரு மணிக்கு நான் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்.....!",அழுத்தமாகக் கூறி அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டான்.
சிறிது நேரம் அவளிடம் குறும்பாக பேசி அவளது மனநிலையை மாற்றிவிட்டுத்தான் போனை வைத்தான் ஆதித்யன்.அவனிடம் பேசிய பிறகு சற்று இலகுவான மனநிலையோடு படுத்து நன்கு உறங்கினாள்.
அவள் கண் விழித்த போது....மாலை ஆகியிருந்தது.எழுந்து குளியலறைக்குச் சென்று முகம் கழுவி வந்தவள்....பத்து நிமிடம் கண்களை மூடி அமைதியாக அமர்ந்திருந்தாள்.ஆதித்யனின் முகத்தை தன் மனக்கண்ணில் கொண்டு வந்தவள்....அவனுடைய காதலை தனக்குள் நிரப்பிக் கொண்டாள்.
'முருகா....!என் அம்மா அப்பாக்கிட்ட என் காதலை சொல்லப் போறேன்....!நீதான் எனக்குத் துணையா இருக்கணும்.....!',மனமுருகி வேண்டியவள்....ஒரு முடிவோடு எழுந்தாள்.
சரியாக அந்த நேரம் வெளியே ஹாலில்,"என்னப்பா தம்பி....!வீட்டில எல்லோரும் இருக்கீங்களா....?",நித்திலாவின் பெரியம்மா கனகத்தின் குரல் கேட்டது.
"வாங்க அண்ணி....!வாங்க அக்கா....!",கிருஷ்ணனும்...மீனாட்சியும் அவரை வரவேற்கும் ஒலி கேட்டது.
'ஹைய்யோ.....!இந்தப் பெரியம்மா எதுக்கு இப்போ வந்திருக்கு....?நானே ஒருவழியா தைரியத்தை திரட்டி...அவங்ககிட்ட சொல்லிடலாம்ன்னு நினைச்சேன்....!இனி...இவங்க போன பிறகுதான் பேச முடியும்....!',சோர்வோடு கட்டிலில் விழுந்தவளின் காதில் வெளியே நடக்கும் உரையாடல்கள் வந்து விழுந்தன.
"வீட்டில் எல்லோரும் சௌக்கியமா அண்ணி....?அண்ணா எப்படி இருக்காங்க....?",கிருஷ்ணன் விசாரிக்க..
"ம்ம்...எல்லோரும் நல்லாயிருக்காங்க....!எங்கே உன் பொண்ணு நித்திலாவைக் காணோம்....?",வீட்டைக் கண்களால் துளாவியபடியே வினவியவருக்கு..
"அவள் பிரெண்டோட கல்யாணத்துக்கு போய்ட்டு வந்த அலுப்புல தூங்கிக்கிட்டு இருக்கா அக்கா....!நான் உங்களுக்கு காபி போட்டு எடுத்துட்டு வர்றேன்....!",என்றபடி சமையலறைக்குள் செல்ல முயன்ற மீனாட்சியைத் தடுத்தவர்..
"காபியெல்லாம் வேண்டாம்....!இப்படி வந்து உட்கார்....!உங்க ரெண்டு பேர்க்கிட்டேயும் கொஞ்சம் பேசணும்....!",என்றார்.
மீனாட்சிக்கு 'பக்'கென்று ஆனது.'அய்யோ....!இந்த அம்மா பேசினாலே...ஏதாவது வில்லங்கமாகத்தானே இருக்கும்....!',மனதிற்குள் பயந்தபடியே அமர்ந்தார்.
உள்ளே அமர்ந்திருந்த நித்திலாவும்,'அப்படி என்னதான் பேசப் போகுது....?பீடிகை எல்லாம் பலமா இருக்கு....!',யோசித்தபடியே காதைத் தீட்டிக் கொண்டு...அவர் பேசுவதை கவனிக்க ஆரம்பித்தாள்.
"நித்திலாவுக்கு எப்போ கல்யாணம் பண்ணலாம்ன்னு இருக்கீங்க....?மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டீங்களா....?",மெதுவாக பேச்சுக் கொடுத்தார்.
"உங்களுக்கெல்லாம் சொல்லாம பார்க்க ஆரம்பிக்க மாட்டோம் அண்ணி.....!அவள் வேலைக்கு வேற போய்க்கிட்டு இருக்கிறாள்....!இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்....!",பிடி கொடுக்காமல் நழுவ பார்த்தார் கிருஷ்ணன்.
இன்னும் நாலைந்து மாதங்கள் கடந்த பிறகு மகளின் திருமணப் பேச்சை ஆரம்பிக்கலாம் என்பது அவருடைய எண்ணமாக இருந்தது.
"நீ இப்படியே தள்ளிப் போட்டுக்கிட்டே இரு....!அங்கே சென்னையில உன் பொண்ணு என்ன பண்ணிக்கிட்டு இருக்கிறாள் தெரியுமா....?",கனகம் நீட்டி முழக்க..
கேட்டுக் கொண்டிருந்த நித்திலாவிற்கு அடிவயிறு பிசைந்தது.'ஒருவேளை....இந்தப் பெரியம்மாவுக்கு விஷயம் தெரிஞ்சிருக்குமோ....?கடவுளே...!',நகத்தைக் கடித்துத் துப்பியபடி அமர்ந்திருந்தாள்.
"என்ன அண்ணி....?என் பொண்ணு சென்னையில வேலை பார்த்துக்கிட்டு இருக்கா....!இதுல என்ன இருக்கு....?",கனகத்தின் பேச்சைக் கேட்டு முகம் சுளித்தவாறு கூறினார் கிருஷ்ணன்.
"ம்க்கும்....!நீதான் நினைச்சுக்கிட்டு இருக்கணும்....!உன் பொண்ணு வேலை பார்க்கிறான்னு....!அவ அங்க என்ன வேலை பார்த்துக்கிட்டு இருக்கா தெரியுமா....?",
மகளைப் பற்றி பேசவும்...கேட்டுக் கொண்டிருந்த மீனாட்சிக்கு கோபமாக வந்தது.
"எதுக்கு அக்கா இப்படி நீட்டி முழக்கறீங்க.....?என் பொண்ணு சென்னையில ஆபிஸ் வேலைதான் பார்க்கிறாள்....!போதுமா....?",சற்று காரமாகவே திருப்பிக் கொடுத்தார் மீனாட்சி.
"ஆமா...!ஆமா....!நீங்க ரெண்டு பேரும்தான் உங்க பொண்ணை மெச்சிக்கணும்....!ஏன் தம்பி....அவளை சென்னைக்கு அனுப்பும் போதே..'வேண்டாம்'ன்னு நான் தடுத்தேன்....!என் பேச்சை நீ கேட்டாத்தானே....?'என் பொண்ணு மேல எனக்கு நம்பிக்கை இருக்கு...'ன்னு பெரிசா பேசி அனுப்பி வைச்ச.....!இப்போ பாரு....!நாமதான் கிடந்து தவிக்க வேண்டியதா இருக்கு....!",மனதில் வன்மத்தை வைத்துக் கொண்டு கொட்டித் தீர்த்தார்.
நித்திலாவின் நிலைமையைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை...!இதயம் துடிக்கும் துடிப்பு அவளது காதில் விழுந்தது.எங்கே கையை எடுத்தால் இதயம் வந்து வெளியே விழுந்து விடுமோ....?என்ற அச்சத்தில் நெஞ்சை அழுத்திக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
கிருஷ்ணனுக்கும்....மீனாட்சிக்கும் சுத்தமாக இந்தப் பேச்சு பிடிக்கவில்லை என்பதை அவர்களது சுளித்த முகங்களே கூறியது.
"அன்னைக்கு சொன்னதையேதான் இப்பவும் சொல்றேன் அண்ணி.....!என் பொண்ணு மேல எனக்கு நம்பிக்கை இருக்கு....!என் நம்பிக்கைக்கு குறைவு வர்ற மாதிரி அவள் நடந்துக்க மாட்டாள்....!",ஆணித்தரமாக கூறியவரின் வார்த்தைகளில்...அவர்...தன் மகளின் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை பளிச்சிட்டது.
தன் தந்தையின் வார்த்தைகளில் கண்களை மூடிக் கொண்டு மௌனமாகக் கண்ணீர் வடித்தாள் நித்திலா.
'இல்லைப்பா....!உங்க நம்பிக்கையை நான் காப்பாற்றலை....!',அவள் மனம் மருகித் தவித்தது.
"ம்க்கும்....!",நொடித்தவாறே கிருஷ்ணனை ஏறிட்ட கனகம்,"உன் பொண்ணு உன் நம்பிக்கையை கொன்னுட்டா தம்பி....!அங்கே சென்னையில ஒரு பையன் கூட சுத்திக்கிட்டு இருக்கிறாளாம்....!நம்ம சதாசிவம் இருக்கிறானல்ல...அதுதான் உனக்குக் கூட கொழுந்தன் முறை ஆகுதே....!அவன் ஒரு வாரத்துக்கு முன்னாடி சென்னைப் பக்கம் போனானாம்....!அப்போ...உன் பொண்ணை ஒரு பையன் கூட பார்த்திருக்கான்....!அதுவும் நெருக்கமா....!",அவர் கூறிக் கொண்டே போக..
"போதும்...!நிறுத்துங்க அண்ணி....!இப்படி என் பொண்ணு மேல அபாண்டமா பழி போடாதீங்க....!",சற்றுக் குரலை உயர்த்திக் கத்தினார் கிருஷ்ணன்.
"உங்களுக்கும் ஒரு பொண்ணு இருக்கிறாள் அக்கா....!இன்னொரு பொண்ணை பத்தி இப்படி யோசிக்காம பேசாதீங்க....!",என்ற மீனாட்சியின் குரல் நடுங்கியது.
நித்திலாவோ உச்சக்கட்ட அதிர்ச்சியில் சிலையாய் சமைந்திருந்தாள்.அவள் கண்களில் இருந்து மட்டும் கண்ணீர் வற்றாத ஜீவநதியாய் பெருகிக் கொண்டிருந்தது.
'என்னுடைய பெத்தவங்களுக்கு இப்படியொரு அவமானத்தைத் தேடித் தந்துட்டேனே....?அவங்களைப் பார்த்து....இன்னொருத்தர் கேள்வி கேட்கிற மாதிரி பண்ணிட்டேனே...?',அவள் மனம் அரற்றியது.
அவர்கள் இருவரையும் பார்த்து அசால்ட்டாக கையை உதறியவர்,"நான் ஒண்ணும் அபாண்டமா பழி போடல....!அப்புறம் மீனாட்சி...நானும் ஒரு பொண்ணை வைச்சிருக்கிறேன் தான்...!ஆனால்..அவள் ஒண்ணும் கண்டவன் கூட சுத்திக்கிட்டு இல்ல...!நான் ஆதாரத்துடன்தான் பேசறேன்....!அந்த சதாசிவம் அவன் கண்ணால பார்த்திருக்கிறான்....!இப்பவே உன் பொண்ணைக் கூப்பிட்டு...என்ன நடக்குதுன்னு கேளு....!உண்மையைத் தெரிஞ்சுக்கலாம்....!",ஏற்ற இறக்கங்களோடு ஆங்காரத்துடன் கூறி முடித்தார் கனகம்.
இப்படியும் சில மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்....!அடுத்தவர் குடும்பத்தில் என்ன நடக்கும்...?எதைச் சொல்லி கலகத்தை ஏற்படுத்தலாம்....?என்று கண்கொத்திப் பாம்பாய் கவனித்துக் கொண்டிருப்பர்.அடுத்தவர்களின் மனதைக் குத்திக் கிழிப்பதில்...அப்படி என்னதான் குரூர திருப்தியோ தெரியவில்லை...!
கட்டுக் கடங்காமல் பெருகிய கோபத்தை....தன் விழிகளை அழுந்த மூடித் திறந்து கட்டுப்படுத்திய கிருஷ்ணன்,"நான் எதுக்கு அண்ணி என் பொண்ணுக்கிட்ட கேட்கணும்....?அவ சென்னையில ஒரு பெரிய கம்பெனியில நல்ல வேலையில இருக்கிறாள்....!அவளுடைய வேலையில அவள் நாலுபேரு கூட பழக வேண்டியிருக்கும்....!வெளியில நாலு இடங்களுக்குப் போக வேண்டி இருக்கும்....!அதையெல்லாம் பார்த்துட்டு கண்டபடி பேசினால்...அது உங்க தப்புதான்....!இதுக்கெல்லாம் என் பொண்ணு பதில் சொல்ல வேண்டியதில்லை....!
அப்புறம் என் பொண்ணு கண்டவங்க கூட சுத்தினாலும்...அவளை கை நீட்டி..'ஏன்..?'ன்னு ஒரு வார்த்தை நான் கேட்க மாட்டேன்....!ஏன்னா...என் பொண்ணு மேல நான் வைச்சிருக்கிற நம்பிக்கை அப்படிப்பட்டது....!இவ்வளவு ஏன்....?நானே என் கண்ணால அவளை வேறு ஒரு ஆணோட பார்த்தாலும் சந்தேகப்பட மாட்டேன்....!அந்த ஆணோட பழகறதுக்கும் ஒரு தகுந்த காரணம் இருக்கும்ன்னு நம்புவேன்....!அவள் மேல நான் அசைக்க முடியாத நம்பிக்கை வைச்சிருக்கிறேன்....!",அழுத்தம் திருத்தமாகக் கூறியவரிடம் அப்படியொரு உறுதி தெரிந்தது.
கணவர் கொடுத்த தக்க பதிலடியில்...மீனாட்சியின் மனம் சற்று அமைதியடைந்தது.
"எங்க வளர்ப்பு பொய்யா போகாது அக்கா....!முதல்ல உங்க குடும்பத்தைப் பாருங்க...!போன வாரம் கோவிலுக்குப் போன போது பார்த்தேன்....!உங்க பொண்ணு ஒரு பையன் கூட உட்கார்ந்து குசுகுசுன்னு பேசிக்கிட்டு இருந்தாள்....!முதல்ல அதைப் போய் என்னன்னு பாருங்க....!",அவருக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற வேகத்தில்...போன வாரத்திலிருந்து மனதில் மறைத்து வைத்திருந்த உண்மையைப் போட்டு உடைத்தார் மீனாட்சி.
தன் மகளின் விஷயம் அவருக்கும் அரசல் புரசலாக காதில் விழுந்திருந்தது.எனவே...மூக்கறுபட்டு அமர்ந்திருந்தார்.
சிலையாய் ஸ்தம்பித்திருந்த நித்திலா 'ஓ'வென்று கதறி அழ ஆரம்பித்தாள்.தன் அழுகை சத்தம் வெளியே கேட்டு விடுமோ என்ற பயத்தில் தன் வாயைப் பொத்திக் கொண்டு குமுறினாள்.
அவள் தந்தை பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அவள் இதயத்தை சென்று பலமாகத் தாக்கியது.அதிலும் 'நம்பிக்கை' என்ற வார்த்தை அவளை உயிரோடு கொன்று போட்டது.மனதில் இருந்து எழுந்த எதுவோ ஒன்றில் அவள் சிக்கித் தவித்தாள்.
அந்த நிலையிலும்...மனைவியைக் கண்டிப்புடன் பார்த்த கிருஷ்ணன்,"இன்னொரு பொண்ணைப் பத்தி தேவையில்லாம பேசாதே மீனாட்சி....!",என்று அதட்டியவர்...கனகத்திடம் திரும்பி,
"அண்ணி....!நீங்க வயசில பெரியவங்க....!தயவு செய்து இப்படியெல்லாம் பேசாதீங்க....!நித்திலா உங்களுக்கும்தானே மகள் முறை....!நம்ம வீட்டுப் பொண்ணைப் பத்தி நாமளே கண்டபடி பேசலாமா....?",அவர் குரலில் சற்று வருத்தம் தெரிந்தது.
என்னதான் இருந்தாலும் அண்ணி முறை....!வயதில் பெரியவர்களின் முன் குரலை உயர்த்திப் பேச நேர்ந்ததை அவர் விரும்பவில்லை.
கிருஷ்ணன் சற்று அமைதியாகக் கூறவும்....கனகமும் சற்று நைச்சியமாகப் பேச ஆரம்பித்தார்.
"நம்ம வீட்டு பொண்ணுங்கிறதுனாலதான்....விஷயம் கேள்விப்பட்டதும் உன்கிட்ட சொல்ல ஓடி வந்தேன் தம்பி.....!உண்மையோ...பொய்யோ....?நமக்கு எதுக்கு வம்பு....!இனியும் அவளை சென்னைக்கு அனுப்பாம...சட்டு புட்டுன்னு மாப்பிள்ளையைப் பார்த்து கல்யாணம் பண்ணற வழியைப் பாரு....!நான் அவ்வளவுதான் சொல்லுவேன்....!",ஏதோ நல்லவர் போல கூறிவிட்டு கிளம்பினார் கனகம்.
"ஆமாமா....!இந்த அம்மா எதுக்கு ஓடி வந்ததுன்னு நமக்குத் தெரியாது....?இவ சென்னைக்கு போக ஆரம்பிச்சதுல இருந்து....இதே கூத்துதான்....!அப்பப்ப வந்து எதையாவது கொளுத்திப் போட்டுட்டு போறது....!",எரிச்சலுடன் மீனாட்சி முணுமுணுக்க..
"சரி..!சரி...!விடுடி....!வாழ்க்கைன்னு இருந்தால்...நாலு பிரச்சனையைப் பார்த்துத்தான் தீரணும்....!நீ இந்த விஷயத்தை எல்லாம் நம்ம பொண்ணுக்கிட்ட சொல்லிக்கிட்டு இருக்காதே....!அவ வருத்தப்படுவாள்....!",என்று கூறி அந்தப் பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தார் கிருஷ்ணன்.
அவர்கள் இருவரும் ஒரு துளி அளவு கூட நித்திலாவை சந்தேகப்படவில்லை.அவர்களால் சந்தேகப்படவும் முடியவில்லை.
அவர்களைக் குற்றம் சொல்லியும் பிரயோஜமில்லை....!காதல் விளையாடும் விளையாட்டில் யாரை குற்றவாளியாக்குவது....?
தங்கள் மகளின் மனத்தில்....காதல்...தனது கள்ளத்தனத்தைப் புகுத்தியிருக்கிறது...என்பதை அவர்கள் அறியாமல் விட்டது யாருடைய தவறும் அல்லவே....?
தரையில் அமர்ந்து மெத்தையில் தலை கவிழ்ந்திருந்த நித்திலாவின் விழிகள் சிவந்து போய் கிடந்தன.அழுது அழுது அவள் கண்களில் கண்ணீரே வற்றியிருந்தது.
தன்னுடைய பெற்றவர்கள்....தன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையில் அவள் ஆடிப் போயிருந்தாள்.அவர்களது நம்பிக்கையை கொன்ற குற்றவுணர்வு...அவள் கழுத்தை வாள் கொண்டு அறுத்தது.
'அய்யோ....!அப்பா....!உங்க நம்பிக்கையை நான் கொன்னுட்டேன்....!பெரியம்மா சொன்ன எல்லாமே உண்மைதானே....!உங்க நம்பிக்கைக்குத் துரோகம் பண்ணிட்டேன்....!நான் என்ன பண்ணட்டும் அப்பா...!எனக்கு ஒரு வழியும் தெரியலையே....?ஆதுவுடைய காதலை தூக்கியெறிஞ்சுட்டு உங்ககிட்ட வரட்டுமா....?இல்ல...உங்க நம்பிக்கையை கொன்னுட்டு அவர்கிட்ட போகட்டுமா....?எனக்கு ஒண்ணும் தெரியலையே....?',காட்டில் தொலைந்த குழந்தையாய் புலம்பிக் கொண்டிருந்தாள் நித்திலா.
ஒரு பக்கம் ஆதித்யனின் காதல் விஸ்வரூபம் எடுத்து அவளை அழைக்க....இன்னொரு பக்கமோ...அவள் அப்பாவினுடைய நம்பிக்கை பெரிதாய் உருவெடுத்து...அவளை நோக்கி அமைதியான பார்வையை வீசி வைத்தது.
இவ்வளவு நாட்கள் மறைந்து கிடந்த....பெற்றவர்களின் நம்பிக்கைக்கும்...ஆதித்யனின் காதலுக்கும் இடையேயான போராட்டம்....மீண்டும் அவள் மனதில் உதயமானது.அவள் மீண்டும் இரு மனங்களுக்கும் இடையில் சிக்கித் தவிக்க ஆரம்பித்தாள்.
"இல்ல....!ஆசை ஆசையா என்னை பெத்து....இவ்வளவு வருஷம் கண்ணுக்கு கண்ணா வளர்த்த என் அம்மா அப்பாவினுடைய நம்பிக்கைக்கும்....பாசத்துக்கும் துரோகம் பண்ண மாட்டேன்....!இந்த குற்றவுணர்வோட என்னால....ஆது கூட வாழ முடியாது....!வேண்டாம்....!என்ன...?ஒரு வருடக் காதல்தானே.....?"
இதை நினைக்கும் போதே...ஆதித்யனின் காதல் மனம் விழித்துக் கொண்டு..'வெறும் ஒரு வருடக் காதல்தான் என்று நீ நினைக்கிறாயா....?இந்த ஒரு வருடக் காதலிலேயே...நீ ஏழேழு ஜென்மக்களுக்குமான காதலை அவன் மேல் வைத்திருக்கிறாய்....அது தெரியும்தானே....?',என்று கேள்வி கேட்டது.
'அந்தக் காதல்....!அந்தக் காதல் மட்டும் போதும்....!இந்த ஜென்மத்துக்கான வாழ்க்கையை நான் வாழ்ந்து விடுவேன்....!எனக்கு அந்தக் காதல் மட்டும் போதும்....!அந்தக் காதலுக்கு உரியவன் வேண்டாம்....!',மனம் கதறித் துடித்து ஓலமிட்டது.
'ஒரு முறை...உங்க அம்மா அப்பாக்கிட்ட நீ காதலிக்கிற விஷயத்தை சொல்லிப் பாரு....!அப்புறம் முடிவெடுக்கலாம்....!',காதல் மனம் எடுத்துரைக்க...அவள் எங்கே அதையெல்லாம் கவனிக்கும் மனநிலையில் இருந்தாள்....?அவள்தான் பெற்றவர்களின் நம்பிக்கையில் மூழ்கி காதலை தொலைத்துக் கொண்டிருந்தாளே....!
'எந்த முகத்தை வைத்துக் கொண்டு....நான் என் அம்மா அப்பாக்கிட்ட பேசட்டும்....?நான் காதலிக்கிறேன்னு தெரிஞ்ச அடுத்த நிமிஷமே....அவங்க மனசை விட்டுருவாங்க....!வேண்டாம்....!இது வேண்டாம்....!என்னுடைய விதி இதுதான்னு நான் நினைச்சுகிறேன்....!',பைத்தியம் பிடித்தவள் போல் புலம்பியவள்....காதலுக்காக போராடாமல் விதியின் மேல் பழியைத் தூக்கிப் போட்டாள்.
என்ன நடந்தாலும் சரி....!காதலிப்பவர்கள் காதலுக்காக போராட வேண்டும்....!பெற்றவர்களையும் காயப்படுத்தாமல்....காதலையும் தூக்கியெறியாமல் போராடக் கற்றுக் கொள்ள வேண்டும்....!இந்தப் போராட்டத்திற்கு பயந்து...விதியின் பின்னால் ஒளிந்து கொள்பவர்கள் கோழைகள்....!இந்தப் போராட்டத்தைக் கற்றுக் கொள்ளாமல் காதலிக்கக் கூடாது....!
ஆதித்யனின் காதல் இல்லாமல்....அவளால் மட்டும் வாழ்ந்து விட முடியுமா என்ன....?இல்லை...காதல்தான் அதற்கு அனுமதித்து விடுமா....?அவளுடைய இதயத்துடிப்பே ஆதித்யன்தான்....!அவன் இல்லையென்றால்....அந்த துடிப்பும் நின்று விடும்...என்பதை உணர்ச்சிகளின் பிடியில் சிக்கிக் கொண்டிருந்த நித்திலா உணரவில்லை.....!
தன்னவனுடைய காதலின் ஆழம் தெரியாமல்....அவள் முடிவெடுத்துவிட்டாள்...!அந்த முடிவை அவன் அறிய வரும் போது...அவன் காதல் தீவிரவாதியாக அவதாரம் எடுப்பான்...!
**************
பித்துப் பிடித்தவள் போல் அவர்கள் வீட்டு ஹால் சோபாவில் அமர்ந்திருந்தாள் நித்திலா.அவள் விழிகளில் அணை கட்டியிருந்த கண்ணீர் 'எப்பொழுது வேண்டுமானாலும் விழுந்து விடுவேன்...!' என்று அவளை பயமுறுத்திக் கொண்டிருந்தது.
"நித்தி ம்மா...!குட் மார்னிங் டா....!மணி ஏழுதான் ஆகுது....!அதுக்குள்ள எழுந்துட்டியா....?",அப்பொழுதுதான் எழுந்து வந்த கிருஷ்ணன் விசாரித்தார்.
"ம்...ஆமாம் ப்பா....!",கலங்கிச் சிவந்திருந்த விழிகளை அவருக்கு காட்டாமல் இருக்கும் பொருட்டு...தலையைத் திருப்பியபடி பதிலளித்தாள்.
"மீனு....!புள்ளை எழுந்திருச்சுட்டா பாரு....!காபி கொண்டு வா...!",சமையல் அறையை நோக்கி அவர் குரல் கொடுக்கும் போதே....கையில் பால் டம்ளரோடு அங்கு விஜயமானார் மீனாட்சி.
"நேத்து மதியம் சாப்பிட்டதுதான்....!நைட்டும் எதுவும் சாப்பிடாம படுத்திட்ட...வெறும் வயித்துல காபி குடிக்க கூடாது....!இந்தா...!பால் குடி....!",என்றபடி அவள் கையில் பால் டம்ளரை திணித்தார்.
"தேங்க்ஸ் ம்மா...!",சுரத்தே இல்லாமல் அதை வாங்கிப் பருகிய மகளை...பெற்றவர்கள் ஆராய்ச்சி விழிகளோடு நோக்கினர்.இருவரின் விழிகளிலும்,'என்னாச்சு இவளுக்கு....?' என்ற கேள்விதான் தொக்கி நின்றது.
"நித்தி கண்ணா....!ஏன் ஒருமாதிரி இருக்க....?முகமெல்லாம் வேற வீங்கிப் போய் கிடக்கு....?",மகளின் மௌனத்தைத் தாங்க முடியாமல் கிருஷ்ணன் வினவ..
"ஒ...ஒண்ணுமில்லை ப்பா...!",என்றவள் பாதி குடிக்கப்படாமல் இருந்த பால் டம்ளரை டீபாயின் மீது வைத்தாள்.
அவர்....மகளையே கவனித்துக் கொண்டிருக்க...அவள் தனக்குள் உழன்று கொண்டிருந்தாள்.
"நித்தி....!நேத்து பெரியம்மா பேசிட்டு போன விஷயத்தைக் கேட்டியா....?"அமைதியான குரலில் கிருஷ்ணன் கேட்க..
அவளோ...'ஆமாம்...!' என்று தலையாட்டினாள்.அவள் கண்களில் இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் வழிந்து....அவள் கைகளில் பட்டுத் தெறித்தது.
ஒரு பெருமூச்சை வெளியிட்டவர்...அவள் அருகில் அமர்ந்து ஆதரவாக அவள் தோளைச் சுற்றி அணைத்தபடி..
"கண்ணா...!இதுக்கெல்லாம் வருத்தப்படலாமா....?அவர் பேசியது எல்லாம் ஒரு பேச்சுன்னு....நீ கேட்டுட்டு அழுதுக்கிட்டு இருக்க....!இந்த அப்பா...உன்மேல முழுமையான நம்பிக்கை வைச்சிருக்கிறேன்....!யாரு என்ன பேசினால் என்ன....?உனக்கு பின்னாடி நான் இருக்கிறேன்....!பேசறவங்களுக்கு என்ன...?பேசிட்டுத்தான் இருப்பாங்க....!வாழ்க்கையில சில சமயங்கள்ல...சில பிரச்சனைகளைக் கடந்துதான் ஆகணும்....!",அவள் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்து விட்டபடி அமைதியான குரலில் கூறினார்.
"என் பொண்ணைப் பத்தி எனக்குத் தெரியாதா டா....?யாரோ என்னமோ பேசிட்டு போகட்டும்....!இந்த அப்பா உன்மேல வைச்சிருக்கிற நம்பிக்கை ஒருபோதும் குறையாது....!சரியா....?",கலைந்திருந்த தலைமுடியை ஒதுக்கி விட்டபடி கூறியவரின் தோளில் சாய்ந்து கதற ஆரம்பித்தாள் அந்த மகள்.
அழுகைக்கு இடையில்,"ஸா...ஸாரி ப்பா....!ஸாரி ப்பா....!",என்ற வார்த்தைகள்தான் வந்து விழுந்தன.
மகள் எதற்காக 'மன்னிப்பு' கேட்கிறாள் என்பதை அந்தப் பெரியவர்கள் யோசித்திருக்கலாம்....!யோசிக்காமல் விட்டதுதான் காதலின் விளையாட்டு....!
"நித்தி ம்மா...!",என்ற தந்தையின் குரலோ..."அழாதே டா...!",என்ற தாயின் அக்கறையோ எதுவுமே அவள் காதில் விழவில்லை.ஒரு மூச்சு அழுது தீர்த்தவள்....அவர் தோளில் இருந்து எழும் போது...ஒரு தீர்க்கமான முடிவோடு எழுந்தாள்.
பதினோரு மணிக்கு ஆதித்யன் வந்து அழைத்துச் செல்வான் என்ற எண்ணம் பிறக்க...இருவரிடமும் சொல்லிக் கொண்டு...கிளம்புவதற்காக அறைக்குள் நுழைந்தவளின் மனதில்...'இன்றோடு அனைத்திற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்...!' என்ற அசைக்க முடியாத எண்ணம் வேரூன்றியிருந்தது.
பாவம்....!அவளுக்குத் தெரியவில்லை....!அந்த முற்றுப்புள்ளிக்கு அருகில் இன்னொரு புள்ளியை வைத்து....ஆதித்யன் அதை தொடர்கதையாக்கப் போகிறான் என்பதை அவள் அறிந்திருக்கவில்லை....!ஆதித்யன் வைக்கும் புள்ளிக்கு அருகில்...இன்னொரு புள்ளியை வைத்து....காதல்....அந்த தொடர்கதையை அழகிய பெரும் காவியமாக்கப் போகிறது என்பதை அவ்விருவருமே அறிந்திருக்கவில்லை......!
அகம் தொட வருவான்...!!!
கருத்துகள்
கருத்துரையிடுக