எவனோ என் அகம் தொட்டு விட்டான் - அகம் 49
அத்தியாயம் 49 :
தனது அலுவலக அறையில்....இரு கைகளாலும் தலையைத் தாங்கியபடி அமர்ந்திருந்த பாலாவின் மனம் முழுவதும் வேதனை....வேதனை மட்டுமே நிறைந்திருந்தது.தன் முதல் காதலின் இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாமல்....அவன் விழிகள் கலங்கிச் சிவந்திருந்தன.அவன் இருதயமோ....ரணமாய் இரத்தக் கண்ணீரை வடித்துக் கொண்டிருந்தது....!
'எப்படி....?எந்த இடத்துல நான் சறுக்கினேன்....?உண்மையான காதலுக்கு....அந்தக் காதலே அடிபணியும்ன்னு சொல்லுவாங்களே....?அப்படி இருக்கும் போது...என் காதல் ஏன் என்னை ஏமாத்துச்சு....?என்னுடையது உண்மையான காதல் இல்லையா.....?நித்தியை பார்த்த முதல் நாளிலிருந்து...இன்னைக்கு....இந்த நிமிஷம் வரைக்கும்....அவளை என் உயிரா நினைச்சுக்கிட்டு இருக்கேனே.....?அவளுக்காகத் துடிக்கிற என் இதயத்தோட துடிப்பை அவளால உணர முடியலையா.....?என்னுடைய காதல் பொய்யில்லையே.....?அது உண்மையானது....!ஆழமானது....!',அவன் மனம் காதலிடம் கேட்ட கேள்விகளுக்கு....அந்தக் காதலிடமே பதிலில்லை போலும்......!அமைதியாக கண்களை மூடி அமர்ந்திருந்தது....!
'என்னால இதைத் தாங்கிக்க முடியலையே.....!என்னுடைய உண்மையானக் காதலுக்கு கிடைச்ச பரிசுதான் என்ன....?இவ்வளவு நாட்கள்....ஒவ்வொரு நொடியும்....அவ கண்கள்ல....என் மீதான நட்பைத் தாண்டி காதல் தெரியாதான்னு....நான் ஏங்கித் தவிச்சிருக்கேன்.....!அன்னைக்கு....பார்ட்டி ஹால்ல நான்...அவ கண்கள்ல காதலைப் பார்த்தேன்....!ஆனால்....ஆனால்....அவள் கண்கள்ல வழிஞ்ச காதல் எனக்கானது இல்ல.....!அந்த காதலுக்கு சொந்தக்காரன் நான் இல்ல.....!அவ கண்கள்ல காதலை கண்ட அந்த நொடி....நான் உயிரோட செத்துட்டேன்....!ஏன்....?அவ மனசில நட்பையும் தாண்டி என்னால இடம் பிடிக்க முடியாம போச்சு.....?எந்த விதத்துல....நான் என் காதல்ல குறை வைச்சேன்.....?',பித்துப் பிடித்தவன் போல் புலம்பியவனைத் தேற்றுவதற்கு அங்கு யாரும் இல்லை.
அவனிடம் யார் சென்று சொல்வது....?அவனுடைய காதலில் எந்தவிதக் குறையும் இல்லைதான்...!ஆனால்....அவனுடைய காதலுக்காக வேறொருத்தி காத்துக் கொண்டிருக்கும் போது....நித்திலா எப்படி அவனுடைய காதலுக்கு உரிமைக்காரியாக முடியும்.....?அவனுடைய உண்மையான காதலுக்கும்....அன்பிற்கும்....நேசத்திற்கும் உரிமையானவள் வேறொருத்தி அல்லவா....?
அந்த வேறொருத்தியை காலம் வரும் போது....காதல் அவன் கண்களில் காட்டும்.
அவன் நித்திலாவின் மீது கொண்ட காதல் உண்மையானதுதான்....!ஆழமானதுதான்....!ஆனால்...அதை விட ஆதித்யன் அவள் மேல் கொண்ட காதல் அழுத்தமானது....!பேராழமானது....!கரை காண முடியாதது.....!காதல்....காதலர்களை ஒருபோதும் வஞ்சிப்பதில்லை....!அவரவர்களின் காதலுக்குத் தகுதியான காதலை....அவரவர்களுக்கு வழங்கிக் கொண்டேதான் இருக்கிறது....!
அதற்காக...பாலாவின் காதல்...நித்திலாவின் காதலுக்குத் தகுதியற்றது என்று கூறிவிட முடியாது.இன்னொருத்தியின் உத்தமமான காதல் அவனுக்குக் கிடைக்க வேண்டும் என்று....நித்திலாவின் காதல் அவன் கை நழுவிப் போனது என்று வேண்டுமானால் கூறலாம்....!
காதலின் ரணம் அவன் இருதயத்தைக் குத்திக் கிழித்து...அவன் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.ஆண் மகனின் கண்ணீர் அரிதானது.....!வலிமையானது....!பெண்களின் கண்ணீரை விட வேதனையானது....!அந்த வளர்ந்த ஆண் மகன் கண்ணீர் வடித்தான்...தன்னுடைய காதலுக்காக.....!தான் உயிராய் நேசிப்பவளின் விழிகளில் தெரிந்த....இன்னொருவரின் மீதான காதலுக்காக....!
ஒரு கட்டத்தில் அந்த ஆண் மகன் சிலிர்த்து நிமிர்ந்தான்.தன் இருதயத்தைக் கடினமாக்கிக் கொண்டு....தன் உணர்வுகளை கடுமையாக்கினான்...!
'என் காதலை நான் விட்டுத்தான் ஆகணும்....!அவளுக்காக....!அவ கண்கள்ல தெரிந்த காதலுக்காக....!ஆதித்யன் சாரை...அவ பார்க்கிற பார்வையில காதல் கரைபுரண்டோடுச்சு.....!அவ முகத்துல அப்படியொரு சந்தோஷம்....பிரகாஷம்....!அவளுடைய சந்தோஷத்துக்காக...அவளுடைய காதலுக்காக....நான் என் காதலை விட்டுத்தான் ஆகணும்.....!இதுதான் என்னுடைய காதல்.....!என் காதல்ல நான் தோற்கலை....!அவளுடைய காதலுக்காக....நான் என்னுடைய காதலை விட்டுத் தர்றேன்.....!கடைசி வரைக்கும்....நான் அவளுக்கு ஒரு நல்ல நண்பனா இருப்பேன்.....!',மனம் வலிக்க வலிக்க....உயிர் துடிக்க துடிக்க....தன் முதல் காதலை உயிரோடு கொன்று புதைத்தான்.....!
'காதல்...' என்னும் வார்த்தைக்கு இலக்கணமாக....தன் இருதயத்தில் பதிந்திருந்த அவளது முகத்தை....வேரோடு பிடுங்கி எறிந்து விட்டு...'நட்பு....' என்னும் ஓவியமாகத் தீட்ட முயற்சி செய்தான்.....!
அவன் முயற்சி செய்வான்....!அவனுடைய முயற்சிக்கு உறுதுணையாய்....காதல் வலியில் அவன் துவண்டு போகும் சமயங்களில்.....அவனைத் தேற்றும் சகியாய்....'காதல்' என்னும் வரத்தைக் கொண்டு அவன் வாழ்வில் ஒரு தேவதை வருவாள்....!அந்த தேவதை....அவனுடைய அத்தனை காயத்திற்கும் மருந்தாய்....தன்னையே அவனிடம் அர்பணிப்பாள்....!தன்னுடைய காதலை....அவனது காலடியில் சமர்பிப்பாள்....!அவளுடைய காதல்....அந்த ஆண் மகனுடைய ரணத்தை ஆற்றும்.....!முழு ஆண்மகனாய் அவனை நிமிர்ந்து நிற்கச் செய்யும்....!
தான் காதலிப்பவள் தன்னைத் திருப்பிக் காதலிக்கவில்லையென்றால்....அவளைக் காயப்படுத்துவதா காதல்......?இல்லை.....!தான் காதலித்தவளுக்காக....தான் உயிராய் நேசித்தவளுக்காக....தன் காதலையே இழக்கத் துணிவதுதான் காதல்.....!நித்திலாவிற்காக விட்டுக் கொடுத்த பாலாவின் காதல் உன்னதமானது......!
...............................................................................................................................
"என்ன தம்பிகளா....?கூப்பிட்டு வைச்சு மிரட்டிக்கிட்டு இருக்கீங்களா....?நாங்க 'ம்'ன்னு ஒரு வார்த்தை சொன்னால் போதும்....!எங்க சொந்த பந்தமெல்லாம் ஒண்ணு கூடிடும்....!",சுமித்ராவின் சித்தப்பா மிரட்டிக் கொண்டிருக்க....அவருக்கு அருகில் கோபத்துடன் அமர்ந்திருந்தார் சுமித்ராவின் தந்தை.
"அப்படியா....!அப்போ 'ம்'ன்னு சொல்லித்தான் பாருங்களேன்....!",அவர்களுக்கு எதிரில் அமர்ந்திருந்த கெளதம் நக்கலுடன் வினவ....அவனுக்கு அருகில் இருந்த ஆதித்யன் கேலிச் சிரிப்பு ஒன்றை உதிர்த்தான்.
கெளதம் சொன்னது போல்....சுமித்ரா சென்று தன் வீட்டில் கூற....உடனே அவளது தந்தையும்....அவரது தம்பியும் பல கணக்குகளைப் போட்டுக் கொண்டு ஹோட்டலுக்கு கிளம்பி வந்து விட்டனர்.
'நாலு தட்டு தட்டினா....பயல் அடங்கிடுவான்....!',என்று அவர்கள் கணக்குப் போட்டிருக்க....அவர்கள் போட்டு வைத்த கணக்குகள் அனைத்தையும் ஒன்றுமில்லாததாய் அழித்துக் கொண்டிருந்தனர் கௌதமும்....ஆதித்யனும்....!
"வேண்டாம் பசங்களா.....!எங்ககிட்ட வாலாட்டாதீங்க.....!நாங்க எல்லாம் கிராமத்து ஆளுங்க....!ஏதோ பிழைப்புக்காகத்தான் இந்தப் பட்டணத்துல குடியேறியிருக்கிறோம்.....!எங்க சாதிசனம் எல்லாம் ஒண்ணு சேர்ந்ததுன்னா....அப்புறம்....அரிவாள் கத்திதான் பேசும்....!",தங்கதுரை கோபத்தில் உறுமிக் கொண்டிருக்க..
'இதற்கெல்லாம் அசருவேனா....?',என்பது போல் அசால்ட்டாக அவரைப் பார்த்த கெளதம்,"வெறும் பிழைப்புக்கு குடியேறுன உங்களுக்கே இப்படின்னா....எங்க கொள்ளு தாத்தா காலத்தில இருந்து....இங்கேயே வாழ்க்கையை ஓட்டிக்கிட்டு இருக்கிற எங்களுக்கு எவ்வளவு இருக்கும்......?சும்மா சினிமாவுல வர்ற வில்லன்கள் மாதிரி....வெட்டு..குத்துன்னு விளையாட்டு காண்பிக்காம....எனக்கும்....உங்க பொண்ணுக்கும் கல்யாணம் பண்ணற வழியைப் பாருங்க.....!",அவன் குரலில் அப்படி ஒரு நையாண்டி.
"எங்க பொண்ணை வெட்டிப் போடுவேமோ தவிர....வேறொரு சாதிக்காரனுக்கு கட்டிக் கொடுக்க மாட்டோம் டா.....!உன்னால முடிஞ்சதைப் பார்த்துக்கோ.....!",அதுவரை அமைதியாய் அமர்ந்திருந்த சுமித்ராவின் தந்தை ராஜவேலு ஆத்திரமாய் கத்த..
இருவரையும் மாறி மாறி முறைத்துக் கொண்டிருந்த தங்கதுரையோ...."ஆமாண்ணா.....!எழுந்திருச்சு வாங்க......!இந்தச் சின்னப் பயலுககிட்ட என்ன பேச்சு வேண்டி கிடக்கு.....!அப்படி என்னதான் கிழிக்கறானுகன்னு பார்த்திடலாம்.....!",தன் தமையனுக்கு ஒத்து ஊதியபடி அவர் எழுந்து நிற்க....ராஜவேலுவும் எழுந்தார்.
"இன்னும் ஏழு நாள்ல என் பொண்ணு கல்யாணம் நடக்கத்தான் போகுது.....!முதல் பத்திரிக்கை உங்களுக்குத்தான் வைப்பேன்....!கண்டிப்பா வந்திடணும்.....!",கேலியாக உரைத்தபடி நகரப் போனவர்கள்..
"ஒரு நிமிஷம் மாமனார்களே....!",என்ற கௌதமின் குரலில் அப்படியே நின்றனர்.
அது ஒரு தனி கேபின் என்பதால்....இவர்களுடைய பேச்சு சத்தம் எதுவும் வெளியே இருப்பவர்களை எட்டவில்லை.நடக்கும் அனைத்தையும் ஒரு பார்வையாளனாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான் ஆதித்யன்.
'இது நண்பனுடைய வாழ்க்கை....!இது அவன் பேச வேண்டிய தருணம்....!',என்று எண்ணி அமைதி காத்தான்.
"யாருக்கு யாருடா மாமனாரு....?அநாதைப் பயலே.....!",தங்கதுரை ஆங்காரமாய் வார்த்தைகளை விட..
'அநாதை' என்ற வார்த்தையில் கௌதமின் முகம் கருத்தாலும்....மறு நொடியே...தன்னியல்புக்கு வந்தவன்..
"நீங்க ரெண்டு பேரும்தான் எனக்கு மாமா....!இதிலென்ன சந்தேகம்.....!சரி....!அதை விடுங்க....!'உன்னால முடிஞ்சதைப் பார்த்துக்கோ'ன்னு சொல்லிட்டு நீங்க பாட்டுக்கு போனா என்ன அர்த்தம்.....?கொஞ்சம் இருந்து....என்னால என்ன முடியும்ங்கிறதையும் பார்த்துட்டு போங்க.....!",அவன் கூறிக் கொண்டிருக்கும் போதே....நெடுநெடுவென்ற உயரத்துடன்....ஒருவன் உள்ளே நுழைந்தான்.
"ஸாரி டா மச்சான்ஸ்......!கொஞ்சம் லேட் ஆகிடுச்சு.....!அப்புறம்...கெளதம்...!உன் மாமனார் என்ன சொல்றாரு.....?"கேட்டபடியே அங்கிருந்த நாற்காலியில் வந்தமர்ந்தான் விஜய்.
விஜய்....!சப் இன்ஸ்பெக்டர் ஆஃப் போலீஸ்.....!இவர்களது நண்பன்....!
"என் மாமனார்தான் பொண்ணைத் தர மாட்டேன்னு அடம்பிடிச்சுக்கிட்டு இருக்காரு.....!அருவாளைத் தூக்குவேன்....கத்தியைத் தூக்குவேன்னு டயலாக் பேசிட்டு இருக்காரு....!",கெளதம் கூற..
"அது மட்டும் இல்லை டா...!அவங்க பொண்ணை கொன்னு கூட புதைப்பாங்களாம்....!ஆனால்....வேற சாதிப் பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க மாட்டாங்களாம்....!",ஆதித்யன் மேலும் ஏற்றி விட..
"அப்படின்னா....ஒரே வழிதான் இருக்கு....!பேசாம பொண்ணைத் தூக்கிடு.....!அவங்க அரிவாள்....கத்தின்னு போனா....நாம போலீஸ்...ஜெயிலுன்னு போவோம்.....!ஒரு மேஜர் பொண்ணை கல்யாணத்துக்கு கட்டாயப்படுத்தறது சட்டப்படி குற்றம்.....!அந்தக் குற்றத்தோட இவங்க கொலை குற்றத்தையும் சேர்த்தல்ல பண்ணுவேன்னு சொல்றாங்க.....!சாட்சிக்கு போலீஸ்காரன் நான் இருக்கேன்....!",நீளமாய் விஜய் பேசி முடிக்க..
கெளதம் போலியாய் அலறினான்.
"அய்யோ....!வேண்டாம் டா மச்சான்....!என் மாமனார் ரெண்டு பேரும் ரொம்ப பாவம்....!அவங்களைத் தூக்கி ஜெயில்லையெல்லாம் போட வேண்டாம்....!இப்போ அவங்களே என்னுடைய கல்யாணத்துக்கு ஒத்துக்குவாங்க பாரேன்.....!",என்றபடி....அதிர்ச்சியுடன் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த இருவரையும் நோக்கியவன்...
"சொல்லுங்க மாமனார்களே....!இப்போ உங்க பொண்ணை எனக்குத் தருவீங்கதானே.....?",போலிப் பணிவுடன் வினவினான் கெளதம்.
போலீஸ்....ஜெயில் என்றவுடன் அவர்கள் சற்று பயப்படத்தான் செய்தனர்.
"என்ன....?போலீசை வைச்சு மிரட்டறீங்களா.....?இப்படியெல்லாம் பண்ணினா....பயந்துக்குவோமுன்னு நினைப்பா.....?",கோபமாக கேட்க முயன்றாலும் தங்கதுரையின் குரல் சற்று பயத்துடன்தான் வெளிவந்தது.
"ஹைய்யோ....!மாமா....!உங்களை பயமுறுத்த முடியுமா....?இன்னும் ஏழு நாள்ல...நீங்க குறிச்ச அதே முகூர்த்தத்துல....எனக்கும் உங்க பொண்ணுக்கும் கல்யாணம் நடக்கலைன்னா....என்ன ஆகும்ன்னு தான் உங்ககிட்ட சொல்லிக்கிட்டு இருக்கேன்....!வேற ஒண்ணும் இல்ல....!",
"அது ஒரு போதும் நடக்காது டா....!",ராஜவேலு கத்த..
"அதுக்கு எதுக்கு மாமா இப்படி கத்தறீங்க....?ஒண்ணு....நீங்க முன்னாடி நின்னு நடத்தி வையுங்க....!அப்படி இல்லையா....என் கல்யாணத்தை எப்படி நடத்திக்கணும்ன்னு எனக்குத் தெரியும்.....!என்ன...?நீங்களா நடத்தி வைச்சா சுமூகமான போயிடும்....!இல்லையா....வீணா உங்க பொண்ணை வீட்டை விட்டு வரச் சொல்லி....நாலு சொந்தக்காரங்க முன்னாடி நீங்க அசிங்கப்பட்டு....இதெல்லாம் தேவையா....?",தோளைக் குலுக்கினான் கெளதம்.
"என் பொண்ணு என்னை மீறி வர மாட்டாள்....!",
"வருவாள்....!என்னுடைய காதல் அவளை வரவைக்கும்....!நீங்க என்ன....உங்க மகளைப் பாசத்துலேயா கட்டிப் போட்டு வைச்சிருக்கீங்க.....?கேவலம் சாதிவெறியைக் காரணம் காட்டி...எங்களுடைய உண்மையான காதலைப் பிரிக்க பார்க்கறீங்க.....?சரி....!அதையெல்லாம் விடுங்க.....!நான் எவ்வளவுதான் காதலைப் பத்தி உங்களுக்குப் பாடம் எடுத்தாலும்....சாதிவெறியில ஊறியிருக்கிற உங்களை மாதிரி மனித மிருகங்களைத் திருத்த முடியாது.....!
நீங்க குறிச்ச அதே முகூர்த்தத்துல உங்க பொண்ணுக்கும்....எனக்கும் கல்யாணம்.....!கல்யாண ஏற்பாடு எல்லாம் நானே பார்த்துக்கிறேன்....!உங்களை மாதிரி ஆளுங்களோட நிழல் கூட என் கல்யாணத்துல பட விரும்பல.....!நீங்க யார் யாரை அழைக்க விரும்பறீங்களோ....அழைச்சிக்கோங்க....!நாளைக்கு உங்க வீடு தேடி பத்திரிக்கை வரும்....!மறுபடியும்...ஏதாவது கோல்மால் பண்ணலாம்ன்னு நினைக்காதீங்க....!என்னுடைய பார்வை எப்பவும் உங்க மேலதான் இருக்கும்....!நீங்க போகலாம்....!",அழுத்தமாகக் கூறியவனுக்கு எதிராக....அவர்களால் சுண்டு விரலைக் கூட அசைக்க முடியவில்லை.
அவர்களுக்கு நன்கு தெரிந்து போனது....!இந்தக் கல்யாணத்தை நடத்தி வைக்கவில்லையென்றால்.....தங்கள் சாதிக்காரர்களுக்கு முன்னால் அவமானப்பட நேரிடும் என்று....!அந்த அளவிற்கு நிலைமை கை மீறிப் போயிருந்தது.
'சம்மதம்...' என்று சொல்வதைத் தவிர அவர்களுக்கு வேறு எந்த ஒரு வழியும் இல்லை....!எந்த ஒரு வழியையும் கெளதம் விட்டு வைக்கவில்லை....!
இறுகிய முகத்துடன் வெளியேறப் போனவர்களைத் தடுத்த கெளதம்,"உங்களால என் பொண்டாட்டிக்கு எந்தவொரு ஆபத்தும் வரக் கூடாது....!நான் ஆல்ரெடி போலீஸ்ல கம்ப்ளெயின்ட் கொடுத்திட்டுத்தான் இங்கே வந்திருக்கேன்.....!சுமித்ரா உடம்பில ஒரு சின்னக் கீறல் பட்டால் கூட....அதற்கு நீங்க ரெண்டு பேரும்தான் காரணம்ன்னு....!ஸோ....என் பொண்டாட்டியை பத்திரமா பார்த்துக்கோங்க.....!",கிட்டத்தட்ட மிரட்டியவனை எதிர்த்து ஒன்றும் செய்யமுடியாத நிலையில் அமைதியாக வெளியேறினர்....சாதியில் ஊறித் திளைத்த அந்த மனிதர்கள்....!
அவர்களிடம் அப்படி பேசிவிட்டானே தவிர....அதை எண்ணி அவன் வருந்தாமல் இல்லை.தனக்குத்தான் சொந்தம் என்று யாரும் இல்லை.....!அப்படி இருக்கும் போது....தன்னவளுக்கும் சொந்தம் என்று அனைவரும் இருந்தும் கூட....இப்படி இல்லாமல் வாழ வேண்டிய நிலைமை அவனை உறுத்தியது....!
"ரொம்ப தேங்க்ஸ் டா விஜய்....!",கெளதம் நன்றியுரைக்க..
"உதை விழும்....!நமக்குள்ள என்ன தேங்க்ஸ்.....?அப்புறம்...கல்யாணம் பண்ணி குடும்பஸ்தன் ஆகப் போற.....!",அவன் கலாய்க்க ஆரம்பிக்க...பேச்சு திசை மாறியது.நண்பர்கள் மூவரும் சிறிது நேரம் பேசி விட்டு.....கிளம்பிச் சென்றனர்.
...............................................................................................................
கெளதம்....சுமித்ராவின் திருமண வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருந்தன.தந்தையின் கோபமுகம் சுமித்ராவை வதைத்தாலும்....'காலம் அனைத்தையும் ஆற்றும்....!' எனத் தன்னைத் தேற்றிக் கொண்டாள்.
கௌதமின் மிரட்டலுக்குப் பயந்து தந்தைமார்கள் இருவரும் அமைதியாகவே நடந்து கொண்டனர்.தங்கள் பெண் என்றும் பாராமல்....சுமித்ராவை வெட்டிப் போட வேண்டும் என்று தோன்றிய ஆத்திரத்தை....கௌதமின் எச்சரிக்கை அடக்கியது.....!
கெளதம் கூறியது போல் அவர்களை எல்லாம் திருத்த முடியாது....!அவர்கள் சாதியில் மூழ்கி....ஊறித் திளைத்தவர்கள்...!இங்கு....சுமித்ராவை காக்கும் அரணாக கெளதம் இருந்தான்....!அதனால்....அவள் காதல் பிழைத்தது....!உயிருக்கும் எந்தவொரு ஆபத்துமில்லை....!
ஆனால்....எந்த மூலையில் எத்தனை அபலைகள் சாதிவெறி என்னும் அரக்கனின் கைகளில்....தங்களது உயிருக்குயிரான காதலை இழந்து....சிக்கித் தவித்துக் கதறிக் கொண்டிருக்கிறார்களோ....தெரியவில்லை....!
'சாதிகள் இல்லையடி பாப்பா...!' என்று வகுப்பறைக்கு வகுப்பறை ஒலிக்கத்தான் செய்கிறது....!அவை அனைத்தும் 'ஒலி' என்ற அளவில் மட்டுமே நின்று....காற்றில் கரைந்து காணாமல் போவதுதான் வேதனை....!
********************
"பேபி....!நாம எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்....?",காரை ஓட்டிக் கொண்டிருந்த ஆதித்யன் தன் அருகில் அமர்ந்திருந்த நித்திலாவைப் பார்த்து கேட்டான்.கெளதம் மற்றும் சுமித்ராவின் திருமணத்திற்கு....அவர்களுக்குப் பரிசளிப்பதற்காக நகை வாங்க சென்று கொண்டிருந்தனர்.
"பண்ணிக்கலாம்....!பண்ணிக்கலாம்....!",அவள் இழுக்க..
"எப்போ....?நாற்பது வயசிலையா....?இப்பவே எனக்கு முப்பது வயசாகப் போகுது....!நீயும் வீட்டில பேச மாட்டேங்கிற....?நான் வந்து பொண்ணு கேட்கிறேன்னு சொன்னாலும் கேட்க மாட்டேங்கிற.....?",குற்றம் சாட்டினான் அவன்.
"நீங்க எல்லாம் வர வேண்டாம் ஆது.....!நானே பொறுமையா ஒருநாள் பார்த்து அவங்ககிட்ட சொல்றேன்....!என் மூலமாகத்தான் நம்ம விஷயம்....என் அம்மா அப்பாவுக்குத் தெரிய வரணும்.....!",அவள் உறுதியுடன் கூறினாள்.
"அதுதான் எப்போன்னு நான் கேட்கிறேன்....?",அவன் குரலில் பிடிவாதம் ஏறிக் கொண்டே போனது.
அவள் மட்டும் என்ன செய்வாள்....?பாவம்...!இந்த விஷயத்தைப் பற்றி வீட்டில் பேசுவதற்கே அவளுக்குப் பயமாக இருந்தது.பயம் என்பதை விட பெரும் தயக்கம் என்று கூறலாம்....!என்னதான் ஆதித்யனின் காதலில் அவள் நனைந்து கொண்டிருந்தாலும்....பெற்றவர்களின் நம்பிக்கையை சிதைத்து விட்டோமோ என்ற குற்றவுணர்ச்சி அவள் மனதின் ஒரு மூலையில் அரித்துக் கொண்டேதான் இருந்தது....!
"என்னடி....?பதிலைக் காணோம்....?",அவன் மீண்டும் வினவவும்..
"இப்போ உங்களுக்கு என்னதான் பிரச்சனை ஆது.....?கொஞ்ச நாள் ஜாலியா லவ் பண்ணிட்டுத்தான் கல்யாணம் பண்ணிக்குவோமே.....?",அவள் சற்றுக் குரலை உயர்த்தினாள்.
"ஆமா....!அப்படியே....ஜாலியா லவ் பண்ணிட்டுத்தான் மறுவேலை....!ஒரு முத்தம் வாங்கறதுக்கே நாயா பேயா அலைய வேண்டி இருக்கு.....!",அவன் முணுமுணுக்க..
"அப்படி என்ன....நான் உங்களை அலைய விட்டேன்.....?சொல்லப் போனால்...நான்தான் உங்களுக்கு முதன் முதல்ல....முத்தம் கொடுத்தேன்.....!",சண்டைக்கு வந்தாள் அவள்.
"ஆமாண்டி....!நீ முத்தம் கொடுத்த லட்சணத்தைத்தான் நான் பார்த்தேனே.....?அதுக்கு பேர் 'முத்தம்'ன்னு வெளியே போய் சொல்லிடாதே.....!எல்லோரும் என்னைத்தான் ஒரு மாதிரி பார்ப்பாங்க......!",
"ஏன்....?எனக்கு முத்தம் கொடுக்கத் தெரியலைன்னா...உங்களை எதுக்கு எல்லாரும் ஒருமாதிரி பார்ப்பாங்க.....?",அதிமுக்கியமாய் அவள் கேள்வி கேட்டு வைக்க..
"பாரு....!இது கூட உனக்குத் தெரியல.....!உன்னையெல்லாம் வைச்சுக்கிட்டு....",அவன் தன் தலையில் அடித்துக் கொள்ளவும்....அவளுக்கு கோபம் வந்து விட்டது.
"ரொம்பவும்தான் டா என்னைக் கிண்டல் பண்ணற.....!போ....!",அவள் முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்ள..
"இந்தக் கோபத்துக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை....!என் அழகு பேபி....!உனக்கு ஒழுங்கா முத்தம் கொடுக்கத் தெரியலைன்னா....'இவன் பாரு....!இவளுக்கு இன்னும் ஒழுங்கா முத்தம் தரக் கூடச் சொல்லித் தரலை...'ன்னு என்னைத்தான் எல்லாரும் பேசுவாங்க....!அதுக்குத்தான் சொல்றேன்.....நான் சொல்லிக் கொடுக்கிறதை...ஒழுங்கா கத்துக்கோன்னு....!சரி...இப்ப ஒண்ணும் கெட்டுப் போகல....!இப்பவே உனக்கு க்ளாஸ் எடுக்கட்டா....?",முத்தத்தின் அறியாமைக்கு ஒரு புதுக் காரணத்தை சொல்லியபடி அந்தக் கள்வன் காரை ஓரங் கட்ட..
"டேய்....!நீ ஒண்ணும் சொல்லிக் கொடுக்க வேண்டாம்....!போடா....!",தன்னருகில் நெருங்கியவனை சரமாரியாக அடிக்க ஆரம்பித்தாள் அவள்.
அவளது அத்தனை அடிகளையும் சுகமாய் தாங்கியவன்,"நான் ரொம்ப நல்லா சொல்லிக் கொடுப்பேன் பேபி.....!அன்னைக்கு பார்த்தல்ல...அத்தானோட முத்தத்தை....!",அவன் தன் சட்டைக் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ள..
அவளது முகம் வெட்கத்தில் சிவந்தது."முத்தம்ங்கிற பேர்ல என் உதட்டைக் கடிச்சு வைச்சவன்தானே டா நீ.....!முரடா.....!",அவள் குரல்தான் மிரட்டியதே தவிர....முகம் காதலால் கனிந்திருந்தது.
"அன்னைக்கு ஏதோ ஆத்திர....அவசரத்துல கடிச்சு வைச்சுட்டேன்....!இப்போ ஒரு சான்ஸ் கொடு....மெதுவா....",அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே இடைமறித்தவள்....
"ச்சீய்....!இப்படியெல்லாம் பேசாதே....!முதல்ல வாயை மூடு டா....!",அவள் செல்லமாய் சிணுங்க...ஒரு பெருமூச்சுடன் காரைக் கிளப்பினான் அவன்.
"அது என்னடி.....?ஒரு சமயம்...'வாங்க ஆது....!போங்க ஆது...!'ன்னு மரியாதையா கூப்பிடற.....!இன்னொரு சமயம்....'வாடா...!போடா...!'ன்னு கண்டபடி திட்டற....?",
"அது....உன் மேல இருக்கிற காதல் அதிகமாகும் போது.....வார்த்தைகள் சுருங்கிடுது....!",அவள் கண்ணடிக்க..
"என் குட்டி பேபி....!",கொஞ்சினான் அவன்.
சிறிது நேரம் அமைதியில் கழிய....பிறகு அவளே ஆரம்பித்தாள்.
"ஏன் ஆது....?இப்பவே என்னை என் அம்மா வீட்டுக்கு அனுப்ப மாட்டேன்கிறீங்க....!நாளைக்கு நம்ம கல்யாணத்துக்குப் பிறகு சுத்தம்.....ஏன் இப்படி அடம் பிடிக்கறீங்க....?",அவள் திடீரென்று கேட்கவும்..
அவளை ஒரு மாதிரியாகத் திரும்பிப் பார்த்தவன்,"கல்யாணத்துக்கு அப்புறம்....அம்மா வீட்டையே மறந்திட வேண்டியதுதான்....!",அவன் முணுமுணுக்கவும்..
அவனுடைய வலிமையான புஜத்தில் தன் பூங்கரங்களால் ஒரு அடி போட்டபடி,"அப்படியெல்லாம் நான் இருக்க மாட்டேன் பாஸ்....!ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவை....நீங்க என் அம்மா வீட்டுக்கு என்னைக் கூட்டிட்டுப் போகணும்....!சொல்லிட்டேன்....!",சுட்டு விரலை நீட்டி எச்சரித்தாள் அவள்.
"அய்யோ....!மிரட்டலெல்லாம் பலமா இருக்கே.....!",பயந்ததைப் போல் நடித்தவன்....சிறிது நேரம் கழித்து..
"நீ என்னைத் தேடறதே இல்லை பேபி.....!",என்று குற்றம் சாட்டினான்.
"என்ன......?",
"நான் உன்னைத் தேடற அளவுக்கு....நீ என்னைத் தேடறது இல்ல.....!எப்ப பாரு அம்மா....அப்பான்னு அவங்க பின்னாடி சுத்தறயே தவிர....என் மேல உனக்கு அக்கறையே இல்ல....!",ஏனோ அவனைப் பார்க்கும் போது அவளுக்கு குழந்தையின் ஞாபகம் தான் வந்தது.
ஒரு தாய்க்கு இரு குழந்தைகள் இருக்கும் போது....ஒரு குழந்தை மட்டும் வந்து...'நீ அவனைத்தான் கவனிக்கிறாய்...!என்னைக் கவனிக்கறதே இல்லை...!',என்று குற்றம் சாட்டுமே....அதைப் போல சிறு பிள்ளையாய் குற்றம் சாட்டியது அந்த வளர்ந்த குழந்தை....!
இன்னதென்று அர்த்தம் விளங்காத புன்னகையைத் தன் இதழ்களில் தேக்கியபடி....அவனைக் காதலாகப் பார்த்தவள்....மெல்ல 'இல்லை...!' என்பதாய் தலையசைத்தாள்.அவள் கண்களில் வழிந்த காதலில் கட்டுண்டவனாய்....அவன்...அவள் முகம் நோக்கினான்.
மயக்கும் புன்னகையுடன் அவன் விழிகளுக்குள் ஆழ்ந்த பார்வையொன்றை வீசியவள்....மெல்லிய குரலில் பாட ஆரம்பித்தாள்.
"உன் தலைமுடி உதிர்வதைக் கூடத்
தாங்க முடியாது அன்பே....!
கண் இமைகளில் உன்னை நான்
தாங்குவேன்....!",
அவள் குரலில் பொங்கித் தெறித்து விழுந்த காதலில் மூழ்கியவனாய்....அவன் சாலையோரமாக காரை நிறுத்தி விட்டான்.
வெறிச்சோடி இருந்த சாலையில்....இரத்த நிற பூக்கள் சிதறியிருந்த மரத்தின் அடியில் கார் நின்றிருக்க....உள்ளே தேவதையைப் போல் பாடிக் கொண்டிருந்தாள் நித்திலா....!
"உன் ஒரு நொடி பிரிவினைக் கூட
ஏற்க முடியாது கண்ணே....!
என் கனவிலும் உன் முகம்
தேடுவேன்....!",
அவன் முன்னுச்சி முடியை செல்லமாக கலைத்து விட்டபடி அவள் மேலும் பாட ஆரம்பித்தாள்.
"உன்னை வானத்தில் தேடியே
மேகம் கண்ணீரை சிந்துதோ....?
உன்னை நான் கண்டு சேரவே
பூமி என்னோடு சுற்றுதோ....?",
அவளது இதழ்கள் பாடிக் கொண்டிருக்க....அவளது விரல்களோ அவனை சுட்டிக்காட்டியது...!தன்னை நோக்கி நீண்ட அவளது விரல்களைப் பற்றி அவளைத் தன்னருகில் இழுத்தவன்....அவளது நெற்றிப்பொட்டில் 'நச்'சென்று ஒரு முத்தம் வைக்க..
"உச்சந்தலை மீது நீ
வைக்கும் முத்தம்
என் உயிரின் மீது பட்டுத் தெறிக்கும்.....!
கைகள் பற்றிக் கொண்டே
பேசிக் கொள்ளும் நேரம்....இனிக்கும்...!",
அவளது கைகள் அவனது கைகளைத் தேடிச் சென்று....விரல்களோடு விரல்களாக பிணைத்துக் கொண்டது....!அவள் விழிகளுக்குள் தன்னைப் பாய்ச்சியபடியே....அவன்....தன் விரல்களோடு பிணைந்திருந்த அவளது உள்ளங்கையில் மெல்லிய முத்தம் வைத்தான்....!
"உன் கண்ணில் பட்ட பூவை....
கூந்தலுக்குள் வைப்பேன்....!
காலில் பட்ட கல்லை....
மூக்குத்தியில் வைப்பேன்....!
கையில் பட்ட என்னை....
உன் இதயப் பையில் வைப்பேன்....!
என்னைக் கொடுப்பேன்....!",
இப்பொழுது....அவளது கைகள் உயர்ந்து அவனது கழுத்தைச் சுற்றி வளைத்தன.....!அவளது இதழ்கள் செல்லமாக அவனது மீசை முடிகளைப் பிடித்து இழுத்தன...!
"நீயும் என்னை தினம் தேட வேண்டும் என்று....
தொலைந்து போக கொஞ்சம் ஆசை....!
நான் அணைத்து தூங்கும்
மீசை வைத்த பொம்மை நீயே....!",
அவளது பாடல் வரிகள் உணர்த்திய காதலில் அவன் மொத்தமாய் கரைந்து கொண்டிருந்தான்.அவனை இழுத்து....ஒரு வேகத்துடன் தன் மார்பில் கிடத்திக் கொண்டவள்....மேலும் பாட ஆரம்பித்தாள்...!
"மேய்ச்சல் நிலமாக வீழ்ந்து கிடக்கின்றேன்....
மேய்ந்து கொள்...என்னை முழுதும்....!
தொட்டில் இன்றி தூங்கும்
என் மார்பில் உந்தன் முத்தம் தினமும்....!",
அவளது விழிகளில் அப்படியொரு தாபம்....!இதுநாள் வரை....அவனது விழிகள் மட்டுமே அவளிடம் தனது வேட்கையைப் பிரதிபலிக்கும்....!இன்று....முதன்முறையாக...அவளது விழிகளில் தெறித்து விழுந்த வேட்கை அவனைப் பித்தனாக்கியது...!மேலும் பாடப் போனவளின் இதழ்களை...தனது ஒற்றை விரலை வைத்து தடுத்தவன்....அவளுக்கு சற்றும் குறையாத காதலோடு பாட ஆரம்பித்தான்.
"உன்னைப் பற்றி ஏறும் காதல் கொடி நானே....!
உன் கையெழுத்தை தாங்கும் காகிதமும் நானே...!
உன் உள்ளங்கையில் சுற்றும் பம்பரமும் நானே....!
எந்தன் உயிரே....!",
அவன் பாடி முடித்த அடுத்த நொடி....அவன் மார்பில் புதைந்து கொண்டாள் அவள்.
"என்னுடைய காதலும்....உங்க மீதான என்னுடைய தேடலும்...இந்த ஒரு பாட்டுல அடங்கி விடக் கூடியது இல்லை ஆது....!என்னுடைய காதல் ரொம்ப ரொம்ப பெரியது.....!பரந்து விரிஞ்சது....!உங்களுடைய காதல் எப்போ ஏற்பட்டுச்சு ஆது.....?என்னைப் பார்த்த பிறகு வந்ததுதான் உங்களுடைய காதல்....!ஆனால்....என்னுடைய காதல் எப்போ வந்தது தெரியுமா.....?எனக்கு விவரம் தெரிந்த வயசிலிருந்து....என்னுடைய மொத்தக் காதலும்....என்னுடைய வருங்காலக் கணவனுக்கு மட்டும்தான் அப்படின்னு ஒரு பொக்கிஷம் மாதிரி சேர்த்து சேர்த்து வைச்சிருக்கிறேன்......!
இவ்வளவு வருஷமா என் இதயத்துக்குள்ள பூட்டிக் கிடந்த....என்னுடைய அத்தனைக் காதலுக்கும் சொந்தக்காரன்....உரிமைக்காரன் நீங்க மட்டும்தான்.....!ஏன்....?அந்தக் காதல் மேல எனக்குக் கூட உரிமையில்லை.....!அந்தக் காதலுக்கான மொத்த உரிமையையும்....நான் உங்களுக்கு கொடுத்திட்டேன்.....!",ஒரு மந்திரம் போல்....அவனது மார்பில் புதைந்தபடி....அவனது இதயத் துடிப்பின் ஒலியைக் காதில் கேட்டபடி கூறிக் கொண்டிருந்தாள் நித்திலா....!
அவள் இந்தளவிற்கு தன்னைக் காதலிப்பாள் என்று ஆதித்யன் எண்ணிக் கூடப் பார்த்ததில்லை.'அதிரடியாக அவளது மனதில் அமர்ந்து விட்டோம்....!' என்றுதான் அவன் எண்ணிக் கொண்டிருந்தான்....!தன்னுடைய அடாவடியான காதலுக்கு சற்றும் குறையாத காதலை அவள் காண்பிப்பாள் என்று அவன் நினைத்திருக்கவில்லை....!
இதுதான் நித்திலாவினுடைய காதல்.....!ஆதித்யனின் காதல் முரட்டுத்தனமானது என்றால்....நித்திலாவின் காதல் மென்மையானது.....!அவனுடையது பிடிவாதம் கலந்த அராஜகக் காதல் என்றால்....இவளுடையது வன்மை கலந்த மென்மையானது.....!
காதல் என்ற ஒன்றில் மட்டும்தான் வன்மையும் இருக்கும்.....!மென்மையும் இருக்கும்....!காதலால் மட்டும்தான் சுடு நிலவாய் தகிக்கவும் முடியும்....!தண் கதிரவனாய் குளிர வைக்கவும் முடியும்....!முரண்பாட்டின் மொத்த உருவமே காதல்தான்.....!ஆனால்....அதுவும் ஒரு செல்லமான....சுகமான....இம்சையான முரண்பாடுதான்.....!
"ஐ லவ் யூ டி.....!",அவளது நெற்றிப் பொட்டில் இதழ் பதித்து விழிகளை மூடிக் கொண்டான் அவன்.எவ்வளவு நேரம் சென்றதோ....தெரியவில்லை....!ஒருவர் மேல் மற்றொருவர் வைத்திருக்கும் காதலில் சுகமாய் நனைந்து கொண்டிருந்தவர்களை.....சாலையில் சென்ற ஒரு வாகனத்தின் ஒலி மீட்டு எடுத்து வந்தது.
சிரித்தபடியே அவளை விட்டு விலகியவன்....காரைக் கிளப்பினான்.இருவருக்குள்ளும் அழகான மௌனம் ஆட்சி செய்து கொண்டிருந்தது....!காதல் கரைபுரண்டு ஓடும் போது....அங்கு வார்த்தைகளுக்கு வேலையில்லாமல் போகும்....!காதலில் மௌனம் அழகானது....!மிக மிக அழகானது....!
அந்தப் பிரம்மாண்டமான நகைக்கடையின் முன் காரை நிறுத்தியவன்....அவளை வைர நகை இருக்கும் பிரிவிற்கு போகச் சொல்லிவிட்டு...காரை பார்க் செய்யப் போனான்.
இவன் காரை நிறுத்தி விட்டு வரும் போது....நித்திலா....ஒரு நகையை ஆர்வம் மின்ன பார்த்துக் கொண்டிருந்தாள்.
"ட்ரை பண்ணிப் பாருங்க மேடம்.....!அப்போத்தான் செலெக்ட் பண்ண ஈஸியா இருக்கும்......!",என்றபடி அங்கு வேலை செய்யும் ஒரு பெண் நித்திலாவின் கழுத்தில் அந்த நகையை மாட்டிவிட்டாள்.
அவளது சங்கு கழுத்திற்கு அந்த நகை வெகு பொருத்தமாக இருந்தது.கழுத்தோடு ஒட்டியபடி....நுண்ணிய வேலைப்பாடுகளுடன் ஜொலித்துக் கொண்டிருந்தது அந்த நகை....!
இதை அனைத்தையும் ஓரமாய் நின்றபடி ரசித்துக் கொண்டிருந்தான் ஆதித்யன்.
"நைஸ்.....!",கண்ணாடியில் தெரிந்த தனது பிம்மத்தைப் பார்த்தவள்..."போதும்.....!கழட்டி விடுங்க.....!",எனவும் அந்தப் பணிப்பெண் கழட்டி விட்டார்.
கூடவே...."உங்களுக்கு ரொம்ப பொருத்தமா இருக்கு மேடம்.....!",என்ற பாராட்டு வேறு....!
"என்ன பேபி....பிடிச்சிருக்கா.....?",தன் காதருகில் ஒலித்த ஆதித்யனுடைய மென் குரலில் அவனைத் திரும்பிப் பார்த்தவள்..
"ம்.....!சூப்பரா இருக்கு ஆது....!இதையே வாங்கிக்கலாம்......!",என்றாள்.
"ம்ஹீம்....!இது வேண்டாம் பேபி.....!வேற பாரு.....!",அவன் மறுக்கவும்..
"ஏன் ஆது.....?இதுவே நல்லாதானே இருக்கு....?",என்றபடியே மற்ற நகைகளை பார்வையிட ஆரம்பித்தாள்.
இருவரும் சேர்ந்து காதணி...மோதிரம்...வளையல் என அனைத்தும் செட்டாக இருக்கும் படியான ஒரு நகையை சுமித்ராவிற்காக தேர்ந்தெடுத்தனர்.
பில் போடப் போகும் போது....நித்திலா முதலில் தேர்ந்தெடுத்த நகையையும் சேர்த்து....ஆதித்யன் பில் போடச் சொல்ல..
"அந்த நகையை வேண்டாம்ன்னு சொன்னீங்களே.....?",நித்திலா கேள்வியெழுப்ப..
அவளைக் காதலோடு நோக்கியவன்,"என் குட்டிம்மா ரொம்ப ஆசைப்பட்டு அதைப் போட்டு பார்த்தாங்களா.....?அதுதான்....!இது அவங்களுக்காக.....!",எனவும் அவள் விழி விரித்தாள்.
"நோ....!நோ ஆது....!நான்...அது ஏதோ சும்மா போட்டுப் பார்த்தேன்.....!எனக்கு எதுவும் வேண்டாம்....!",என்று அவசர அவசரமாக மறுக்க....அவனது புருவங்கள் முடிச்சிட்டன.
"ஏன்.....?",
"இவ்வளவு காஸ்ட்லியா எனக்கு வேண்டாம் ஆது....!ஏற்கனவே....மோதிரம்...செயின் அப்படின்னு நீங்க வைரத்துல வாங்கிக் கொடுத்திருக்கீங்க.....!",
"ஸோ வாட்....?",தோளைக் குலுக்கியவன்....அந்த நகையை பில் போட அனுப்பி வைத்தான்.
"ஆது....!இதெல்லாம் எனக்கு வேண்டாம்....!",அவள் மீண்டும் பழைய பல்லவியை ஆரம்பிக்க..
"ஷ்....!பேபி....!என் பொண்டாட்டிக்கு நான் வாங்கித் தர்றேன்....!நீ கொஞ்சம் அமைதியா இருக்கியா....?இது என்ன பேச்சுன்னு இப்படி பேசிக்கிட்டு இருக்க.....?",அவன் சற்றுக் கண்டிக்கும் தொனியில் பேசவும் அவள் அமைதியாகி விட்டாள்.
அப்பொழுதும் முரண்டிக் கொண்டே இருந்தவள்...காரில் ஏறியதும் ஆரம்பித்தாள்.
"ஆது.....!",என்று ஆரம்பித்தவளைத் திரும்பிப் பார்த்து அவன் ஒரு முறை முறைத்தான்.'கப்சிப்'பென்று வாயை மூடிக் கொண்டாள் அவள்.
சற்று நேர அமைதிக்குப் பிறகு அவளே இறங்கி வந்தாள்.
"சரி ஆது....!அந்த நகையை நான் போட்டுக்கிறேன்....!ஆனால்...எங்க வீட்டுக்கு எடுத்துட்டுப் போக முடியாது.....!",அவன் அப்பொழுதும் அமைதியாக காரை ஓட்டிக் கொண்டிருந்தான்.
"நான்தான் சரின்னு சொல்லிட்டேன்ல ஆது....!இன்னும் ஏன் அமைதியா இருக்கீங்க....?",அவள் மேலும் நச்சரிக்க...அவன் அப்பொழுதும் அவளைத் திரும்பிப் பார்த்தானில்லை.
சிறிது நேரம் பொறுத்துப் பார்த்தவள்,"இப்போ என்னை என்னதான் பண்ண சொல்றீங்க....?",அவள் கத்திய மறுநொடி....சடாரென்று திரும்பிப் பார்த்தவன்..
"நான் என்ன சொல்றது....?அதுதான் உனக்குன்னு சொந்தமா மூளை இருக்கல்ல.....?யோசி....!",அவன் குரலில் கோபம் எட்டிப்பார்த்தது.
'தான் வாங்கித் தரும் பரிசை அவள் மறுக்கிறாள்....!' என்பதில் வந்த கோபம் அது....!இன்னும் தன்னோடு உரிமையுடன் பழக மாட்டேன் என்கிறாளே....?என்ற ஆதங்கத்தில் வந்த கோபம் அது....!
அவனுடைய கோபத்தில் சிறிது நேரம் கையைப் பிசைந்து கொண்டு வந்தவள்...பிறகு அவளே ஆரம்பித்தாள்.
"எதுக்கு ஆது இவ்வளவு கோபப்படறீங்க....?நான் அந்த நகையை வேண்டாம்ன்னு சொல்லலையே....அதைப் போட்டுக்கிறேன்னு தானே சொல்றேன்....!என்ன...அதை என் வீட்டுக்கு எடுத்துட்டுப் போக முடியாது....அவ்வளவுதான்....!என் நிலைமையையும் கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க ஆது....!",மெல்லிய குரலில் அவள் பேச பேச...அவனது கோபம் மட்டுப்பட்டது.
"சரி...!சுமித்ரா கல்யாணத்துக்கு போட்டுக்கோ....!",சுருக்கமாக உரைத்தவன் பின்பு சாலையில் கவனமானான்.
"இல்ல...!நீங்க இன்னும் கோபமாகத்தான் இருக்கீங்க.....!",மெலிதாய் அவள் சிணுங்க..
"இல்லை டி....!சந்தோஷமாகத்தான் சொல்றேன்....!கெளதம்...சுமித்ரா கல்யாணத்தப்ப இந்த நகையை போட்டுட்டு....கழட்டி கொடு....!நான் கொண்டு போய் நம்ம வீட்டில வைச்சிருக்கிறேன்....!போதுமா....?",அவள் சிணுங்களில் தன் கோபத்தை மறந்தவனாய் அவன் இலகுவான குரலில் கேட்க..
"ம்ம்....!",மகிழ்ச்சியாகத் தலையை ஆட்டியபடி அவனது தோளில் சாய்ந்து கொண்டாள் அவள்...!
அகம் தொட வருவான்....!!!
ப்ரெண்ட்ஸ்...கதை போர் அடிக்கற மாதிரி போகுதா...இது கொஞ்சம் பெரிய கதை தான்..64 எபிஸ் வரும்..போர் அடிக்கற மாதிரி இருந்தா சொல்லுங்க..
கருத்துகள்
கருத்துரையிடுக