எவனோ என் அகம் தொட்டு விட்டான் - அகம் 53

 அத்தியாயம் 53 :

 

சோக சித்திரமாய் கட்டிலில் சாய்ந்திருந்த நித்திலாவின் விழிகள் இரண்டும் அழுதழுது சிவந்து போயிருந்தன.பால் போன்ற வெண்மையான அவளின் கன்னங்களில்....ஆதித்யனின் விரல் தடங்கள் பதிந்து கன்றி சிவந்திருந்தன.

 

இளங்காலைப் பொழுது மெல்ல மெல்ல புலர்ந்து கொண்டிருக்க....சூரியனின் கதிர்கள் அறைக்குள் எட்டிப் பார்க்க ஆரம்பித்தன.இரவு முழுவதும் அழுது கொண்டிருந்தவளின் கண்ணீர் கூட வற்றிப் போயிருந்தது.அவள் அழுது கொண்டிருந்ததை...அவன் அறிந்திருந்தாலும் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டான்.இரவு இருவருமே சாப்பிடவில்லை.தங்களது அறைகளுக்குள் சென்று முடங்கிக் கொண்டனர்.

 

கையில்....ப்ரெட் டோஸ்ட்...ஆப்பிள் ஜூஸ் அடங்கிய தட்டுடன் நித்திலாவின் அறைக்குள் நுழைந்தான் ஆதித்யன்.

 

"கமான் பேபி....!வேக் அப்....!எழுந்து போய் ப்ரெஷ் ஆகிட்டு வா...!ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிடலாம்....!",கையிலிருந்த தட்டை டீபாயின் மேல் வைத்தபடி அவன் அவசரப்படுத்த..

 

"ம்ப்ச்....!",சலிப்போடு அவனை நிமிர்ந்து பார்த்தவள்...ஒன்றும் பேசாமல் மீண்டும் கட்டிலில் சாய்ந்து கொண்டாள்.

 

அவளருகில் வந்து அவள் கையைப் பற்றி எழுப்பியவன்,"நீ இப்படியே அழுதுக்கிட்டே உட்கார்ந்திருந்தால் மட்டும் ஒண்ணும் ஆகடப் போறதில்லை....!நீ என் பொண்டாட்டியாகப் போறது உறுதி....!ஸோ...நிதர்சனத்தைப் புரிஞ்சு நடந்துக்கப் பாரு....!",அழுத்தமான குரலில் உரைத்தவன்....அவளை குளியலறையை நோக்கித் தள்ளினான்.

 

"முடியாது....!நீங்க சொல்றது நடக்காது....!நான் நடக்க விட மாட்டேன்....!",ஆத்திரத்துடன் கத்தியவள்...அவள் கையை உதறிக் கொண்டு...மீண்டும் கட்டிலில் வந்து அமர்ந்தாள்.

 

"நீ எல்லாம்...சொன்னால் கேட்க மாட்ட....!",பல்லைக் கடித்தவன் அவளை அப்படியே அள்ளிக் கொண்டு போய் குளியலறையில் இறக்கி விட்டான்.

 

"உன்கிட்ட பொறுமையா சொல்லிக்கிட்டு இருக்க கூடாது டி....!முரட்டுத்தனமா நடந்துக்கிட்டாதான்...நீ எல்லாம் சொன்ன பேச்சு கேட்ப....!",என்று கத்தியவன் அவளது கழுத்தில் கிடந்த துப்பட்டாவை உருவி எறிந்தான்.

 

"ஏய்...ஏய்....!என்ன பண்றீங்க....?விடுங்க....!",பதறியபடி திமிறியவளின் கையைப் பிடித்து விடாப்பிடியாய் இழுத்துச் சென்றவன்....அங்கிருந்த பாத்டப்பில் நீரை நிரப்பி...அவளை அதில் தள்ளி விட்டான்.

 

'தொப்'பென்று தண்ணீரில் விழுந்தவள்,"அய்யோ...!என்ன பண்றீங்க....?",தன்னை சமாளித்துக் கொண்டு எழுந்து அமர்ந்தபடி கத்தினாள்.

 

"ம்...உன்னைக் குளிக்க வைக்கிறேன்....!",கூறியபடியே அவன்...அவளை நெருங்க..

 

"ஐயோ....!ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம்....!நீங்க முதல்ல வெளியே போங்க....!",எரிச்சலுடன் கத்தினாள் அவள்.

 

"ஏன் பேபி....?நீதான்...நான் சொன்னால் கேட்க மாட்டியே....?அதுதான்...டைரக்ட்டா ஆக்சன்ல இறங்கிட்டேன்....!",ஒன்றும் அறியாதவனைப் போல் அவன் கூற..

 

"அப்பா....சாமி....!தெரியாம சொல்லிட்டேன்....!நீங்க வெளியே போய் தொலைங்க....!நான் குளிச்சிட்டு வர்றேன்.....!",தன் பிடிவாதம் அவன் முன் செல்லுபடியாகாத கடுப்பில் முணுமுணுத்தார்.

 

"ஹ்ம்ம்....!குட் கேர்ள்....!",என்றபடி வெளியேறி விட்டான் அவன்.

 

குளித்து முடித்த பிறகுதான் அவளுக்கு உரைத்தது...மாற்றுடை எதுவும் இல்லையென்று....!அங்கிருந்த பூந்துவாலையை உடலில் சுற்றிக் கொண்டவள்..

 

'இப்போ என்ன பண்றதாம்....?சும்மா குளி..குளின்னு இல்லாத அழிச்சாட்டியம் எல்லாம் பண்ணி...என்னைப் படுத்தி எடுத்தானே....!சரியான இம்சை....!',அவள் முணுமுணுத்துக் கொண்டிருக்கும் போதே....வெளியே இருந்து ஆதித்யனின் குரல் கேட்டது.

 

"என்னைத் திட்டினது போதும்....!வெளியே வா பேபி....!",

 

"ப்ச்....!எப்படி வர்றதாம்....?மாத்திக்கறதுக்கு வேற ட்ரெஸ் இல்ல....!",இதைக் கூறும் போதே வெட்கத்தில் அவள் குரல் உள்ளே போய்விட்டது.

 

"வாவ்....!சூப்பர் பேபி....!ப்ளீஸ்...ப்ளீஸ்....!கதவைத் திற டி...!",ஜொள்ளினான் அவன்.

 

"ம்ப்ச்....!விளையாடாதீங்க ஆது.....!",அவள் சிணுங்க..

 

"சரி...சரி....!சிணுங்கி சிணுங்கியே என்னைக் கொல்லாதே....!உனக்குத் தேவையான ட்ரெஸ் எல்லாம் வெளியே கட்டில் மேல வைச்சிருக்கிறேன்....!வந்து எடுத்துக்கோ....!",

 

"எப்படி எல்லாம் ரெடி பண்ணுனீங்க....?",

 

"காலையில எழுந்ததுமே கடைக்குப் போய் உனக்குத் தேவையானதெல்லாம் வாங்கிட்டு வந்துட்டேன்....!",

 

'இதுல எல்லாம் ஒண்ணும் குறைச்சல் இல்லை....!',அவள் வாய்க்குள் முணுமுணுக்க..

 

"வேற எதிலேயும் நான் குறைச்சல் இல்லைதான்....!பார்க்கிறயா....?",உல்லாசமாய் வினவினான் அவன்.

 

"ஆமா....!எனக்கு வேற வேலை இல்லை பாருங்க....!சரி...!வெளியே போங்க....!",அவனது பேச்சில் அவளையும் அறியாமல் அவள் முகம் நாணத்தில் சிவந்து போனது.

 

"நான் எதுக்குடி வெளியே போகணும்....?நான் உன் புருஷன் தானே....!நான் வெளியே போக மாட்டேன்....!",அவன் சட்டம் பேச....அவளிடம் பதில் இல்லை.

 

சிறிது நேரம் அமைதி காத்தவள்...பிறகு,"ப்ளீஸ்.....!",என்றாள் கெஞ்சும் குரலில்.

 

அவளது குரலில் எதைக் கண்டானோ,"சரி...சரி...!வெளியே போகிறேன்....!நீ கிளம்பி வா....!",ஒரு பெருமூச்சுடன் வெளியேறிவிட்டான் அவன்.

 

மெதுவாகக் கதவைத் திறந்து பார்த்தவள்....அவன் இல்லாததை உறுதிப்படுத்திக் கொண்டுதான் வெளியே வந்தாள்.

 

மூன்று பைகளில் அவளுக்குத் தேவையான உடைகள் அனைத்தும் இருந்தன.சுடிதார்...நைட்டி மற்றும் அவளுக்குத் தேவையான உள்ளாடைகள் என அனைத்தும் இருந்தன.

 

'ச்சீய்....!எதையெல்லாம் வாங்கியிருக்கிறான் பாரு...!',லஜ்ஜையுடன் முகம் சிவந்தாள் அவள்.அவன் வாங்கியிருந்த ரெடிமேட் சுடிதார் வெகு கச்சிதமாக அவளது உடலைத் தழுவியிருந்தது.

 

'பொறுக்கி.....!அளவெல்லாம் பார்த்து ரொம்ப கரெக்ட்டா வாங்கியிருக்கிறான்....!ரௌடி....!',அவள் முகம் குங்குமத்தைப் பூசிக்கொண்டது போல் சிவந்து போனது.

 

அவள் கிளம்பி முடிக்கவும்...அவன் ப்ரெட் டோஸ்ட்....ஆப்பிள் ஜூஸ் அடங்கிய தட்டுடன் உள்ளே வருவதற்கும் சரியாய் இருந்தது.

 

'ஹைய்யோ...!இந்த ரூம்ல லாக் இல்லைல்ல....!நல்லவேளை...நான் ட்ரெஸ் மாற்றிய பிறகு வந்தான்....!',படபடப்புடன் நினைத்துக் கொண்டாள் அவள்.

 

"முதல்ல கொண்டு வந்தது ஆறிப் போச்சு...!அதுதான் வேற டோஸ்ட் போட்டு எடுத்துட்டு வந்தேன்....!",என்றவனின் பார்வை அவளது சுடிதாரில் நிலைத்தது.

 

அவனது உதடுகளில் ஒரு ரகசியப் புன்னகை வந்தமர...அதைக் கண்டு கொண்டவள் இமைகள் படபடக்க இதழ்களை மடித்து அழுந்தக் கடித்துக் கொண்டாள்.

 

தன் சிகையை அழுந்தக் கோதி தன் உணர்வுகளை சமன்படுத்தியவன்,"சரி....!வா...!சாப்பிடலாம்....!",என்று அழைத்தான்.

 

அதுவரை சுற்றியிருந்த கண்ணுக்குத் தெரியாத மாயவலை பட்டென்று அறுந்து விழ....தற்போதைய நிலை அவளுக்கு உரைத்தது.

 

'தன்னை அவன் அங்கு வலுக்கட்டாயமாகத் தங்க வைத்தது....!அவன் இட்ட கட்டளைகள்....!',என அனைத்தும் அவள் நெற்றியில் அறைய....மீண்டும் தன் கூட்டிற்குள் ஒடுங்கினாள்.

 

"எனக்கு வேண்டாம்....!",அவள் கூறிய விதத்தில் அவன் புருவம் சுருங்கியது.

 

"ஓ...!வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறிடுச்சா....?",அவன் உதட்டோரங்கள் கேலியாய் வளைந்தன.

 

"ஆமாம்...!நீங்க எப்படியோ வைச்சுக்கோங்க....!எனக்கு இதெல்லாம் வேண்டாம்....!முதல்ல

 இதை தூக்கிட்டு வெளியே போங்க....!",வள்ளென்று அவள் எரிந்து விழுந்ததில்...அவனுக்கு சுள்ளென்று கோபம் வந்தது.

 

முயன்று தன் கோபத்தை அடக்கியவன்,"நிலா...!எனக்குப் பொறுமை ரொம்ப குறைவுன்னு உனக்கு நல்லாவே தெரியும்....!என்னைக் கோபப்படுத்தி பார்க்காம....அமைதியா வந்து சாப்பிடு....!",அமைதியாக...அழுத்தமாகக் கூறினான்.

 

அவள் பாட்டிற்கு அவனை கண்டுகொள்ளாமல் சென்று கட்டிலில் அமர்ந்து கொண்டாள்.

 

ஜிவு ஜிவு என்று கோபம் ஏற,"நி.த்.தி.லா...",ஒவ்வொரு எழுத்தையும் அழுத்தி உச்சரிக்க....பல்லைக் கடித்துக் கொண்டு அவன் கர்ஜித்த விதத்தில்....அவளது கரம் தானாய் உயர்ந்து அவனது கையிலிருந்த ஆப்பிள் ஜுஸை  வாங்கிப் பருக ஆரம்பித்தன.

 

அவளுக்குத் தெரியும்....!அவன் மிக மிக கோபமாக இருக்கும் சமயங்களில் மட்டும்தான்....அவளை 'நித்திலா' என்று அழைப்பான்....!மற்ற சமயங்களில் எல்லாம் 'பேபி...!'...'குட்டிம்மா..!' என்ற அழைப்புதான்....!'இதோ கோபம் வரப் போகிறது..' எனும் சமயங்களில் அவன் அழைப்பு 'நிலா...' என்று மாறும்....!அதிகமாகக் கோபம் வந்துவிட்டால்....அந்த அழைப்பு 'நித்திலா...'வாக மாறிவிடும்...!

 

அது போன்ற சமயங்களில்...அவனது கோபத்தைக் கண்டு கொண்டு அவள் அமைதியாகப் போய் விடுவாள்...இப்பொழுதும்...சமர்த்தாய் ஆப்பிள் ஜுஸை காலி செய்து விட்டு டீபாயின் மேல் வைத்தாள்.

 

"ஹ்ம்ம்....!குட் கேர்ள்....!அப்படியே ப்ரெட் டோஸ்ட்டையும் காலி பண்ணிடு....!",அவள் முன் தட்டை நீட்ட....ஒன்றும் பேசாமல் அமைதியாய் அதை எடுத்து சாப்பிட்டாள்.சாப்பிட சாப்பிடத்தான் பசியின் வேகமே தெரிந்தது.நேற்று மதியத்திலிருந்து ஒன்றும் சாப்பிடாததினால் ஏற்பட்ட பசியில்....தட்டிலிருந்த அனைத்தையும் காலி செய்திருந்தாள்.

 

"தட்ஸ் மை குட் பேபி....!இப்போ நீ உன் அழுகையை கண்ட்னியூ பண்ணு....!அத்தான் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்....!சரியா....?",குறும்பாக உரைத்தபடி தட்டை எடுத்துக் கொண்டு வெளியேறினான் ஆதித்யன்.

 

"ச்சே....!",ஆத்திரத்துடன் தலையணையை எடுத்து அவன் சென்ற வழியை நோக்கி வீசியவளுக்கு...கோபத்திலும்...இயலாமையிலும்....மீண்டும் கண்ணீர் துளிர்த்தது.அவள் மீண்டும் தன் அழுகையில் கரைய....அவன் தன் அலுவலில் மூழ்கினான்.இடையில் நான்கு...ஐந்து முறை கௌதமிடம் வந்த அழைப்புகளை அவன் ஏற்கவில்லை.

 

'இப்பொழுதே சொன்னால்...அவன் கோபப்படுவான்....!மாலை வரைக்கும் பொறுத்திருந்து விட்டு அவனிடம் சொல்லலாம்....!',என்பது ஆதித்யனின் எண்ணமாக இருந்தது.

 

மதியம் நூடுல்ஸ் செய்து நித்திலாவிற்காக எடுத்துச் சென்றான்.அப்பொழுதும் 'சாப்பிட மாட்டேன்....!' என்று முரண்டு பிடித்தவளை...அதட்டி உருட்டி சாப்பிட வைத்தான்.அந்த அறையே கதியென்று கிடந்தாள் நித்திலா.

 

 தன் கைகளை மடித்து தலைக்கு மேல் கண்களை மறைத்தவாறு...அந்த ஹால் சோபாவில் படுத்திருந்த ஆதித்யனின் அருகில் தயங்கித் தயங்கி வந்த நித்திலா....அவன் கையைப் பற்றியபடி கீழே தரையில் அமர்ந்தாள்.

 

"ஆது....!",மெதுவாக அவள் அழைக்க..

 

"ம்...!",கண்களைத் திறக்காமலேயே 'உம்' கொட்டினான் அவன்.

 

"நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்....!",

 

"பேசு....!",அவன் அப்பொழுதும் கண்களைத் திறக்கவில்லை.

 

"இப்படியே படுத்திருந்தால் எப்படி பேசறது....?கொஞ்சம் எழுந்து உட்காருங்க....!",

 

"எப்படி இருந்தாலும்...நீ பேச வர்ற விஷயத்தை நான் கேட்கப் போறதில்லை....!ஸோ...நான் படுத்திட்டே இருக்கேன்....!நீ சொல்லு....!",அலட்சியமாகக் கூறினான் அவன்.

 

'சரி...!நாம பேச வர்ற விஷயத்தைக் காதிலேயாவது வாங்குவாரல்ல...!',தன் மனதைத் தேற்றியபடி அவனிடம் பேச ஆரம்பித்தாள்.

 

"நீங்க பண்ணிக்கிட்டு இருக்கிற காரியம் சரியா....?கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க ஆது...!நம்ம பெத்தவங்களுடைய ஆசிர்வாதம் இல்லாம...நம்ம கல்யாணம் பண்ணிக்கிறது தப்பு இல்லையா....?அவங்க மனசு எவ்வளவு கஷ்டப்படும்ன்னு கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க....!அவங்களுக்கும் எவ்வளவு ஆசைகள் இருக்கும்...நம்ம பிள்ளைகளோட கல்யாணத்தைப் பார்க்கணும்....!எப்படியெல்லாம் கல்யாணத்தை நடத்தணும்...அப்படின்னு நிறைய கனவுகள் வைச்சிருப்பாங்க....!",அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே குறுக்கே புகுந்தவன்..

 

"அவங்க கனவுகள் எல்லாம் கனவாகவே போனதுக்கு காரணம் நீதான் டி....!அவங்களுடைய ஆசைகளை...நீதான் குழி தோண்டி புதைச்சிட்டே....!உன்னாலதான்...இவ்வளவு அவசரமா...நம்ம சொந்த பந்தங்கள் கூட இல்லாம நம்ம கல்யாணம் நடக்கறதுக்கான மொத்தக் காரணமும் நீதான்....!உன்னைக் காதலிச்ச பாவத்துக்கு...இதை எனக்கானத் தண்டனையா எடுத்துக்கிறேன்....!",படபடவென்று பொரிந்தான் அவன்.

 

"மனசாட்சி இல்லாம பேசாதீங்க....!யாருமே இல்லாம அநாதை மாதிரி நம்ம கல்யாணம் நடக்கறதுக்கு நீங்கதான் காரணம்....!நீங்க நினைச்சால்...இப்பவே இந்த கல்யாணத்தை நிறுத்த முடியும்....!என்னை ஏமாத்தி கடத்திட்டு வந்து...இப்படி அடைச்சு வைச்சு....கல்யாணத்துக்கு கட்டாயப்படுத்தறது நீங்கதான்....!",கோபத்தில் மூச்சு வாங்கியது அவளுக்கு.

 

"நானா....?நல்லா யோசிச்சுப் பாரு பேபி....!நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி வற்புறுத்தறேனா...?நான் எவ்வளவு தாராள மனப்பான்மையோட உனக்கு ரெண்டு வழியை காண்பிச்சிருக்கிறேன்....!அந்த ரெண்டுல வழியில...நீ எந்த வழியை தேர்ந்தெடுத்தாலும்...எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லைன்னு நான் சொல்லிட்டேன்....!

 

உன் அம்மா அப்பா சம்மதம் இல்லாம...உனக்கு கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்லைன்னா...நோ ப்ராப்ளம்....!நான் உன்னைக் கட்டாயப்படுத்தவே மாட்டேன்....!அதுதான் உனக்கு இன்னொரு ஆப்ஷன் இருக்கே....!",அவன் விஷமமாய் கண்சிமிட்ட..

 

"ச்சே....!",பல்லைக் கடித்தாள் அவள்.

 

"நீங்க ஏன் இப்படி மாறுனீங்க....?ரொம்ப கெட்டவன் நீ....!",அழுகையினூடே அவள் கூற..

 

"நான் ஏற்கனவே சொன்னதுதான் பேபி....!உன்னை...உனக்காகக் கூட விட்டுத் தர நான் தயாரா இல்ல....!இப்படி...என் முன்னாடி அழுது...என் மூடை ஸ்பாயில் பண்ணாம...உள்ளே போய் உட்கார்ந்து அழு...போ....!அதுக்குத்தான் உனக்குத் தனியா ஒரு ரூம் கொடுத்திருக்கிறேனே.....போ...போ....!",அசால்ட்டாகக் கூறியபடி மீண்டும் கண்களை மூடிக் கொண்டான் ஆதித்யன்.

 

சில கணம் அவனையே வெறித்தவள்,"இதுக்கெல்லாம் சேர்த்து வைச்சு அனுபவிக்கப் போறீங்க....!",சாபம் கொடுப்பவள் போல் அவள் கூற..

 

"ஐ ஆம் வெயிட்டிங் பேபி....!",கண்களைத் திறக்காமல் குறுஞ்சிரிப்புடன் கூறியவனை முறைத்தபடியே அறைக்குள் சென்று விட்டாள் நித்திலா.

 

அவள் சென்றதும் கண்களைத் திறந்த ஆதித்யனின் முகத்தில் வலி...வலி...வலி மட்டுமே விரவியிருந்தது.

 

'எனக்கு மட்டும் ஆசையா பேபி....உன்னைக் கஷ்டப்படுத்தணும்ன்னு....!உன்னைக் காயப்படுத்தற ஒவ்வொரு நொடியும் உள்ளுக்குள்ள நான் கதறித் துடிச்சுக்கிட்டு இருக்கேன்...!உன் கண்கள்ல இருந்து விழற ஒவ்வொரு கண்ணீர்த்துளியும்...பெரும்பாறையா மாறி என் இதயத்து மேல விழுது....!நான் உன்னைக் கட்டாயப்படுத்தித்தான் ஆகணும் டி....!நம்ம காதலுக்காக நான் போராடித்தான் ஆகணும்.....!',அவன் மனம் முழுவதும் வேதனை மட்டுமே.

 

இரு மனங்கள் இணைந்து போராட வேண்டிய போராட்டத்தில்...ஒரு மனம் மட்டும் தன்னந்தனியாய் நின்று தங்களது காதலுக்கான போராட்டத்தை தொடங்கியது.அந்தப் போராட்டத்தில் சரிபங்கு எடுக்க வேண்டிய இன்னொரு மனமோ....அந்த யுத்த களத்தில் தனியாய் நின்று....காதல் மனதுக்கு எதிராய் போர் கொடியைத் தூக்கியது....!

 

இரு மனங்களின் பக்கமும் நியாயம் இருந்தது...!தர்மம் இருந்தது...!காதல் என்னும் யுத்த களத்தைப் பொறுத்தவரை நியாயங்களும்....தர்மங்களும் வேறுவிதமானவை....!

 

ஆதித்யனின் போராட்டத்தில் இருந்த நியாயம்...காதலின் தர்மம்...!நித்திலாவின் பாசப் போராட்டத்தில் இருந்த தவிப்பு...தொப்புள்குடி உறவின் சத்தியம்...!

 

பதட்டத்தில் நகத்தைக் கடித்துத் துப்பியபடி அமர்ந்திருந்த நித்திலாவின் கவனம் முழுவதும் கடிகாரத்தின் மேலேயே இருந்தது.

 

'மணி 7.55 ஆச்சு...!இன்னும் கொஞ்ச நேரம் தான்...!முடிவு முடிவு என்னன்னு கேட்கறதுக்கு உள்ளே வந்திடுவான்...!',பதட்டத்துடன் அவள் எண்ணிக் கொண்டிருக்கும் போதே மணி எட்டாகியது.சரியாக இரண்டு நிமிடத்தில் ஆதித்யன் உள்ளே நுழைந்தான்.

 

"ஸோ...உன் முடிவு என்ன....?நாளைக்கு கல்யாணம் பண்ணிக்கலாமா....?இல்ல...இன்னைக்கே நம்ம வாழ்க்கையை ஆரம்பிக்கலாமா....?",அவன் முகம் கடினத்தைத் தத்தெடுத்திருந்தது.

 

'இது காதலை காட்ட வேண்டிய தருணம் அல்ல...!கடினத்தைக் காட்ட வேண்டிய தருணம்...!அவளுடைய அழுகையை பார்த்தால்...என்னுடைய காதல் மனம் உருகி விடும்...!எந்தவொரு இளக்கத்துக்கும் இடம் கொடுக்க கூடாது....!இது நான்..எங்களுடைய காதலுக்காகப் போராட வேண்டிய தருணம்...!',உறுதியுடன் மனதிற்குள் சொல்லிக் கொண்டவனின் உடல் நாணேற்றிய வில்லாய் விறைத்தது.

 

"என்ன நடந்தாலும் சரி...!என் பெத்தவங்க சம்மதம் இல்லாம என் கல்யாணம் நடக்காது...!நான் நடக்க விட மாட்டேன்....!",அழுத்தமாய் கூறினாள் அவள்.

 

'உன்னுடைய தந்தையின் நம்பிக்கைக்காக...நீ போராட வேண்டிய தருணம் இது...!அவன் முன்னால் இளகி விடாதே நித்தி...!',அழுத்தமாகத் தனக்குள் உரைத்துக் கொண்டவள்....உறுதியாய் நிமிர்ந்தாள்.

 

"இதுதான் உன் முடிவா....?",கேட்டபடியே அவன்...அவளை நெருங்க..

 

"ஆமாம்...!",உரைத்தபடியே பின்னால் நகர்ந்தாள் அவள்.

 

"நிச்சயமா....?",எதையும் கண்டு கொள்ளாமல் அவன் முன்னேற..

 

"ஆமாம்....!ஆமாம்...!ஆமாம்....!",கத்தியவளின் கால்கள் தன்னிச்சையாய் பின்னால் நகர்ந்தன.

 

ஒரு நிமிடம் நின்று அவள் விழிகளை சந்தித்தவன்....பிறகு....அசட்டையாய் தோளைக் குலுக்கிக் கொண்டு அவளை நோக்கி முன்னேறினான்.

 

"எ...எதுக்கு கிட்ட வர்றீங்க....?",திக்கித் திணறியபடி அவள் பின்னால் நகர..

 

"ம்....குடும்பம் நடத்தறதுக்குத்தான்....!",அவளுக்குப் பதில் கூறியபடியே அவளை நெருங்கினான்.

 

"வே...வேண்டாம்....!",இதயம் தடதடக்க பின்னால் நகர்ந்தவள்...கட்டில் தடுக்கி மெத்தையில் விழுந்தாள்.

 

"எது வேண்டாம்....?",அவளை அணைத்தபடியே பக்கவாட்டில் சரிந்தான் அவன்.

 

"நான்...நான் கத்துவேன்....!",மிரட்டியவளின் குரல் வெளியே வரவில்லை...வெறும் காற்றுதான் வந்தது.

 

"அப்படியா....!எங்கே கத்து பார்ப்போம்....!",அவனது விரல்கள் அவளது நெற்றிப்பரப்பில் கோலம் போட்டபடி....கன்னத்தை நோக்கி நகர..

 

கத்த முயற்சித்தவளின் நாக்கு சென்று மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது.

 

"என்ன பேபி....?கத்துவேன்னு மிரட்டின...?இப்போ வெறும் காற்றுதான் வருதா....?",காதோரமாய் கிசுகிசுத்தவனின் உதடுகள் பட்டும் படாமல்...தொட்டும் தொடாமல் அவளது காதுமடலை உரசிச் செல்ல..

 

அவளது மேனி நடுங்க ஆரம்பித்தது.'அவனிடம் மயங்காதே...!',என மூளை கூக்குரலிட்டாலும்...அவளது மனம் என்னவோ...அவனிடம் மயங்கிக் கிறங்கித்தான் போனது.தன் உயிரானவனின் தீண்டலுக்கு முன்னால் தன்னுடைய கோபம் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் சுருட்டிக் கொள்வதை உணர்ந்தாள்.

 

அவன் தொட்டால்...தன் உடலும் மனமும் அனலில் இட்ட மெழுகாய் கரைந்து உருகி விடும் என்று புரிந்து கொண்டவளுக்கு இயலாமையில் கண்ணீர் வந்தது.

 

"தாலி கட்டாம என்னோட வாழத் துணிஞ்சிட்டீங்கல்ல...?இது தப்புன்னு உங்க மனசாட்சி உறுத்தலையா....?",

 

"எந்த ஒரு சடங்கும் சம்பிரதாயமும் இந்த ஆதித்யனைக் கட்டுப்படுத்தாது டி...!உன்னை நான் காதலிக்க ஆரம்பிச்ச நொடியே...நீ எனக்கு பொண்டாட்டி ஆகிட்ட...!உன்னுடைய

திருப்திக்காகத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டு குடும்பம்  நடத்தலாம்ன்னு சொன்னேன்...நீதான் கேட்கலை...!அப்போ அனுபவிக்க வேண்டியதுதான்....!",கடுமையுடன் கூறியவன் சற்று முரட்டுத்தனமாக அவளை அணைத்தான்.

 

அவள் தன்னை மறுத்தது...தன் காதலை தூக்கியெறிந்தது....என அனைத்தும் அவனுள் கோபத்தை கிளறி விட்டிருக்க...அத்தனை கோபத்தையும் மூர்க்கத்தனத்தோடு கூடிய அணைப்பின் மூலம் அவள் மேல் பிரயோகித்தான்.

 

எலும்புகள் நொறுங்கும் அளவிற்கு அவன் அணைத்த வேகத்தில்...அவள் சற்று மிரண்டுதான் போனாள்.அவன் பிடியிலிருந்து விடுபட போராடியவளின் திமிறலை...மிக எளிதாக அடக்கி மேலும் மேலும்....தனது அணைப்பை இறுக்கினான் அந்த காதல் தீவிரவாதி...!

 

"ஐய்யோ...!வ..வலிக்குது...வி...விடுங்க....!",அவனது அணைப்பைத் தாங்க முடியாமல் கத்தினாள் அவள்.

 

"வலிக்கட்டும்....!இதை விட ஆயிரம் மடங்கு அதிகமா என் மனசு வலிக்குது டி....!",

 

"ப்ளீஸ்...!",கண்ணீருடன் கூடிய அவளது கெஞ்சலில் தனது அணைப்பை சற்று தளர்த்தியவன்...அவளது சங்கு கழுத்தில் முகம் புதைத்தான்.

 

"வே...வேண்டாம் ஆது...!",

 

"முடியாது...!",கோபமாய் உறுமியவன்..

 

"நாளைய விடியலில் நீ என் பொண்டாட்டி ஆகியிருக்கணும்...!அது எந்த வழியிலேயா இருந்தாலும் சரி...!இனியும்...பொறுமையா கைக்கட்டிக்கிட்டு உன் இஷ்டத்துக்கு விடறதுக்கு நான் ஒண்ணும் கேனையன் இல்ல...!புரிஞ்சுதா....?",அவள் விழிகளுக்குள் உற்றுப் பார்த்துக் கர்ஜித்தவனின் கண்கள் வேட்டைக்காரன் கண்களைப் போல் ஜொலித்தன.

 

அவளை வேட்டையாடும் நோக்கத்தோடு முரட்டுத்தனமாக அவள் மேல் படர்ந்தான் அந்த வேட்டைக்காரன்.மீள முடியாத ஒரு சுழலில் சிக்கி அமிழ்ந்து கொண்டிருந்தவளின் முன்...கையில் அகப்பட்டத் துரும்பாய் அவள் தந்தையின் முகம் தோன்றியது.

 

தன்னவனின் நெருக்கத்தில் கரைந்து மறைந்து உருகிக் கொண்டிருந்தவள்...பட்டென்று சுய நினைவுக்கு வந்தவளாய்...அவனை உதறித் தள்ள முயன்றாள்.அவளால் இம்மியளவு கூட அவனை விலக்க முடியவில்லை.இவள் திமிறத் திமிற அவன் முரட்டுத்தனம் அதிகமானதே தவிர குறையவில்லை.

 

"அய்யோ....!வேண்டாம்...!நாம கல்யாணம் பண்ணிக்கலாம்...!நம்ம...நம்ம கல்யாணத்துக்கு நான் ஒத்துக்கிறேன்...!",கூறி முடிப்பதற்குள்ளேயே அழுகை முட்டிக் கொண்டு வந்தது.

 

அவள் கூறிய  அடுத்த நொடி அவன்...அவளை விட்டு விலகியிருந்தான்.கைகளால் முகத்தை மூடிக் கொண்டு தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன ஆதித்யனின் கண்கள்.

 

"என்னை கல்யாணம் பண்ணிக்கறது...உனக்கு அவ்வளவு கஷ்டமாகவா இருக்கு பேபி....?",வலியுடன் ஒலித்த ஆதித்யனின் குரலில் விலுக்கென்று நிமிர்ந்து அமர்ந்தாள் நித்திலா.

 

"சொல்லு டி....!இவ்வளவு அழுகையும் எதுக்காக....?என்னை கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னுதானே...?அந்த அளவுக்கு என்னை வெறுக்கிறயா டி...?என்னை வேண்டாம்ன்னு தூக்கி எறிஞ்சிட்டு...உங்க அம்மா அப்பாக்கிட்ட போறேன்னு சொன்னியே....அதுக்கு அப்புறம் என்னடி நடக்கும்....?சொல்லு...!உன்னைப் பெத்தவங்க பார்த்து வைக்கிறவனைக் கல்யாணம் பண்ணிட்டு...அவன் கூட குடும்பம் நடத்துவியா....?

 

இப்போ நான் உன்னைத் தொட்ட இடங்களையெல்லாம்...இன்னொருத்தன் தொடுவான்...!என் கையில உருகிக் குழைஞ்சு நின்ன மாதிரிதான்...அவனுடைய கைகளிலும் மயங்கி நிற்பியா....?நான் கேட்ட கேள்விகளுக்கான பதிலை உன் மனசாட்சிக்கிட்ட சொல்லு....!",சாட்டையடியாய் அவளைப் பார்த்து கேள்விக் கணைகளை வீசியவன்...விவிடுவென்று வெளியேறி விட்டான்.

 

அடிபட்ட பார்வையுடன் வெளியேறியவன் சென்ற வழியையே அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் நித்திலா.

 

'அய்யோ...!என்ன வார்த்தை பேசிட்டு போறாரு....!இவர்கிட்ட இருந்த மாதிரி...இன்னொருத்தன்கிட்ட நான் இருப்பேனா....?இன்னொருத்தனுடைய தவறான பார்வையைக் கூட என்னால தாங்கிக்க முடியாது....!இவர் இல்லாம இன்னொரு ஆணுக்கு நான் கழுத்தை நீட்டிருவேனா....?என்னுடைய காதலை இவரு புரிஞ்சுக்கவே இல்லையா....?',அவனுடைய கேள்வியை எதிர்த்து எதிர் கேள்வி கேட்டது....அவளுடைய பெண்மை...!

 

'நீதான் அவனுடைய காதலை புரிஞ்சுக்கலை....!அவன் கேட்ட கேள்விகள் எல்லாம் உண்மைதானே...?உன் அம்மா அப்பா காலம் முழுக்க உன்னைக் கல்யாணம் பண்ணிக் கொடுக்காம...வீட்டிலேயே வைச்சுக்குவாங்களா....?அவன் கேட்டதுல நியாயம் இருக்குதுதானே....?உன் வாழ்க்கையில அடுத்த கட்டம் என்ன....?கல்யாணம்தானே....?',ஆதித்யனின் மீதான காதல் மனம் ஆக்ரோஷமாய் உயிர்த்தெழுந்து அவளை நோக்கி கேள்விக்கணைகளைத் தொடுத்தது.

 

"நோ....!",தன்னையும் அறியாமல் அலறியவள்...மடங்கி அமர்ந்து அழ ஆரம்பித்தாள்.

 

'நோ...!காலம் முழுக்க கன்னியாகவே வீட்டில இருந்திருப்பேனே தவிர....இன்னொருத்தன் கையால தாலி வாங்கியிருக்க மாட்டேன்....!என் ஆதுவுடைய காதலை மட்டுமே துணையாகக் கொண்டு...காலம் முழுக்க வாழ்ந்திருப்பேன்....!',அவளது காதல் மனம் அரற்றியது.

 

ஆக...அவனது காதலைத் துணையாகக் கொண்டு வாழத் துணிந்தவள்...அவனை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்ள மட்டும் தயங்கினாள்....!அதற்கு காரணம்...அவள் மீது அவளது பெற்றவர்கள் வைத்த நம்பிக்கை என்றால் மிகையாகாது....!அந்தக் கணமே...அவர்கள் ஜெயித்து விட்டார்கள்...பெற்றவர்களாக....!

 

காதலுக்காக...பெற்றவர்களை இழக்கத் தயாராகும் பல காதலர்களுக்கு மத்தியில்....வித்தியாசமாய் திகழ்ந்தாள் அந்த மங்கை....!அதற்காக...உயிர்க் காதலை துச்சமாய் ஒதுக்கித் தள்ளுவதும் முறையல்லவே....!

 

அங்குதான் போராட்டம் ஆரம்பமாகிறது....!காதலையும் விலக்காமல்...பாசத்தையும் எதிர்க்காமல் நடுநிலைமையுடன் நடக்கும் போராட்டம் அது....!அந்தப் போராட்டத்தைப் போராடத் துணியாதவர்கள் காதலிக்க கூடாது....!

 

அகம் தொட வருவான்...!!!



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எவனோ என் அகம் தொட்டு விட்டான்...!!! -    அகம் 1

எவனோ என் அகம் தொட்டு விட்டான் - Final

எவனோ என் அகம் தொட்டு விட்டான்...! - அகம் 8