எவனோ என் அகம் தொட்டு விட்டான் - அகம் 58
அத்தியாயம் 58 :
நாட்கள் அதன் போக்கில் நகர்ந்து கொண்டிருந்தன...!
ஆதித்யனுக்கும்...நித்திலாவிற்கும் திருமணமாகி ஒரு மாதம் முடிந்திருந்தது.இருவர் மனதிற்குள்ளும் கரை காணாத காதல் நிறைந்திருந்தாலும்...இருவருமே அதைக் கொண்டாட முன்வரவில்லை...!நித்திலாவிற்கு அவன் மீது இருந்த கோபம் அப்படியேதான் இருந்தது.ஆனால்...பெற்றவர்களை மிகவும் தேடும் சமயங்களில் எல்லாம்...அவள் சாய்வது என்னவோ...ஆதித்யனின் தோள் மீதுதான்...!
ஆதித்யனுக்கு அவள் மேல் கோபமெல்லாம் இல்லை.அவன்...தன் காதலிலும்...முடிவிலும் உறுதியாகத்தான் இருந்தான்.அவளிடம் கூறியிருந்தபடியே...அவன்...அவளை இந்த ஒரு மாத காலத்தில் கணவனாய் நெருங்கியிருக்கவில்லை.ஆனால்...அவ்வப்பொழுது அவளை சீண்டி வெறுப்பேற்றவும் மறக்கவில்லை.
அவளுடைய அருகாமையிலும்...மனைவியாய் தன் கண் முன்னால் நடமாடும் உரிமையிலும்...தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் சற்று திணறித்தான் போனான் அந்த ஆண்மகன்.
சூரியனின் ஒளிக்கதிர்கள் தன் மேல் பட...ஆதித்யனின் முகம் புன்னகையைத் தத்தெடுத்துக் கொண்டது.இதுவும் நித்திலாவினுடைய வழக்கம்தான்...!ஏ.சி ரூமில் திறக்கப்படாது அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஜன்னல்களை...காலையில் எழுந்ததுமே திறந்து வைத்து விடுவாள்.
"ஜன்னலை மூடு டி...!சன் லைட் என் மேல படுது....!",ஒரு முறை ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த ஆதித்யனின் மீது சுள்ளென்று வெயில் படவும்...தூக்கம் கலைந்த எரிச்சலில் நித்திலாவிடம் கத்தினான்.
"எந்நேரமும் ஜன்னலை மூடியே வைத்திருக்க கூடாது....!வெளிக்காத்து கொஞ்சமாவது உள்ளே வரணும்....!",அவளும் கத்தினாள்.
"ம்ப்ச்...!நான் ஆபிஸ்க்கு போனதுக்குப் பிறகு திறந்து வைச்சுக்க....!இப்போ பாரு...என் தூக்கம் கெடுது....!க்ளோஸ் பண்ணு டி....!",
"முடியாது....!இது எனக்கும் பெட் ரூம்தானே....?என் விருப்பப்படிதான் திறந்து வைப்பேன்....!",வீம்பாக ஆதித்யனிடம் கூறியவள்...வேண்டுமென்றே அனைத்து ஜன்னல்களையும் திறந்து வைத்து விட்டு வெளியே சென்றுவிட்டாள்.
அவளது உரிமையான பேச்சும்...செய்கையும் அவன் மனதை வருடிச் செல்ல...புன்னகையோடு அவளைப் பார்த்திருந்தான் ஆதித்யன்.
இன்றும் மனைவியின் நினைவு வர...அவன் கண்ணை மூடிக் கொண்டே தனது கைகளால் படுக்கையில் துளாவினான்.அவன் விரும்பியது...கைகளுக்குத் தட்டுப்படாமல் போகவும்...அவன் எரிச்சலுடன் கண்களைத் திறந்தான்.
'ப்ச்...!இவ என்னை என்னதான்னு நினைச்சுக்கிட்டு இருக்கிறா...?புருஷன்ங்கிற நினைப்பு கொஞ்சமாவது இருக்கா...?இவளை இப்படியே விட்டால் சரி வராது...!இந்த ஆதித்யன் அவளுடைய புருஷன்ங்கிறதை அழுத்தமா அவள் மனசில பதிய வைக்கிறேன்...!' கோபத்துடன் மனதிற்குள் கறுவியவன்..
"நித்திலா....!",என்று கத்தினான்.
கீழே பூஜையறையில் கமலா பாட்டிக்கு உதவியாக பூக்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தவள்...உடல் தூக்கிப் போட மாடியைப் பார்த்தாள்.ஹால் சோபாவில் அமர்ந்து நாளிதழைப் பார்த்துக் கொண்டிருந்த மாணிக்கமும்...சுந்தரம் தாத்தாவும் செய்தித்தாளை மறந்தவர்களாய் மாடியைப் பார்த்தனர்.சமையல் அறையில் சமையல் செய்யும் பெண்மணியிடம் அன்றைய சமையலைப் பற்றி கூறிக் கொண்டிருந்த லட்சுமியும் கூட...இவனது கத்தலில் சமையலறையில் இருந்து வெளிவந்து மாடியை நோக்கினார்.
அதற்குள் அவன் இன்னொரு முறை,"நித்திலா....!",என்று கத்த,
பூஜையறையில் இருந்து வெளிவந்த நித்திலா,"சுமதி....!",என்று வீட்டு வேலை செய்யும் பெண்ணை அழைத்தாள்.
"சொல்லுங்கம்மா....!",அந்தப் பெண் பவ்யமாய் வந்து நின்றாள்.
"அவருக்கு இன்னும் காபி கொடுக்கலையா....?அதுக்குத்தான் இப்படி கத்திக்கிட்டு இருக்கிறாரு...!முதல்ல போய் நியூஸ் பேப்பரையும்...காபியையும் கொடுத்துட்டு வா....!",என்று விட்டு பூஜையறைக்குள் நுழைந்து கொண்டாள்.
அந்தப் பெண் சுமதி...ஆதித்யனுக்கு காபியையும் செய்தித்தாளையும் எடுத்துச் செல்ல...மீண்டும் அனைவரும் தங்கள் அலுவலில் மூழ்கினர்.
மேலே சென்ற சுமதி....சில நிமிடங்களில் தலை தெறிக்க கையில் தட்டோடு கீழே ஓடி வந்தாள்.
அதற்குள் ஆதித்யன் மீண்டும்,"நித்திலா....!",என்று வீடே அதிரும்படி கத்தி வைத்தான்.
"சுமதி...!இன்னுமா நீ அவருக்கு காபி கொடுக்கலை....?",வினவியபடியே பூஜையறையில் இருந்து வெளியே வந்தாள் நித்திலா.
"இல்லைங்கம்மா...!நான் காபி எடுத்துட்டுத்தான் போனேன்...!அவருதான் என்னைத் திட்டிக் கீழே அனுப்பிட்டாரு....!",அவள் கூறிக் கொண்டிருக்கும் போதே...ஆதித்யன்,"நித்திலா....!",என்று அவள் பெயரை ஏலம் போட்டான்.
"அவன் உன்னைத்தான் கூப்பிடுவான் போல...!போய் என்னன்னு கேட்டுட்டு வா...!",கமலா பாட்டி கூறவும்...அவள் மாடியேறினாள்.
"எதுக்கு இப்படி கத்திக்கிட்டு இருக்கீங்க...?",கதவைத் திறந்து உள்ளே நுழைந்தபடியே நித்திலா வினவ..
அவனோ...கட்டிலில் படுத்துக் கொண்டு அவளை முறைத்துக் கொண்டிருந்தான்.
"உன் மனசில என்னடி நினைச்சுக்கிட்டு இருக்கிற...?ஒரு தடவை கூப்பிட்டால் உன்னால வர முடியாதா...?சுமதி கையில காபியை கொடுத்து அனுப்பி விடற...?",எகிறினான் அவன்.
"உங்களுக்குத் தேவை காபிதானே...?அதை யாரு கொண்டு வந்தால்தான் என்ன...?வாங்கி குடிக்க வேண்டியதுதானே....?",காலையில் எழுந்தவுடன் தன் மேல் கோபப்பட்டவனின் மீது அவளுக்கும் கோபம் வந்தது.
"முடியாது டி....!இனிமேல் நீதான் எனக்கு காபி எடுத்துட்டு வந்து என்னை எழுப்பி விடணும்...!",
"இதென்ன புது பழக்கமா இருக்கு....?இவ்வளவு நாள் எப்படி காபி குடுச்சீங்களோ...அப்படியே இனிமேலும் குடிங்க...!",
"புது பழக்கம் தான்...!நீதானே என் பொண்டாட்டி...!வழக்கத்தை மாத்தி பழக்கத்தை பழகிக்க...!",உத்தரவிட்டான் அவன்.
அவள் ஏதோ முணகிக் கொண்டே நின்றாள்.
"போடி...!போய் எனக்கு காபியை எடுத்துட்டு வா...!",அவனுடைய அரட்டலில் அவள் அமைதியாய் வெளியே செல்லத் திரும்பினாள்.
"ஒரு நிமிஷம்....!",என்று அவளை நிறுத்தியவன்..
"உன் கையால எனக்கு காபி கலந்து எடுத்துட்டு வா...!வேலைக்காரங்க யாரும் எனக்காக காபி கலக்க கூடாது....!இப்போன்னு இல்ல...நான் எப்ப காபி கேட்டாலும்...நீ உன் கையால கலந்து தரணும்....!போ....!",அவன் மிரட்டிய மிரட்டலில்..
அவள் 'சரி ' என்பதாய் தலையசைத்து விட்டு வெளியேறினாள்.
அடுத்த பத்து நிமிடத்தில் அவனுக்கான காபியோடும்...செய்தித்தாளோடும் அறைக்குள் பிரசன்னமானாள் நித்திலா.அவன் அப்பொழுதும் படுத்துக் கொண்டுதான் இருந்தான்.
"காபி....!",இவள் அவன் கையில் காபியைத் திணிக்கவும்தான் எழுந்தமர்ந்தான்.
அவனது செய்கையைப் பார்த்துக் கொண்டிருந்தவள்,"ஏன்....?நான் வந்து எழுப்பாம சார் எழுந்துக்க மாட்டாரோ....?',என்று மனதுக்குள் முணுமுணுக்க..
அவள் முகத்தையே கூர்ந்து பார்த்தபடி காபியை பருகிக் கொண்டிருந்தவன்,"ஆமாம் டி...!இனிமேல் காலையில என்னை வந்து எழுப்பி...காபி கொடுத்தால்தான் நான் எழுந்திருப்பேன்...!" சட்டமாகக் கூறினான் அவன்.
உதட்டைச் சுளித்தபடி வெளியேறப் போனவளை,"நில்லு டி...!",என்ற ஆதித்யனின் குரல் தடுத்து நிறுத்தியது.
'என்ன...?',என்பதாய் தன்னை ஏறிட்டவளிடம்,"நான் குளிக்கப் போகிறேன்...!எனக்கு டவல்..ட்ரெஸ் எல்லாம் யார் எடுத்து வைப்பா....?",என்று புருவம் உயர்த்த..
"ஏன்...?இவ்வளவு நாள் இதையெல்லாம் நீங்கதானே பார்த்துக்கிட்டீங்க...?",திருப்பி கேள்வி எழுப்பினாள் அவள்.
"அதுதான்...இப்போ நீ வந்துட்டியே...!போடி...!போய் எடுத்து வை....!",அதிகாரமாய் உரைத்தவனைக் கண்டவளின் மனம் முரண்டியது.
"எடுத்து வைக்க முடியாது...போடா....!",திமிராய் உரைத்தவள் திரும்பிக் கதவை நோக்கி நடந்தாள்.
இரண்டே எட்டில் அவளை அடைந்தவன்...சாத்தியிருந்த கதவில் அவளை சாய்த்தபடி,"மனைவிக்கான கடமைகளை நீ செய்யலைன்னா...புருஷனுக்கான உரிமைகளை நான் எடுத்துக்குவேன்....!",அவள் இருபுறமும் கைகளை ஊன்றி சிறை செய்தபடி கூறினான் அவன்.
அவனுடைய அருகாமையில் படபடத்த மனதை அடக்கிக் கொண்டு,"எந்தக் கடமையையும் செய்ய முடியாது...!",என்றாள் வீம்பாக.
ஒன்றும் பேசாமல் அவள் முகத்திலேயே தன் பார்வையை நிலைக்க விட்டான் ஆதித்யன்.ஒரு நிமிடத்திற்கு மேல் அந்தப் பாவையால்....அவனது பார்வையைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.உதட்டைக் கடித்தபடி தன் விழிகளைத் தாழ்த்திக் கொண்டாள்.
அவளது அந்த செய்கையில்...அவனது உதடுகளில் ஒரு வெற்றிப்புன்னகை வந்தமர்ந்தது.
"ஸோ...உன்னால பொண்டாட்டிக்கு உண்டான கடமைகளை செய்ய முடியாது....?",அழுத்தமாக அவன் வினவ..
"மு...முடியாது...!",அவனுடைய பார்வையில் அவளது அடிவயிறு ஜில்லிட்டது.
"அப்போ சரி...!",தோளைக் குலுக்கியவன் அப்படியே அவளை அலேக்காகத் தூக்கி கொண்டு படுக்கையை நோக்கி நடந்தான்.
"வி..விடுங்க...!என்ன பண்றீங்க....?",அவனது முதுகில் சரமாரியாய் அடித்தபடி அவள் திமிர..
அவளது திமிறலை எளிதாக அடக்கியவன்...'தொப்'பென்று அவளை மெத்தையில் போட்டான்.அவள் சுதாரித்து எழும் முன்னரே...அவள் மேல் பாய்ந்தவன்...பாய்ந்த வேகத்தில் அவளது துப்பட்டாவை உருவிக் கீழே எறிந்தான்.
"ஹேய்...!என்ன பண்றீங்க...?",பதறியபடி எழ முயன்றவளின் மீது...அழுத்தமாகப் படர்ந்தவன்..
"நீதான் பொண்டாட்டிக்கான கடமைகளை செய்ய மாட்டேன்னு சொல்லிட்டியே....?அதுதான்...புருஷனுக்கு உண்டான உரிமைகளை நான் எடுத்துக்கப் போறேன்...!",அமைதியாய் கூறியவன்...அவளது கழுத்து வளைவில் தனது முகத்தைப் புரட்டினான்.
அவனது வார்த்தைகளிலும்...தீண்டலிலும் சில்லென்று உடலுக்குள் ஏதோ மாற்றம் நிகழ,"வே..வேண்டாம்....!",என்று முனகினாள் அவள்.
"அப்போ...பொண்டாட்டிக்கான கடமை....?",அவள் கழுத்தில் இருந்து முகத்தை விலக்காமலேயே அவன் வினவ..
"நான்...நான் செய்யறேன்....!",திக்கித் திணறினாள் அவள்.
"வெரிகுட் பேபி....!",சிறு புன்னகையுடன் உரைத்தவன்..அவளது கழுத்து சரிவில் அழுத்தமான ஒரு முத்தத்தை பதித்து விட்டுத்தான் நிமிர்ந்தான்.
"ட்ரெஸ் எடுத்து வை பேபி...!நான் போய் குளிச்சிட்டு வர்றேன்....!",அவள் கன்னத்தைச் செல்லமாகத் தட்டியபடி குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்.
"ராட்சசன்...!அழகான ராட்சசன்...!",முணுமுணுத்தபடியே அவனுக்குத் தேவையான உடைகள்..வாட்ச் என அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு வெளியேறினாள் நித்திலா.
தன் அத்தையுடன் சேர்ந்து காலை உணவை டைனிங் டேபிளில் எடுத்து வைத்துக் கொண்டிருந்த நித்திலாவின் காதில் ஆதித்யனின் அழைப்பு வந்து விழுந்தது.
"நித்திலா...!",அவன் கத்திய கத்தலில் கையில் இருந்த சாம்பார் பாத்திரத்தைக் கீழே போடப் போனவள்...தன்னை சுதாரித்துக் கொண்டு டைனிங் டேபிளில் வைத்தாள்.
"நித்தி ம்மா....!என் பேரன் கிளம்பி வர்ற வரைக்கும்...நீ மேலேயே இரும்மா...!அவன் உன்னை விட மாட்டான்....!",கிண்டலுடன் சுந்தரம் தாத்தா கூற...அனைவரும் நமட்டு சிரிப்பு சிரித்தனர்.வெட்கம் மேலிட யாரையும் பார்க்காது...மாடி அறைக்கு ஓடி விட்டாள் நித்திலா.
"எதுக்கு இப்படி என் பெயரை ஏலம் போடறீங்க....?கீழே எல்லோரும் என்ன நினைப்பாங்க....?",அவனைத் திட்டியபடியே உள்ளே நுழைந்தவள்...ஆதித்யன் இருந்த கோலத்தைப் பார்த்து விதிர்த்துப் போய் நின்றுவிட்டாள்.
அப்பொழுதுதான் குளித்து விட்டு வந்திருந்தவன்....இடையில் கட்டிய துண்டுடன் நின்றிருந்தான்.உருண்டு திரண்ட அவனது வலிமையான புஜங்களும்...பரந்து விரிந்த திண்மையான மார்பும் அவளை ஏதோ செய்ய...அவனுக்கு முதுகு காட்டித் திரும்பி நின்று கொண்டாள்.
"ஐயோ...!இப்படியா கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம நிற்பீங்க...?",
"என் பொண்டாட்டிக்கிட்ட எனக்கு என்னடி வெட்கம்....?கதவைப் பூட்டிட்டு இங்கே வா....!",உல்லாசமாய் அழைத்தான் அவன்.
வெடுக்கென்று திரும்பியவள்,"எ..எதுக்கு...?",என்று தடுமாறினாள்.
"தலையை யாரு துவட்டி விடுவா....?உங்க அப்பாவா...?",அவன் தன் தந்தையைப் பேச்சில் இழுக்கவும்...கோபத்துடன் வேகமாக அவனருகில் வந்தவள்..
"எங்க அப்பாவை எதுக்கு இப்போ இழுக்கறீங்க....?",கேள்வி கேட்டபடியே அருகில் மெத்தையில் கிடந்த துண்டை எடுத்து அவன் தலையை துவட்ட ஆரம்பித்தாள்.
அவள் உயரத்திற்கு ஏதுவாக குனிந்திருந்தவனின் பார்வை அவள் மேனியில் எங்கெங்கோ பயணித்தது.வெகு அருகில் நின்றிருந்த பெண்ணவளின் மென்மைகள் மெதுவாக அவன் முகத்தில் வந்து மோத...மூச்சு விடவும் மறந்தவனாய் மயங்கித்தான் போனான் அந்த ஆண்மகன்.
எதற்கோ ஆதித்யனின் முகத்தைப் பார்த்தவள்...அந்தக் கள்வனின் திருட்டுப் பார்வையை கண்டு கொன்டாள்.கையில் இருந்த துண்டாலேயே அவனது தோளில் ஒரு அடி போட்டவள்,"கண்ணை நோண்டிருவேன்...நோண்டி....!",என்றபடி அவனை முறைக்க..
அவனோ...சிரித்துக் கொண்டே தன் இரு கைகளையும் தூக்கி 'சரண்டர்' என்பது போல் காண்பித்தவன்,"ஸாரி....!",என்றான் குறும்புப் புன்னகையுடன்.
ட்ரெஸிங் டேபிளுக்கு முன் இருந்த மோடாவில் அவனை அமர வைத்தவள்...கவனமாக அவனுக்குப் பின்னால் வந்து நின்றபடி தலையை துவட்டி விட ஆரம்பித்தாள்.அவளது முன்னேற்பாட்டைக் கண்டு...அவன் தனக்குள் புன்னகைத்துக் கொண்டான்.
"தலையை துவட்டியாச்சு...!அவ்வளவுதானே....?",என்றபடி விலகியவளை கைப்பிடித்து தடுத்தவன்..
"இருடி....!எனக்கு சட்டை பட்டன் எல்லாம் யார் போட்டு விடுவா....?",கேள்வி கேட்டவன் அவளுக்கு முன்னாலேயே தன் உடைகளை மாற்ற ஆரம்பிக்க..
"ச்சீய்....!",என்ற வெட்கப் புன்னகையுடன் அவள்தான் திரும்பி நின்று கொண்டாள்.
அவளது உடைகளின் தேர்வை மெச்சியபடியே அணிந்து முடித்தவன்...சட்டையை மட்டும் போட்டுக் கொண்டு,"பட்டனை போட்டு விடுடி...!",என்று அவளை அழைத்தான்.
அவன் புறம் திரும்பி பட்டனை போட்டுக் கொண்டிருந்தவளின் மனதில்,'விட்டால் முதுகு தேய்ச்சு குளிச்சு விட சொல்லுவான்....!ரௌடி....!',என்ற எண்ணம் ஓடிக் கொண்டிருக்க..
அந்த எண்ணத்தின் நாயகனோ,"அதையும்தான் பண்ணனும்....!இனிமேல் ஞாயிற்றுக்கிழமை எனக்கு எண்ணெய் தேய்ச்சு குளிக்க வைக்க வேண்டியது உன் பொறுப்பு தான் பேபி....!",கண் சிமிட்டியபடி கூறினான் அவன்.
"அய்ய....!நான் மாட்டேன்....!",வேக வேகமாய் தலையாட்டினாள் அவள்.
"அப்போ...நான் உனக்கு எண்ணெய் தேய்ச்சு குளிக்க வைச்சிடுவேன்.....!எப்படி வசதி...?",அவன் ஒற்றைப் புருவத்தை உயர்த்த..
"வே...வேண்டாம்....!நானே குளிக்க வைக்கிறேன்...!",அவசர அவசரமாக கூறினாள் அவள்.
"ம்...வெரிகுட்...!சரி வா...!தலையை வாரி விடு....!",சமர்த்துப் பிள்ளையாய் அவன் கூற..
அவனது அலும்பை ரசித்தபடியே...சீப்பை எடுத்து தலைவாரி விட்டாள்.
"முடிஞ்சுதா....?",
"ம்...!கீழே போகலாம்...!வா...!",அவளை அழைத்துக் கொண்டே கீழே வந்தான் ஆதித்யன்.
இருவரும் ஜோடியாக இறங்கி வந்ததைப் பார்த்த குடும்பத்தினர் அனைவரும் தங்களுக்குள் புன்னகைத்துக் கொண்டனர்.இருவரின் கண்ணாம்பூச்சி ஆட்டத்தை அனைவரும் பார்த்துக் கொண்டுதான் இருந்தனர்.அதிலும்...ஆதித்யனுடன் பட்டும் படாமல் பழகிக் கொண்டிருந்த நித்திலாவின் செய்கை...அவர்களுக்கு வருத்தத்தை தோற்றுவித்தது.இப்பொழுது...இருவரும் ஒன்றாக வருவதைப் பார்த்த பெரியவர்களுக்கு...அவர்களது வாழ்க்கை இனி நேராகி விடும் என்ற நிம்மதி தோன்றியது.
டைனிங் டேபிளில் நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தவனுக்கு...காலை உணவை பரிமாறுவதற்காக சுமதி வந்தாள்.கண்ணசைவிலேயே அவளை விலகச் சொன்னவன்,"நித்திலா...!",என்று தன் மனைவியை அழைத்தான்.
சுந்தரம் தாத்தாவோடு பேசிக் கொண்டு...ஹாலிலேயே நின்றிருந்தவள் அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடி வந்தாள்.
"என்ன...?",
"டிபன் பரிமாறு டி...!",அவன் கூறவும் தட்டை எடுத்து வைத்துப் பரிமாற ஆரம்பித்தாள்.
"இன்னைக்கு மட்டும் இல்ல...!இனி நீதான் தினமும் எனக்கு டிபன் பரிமாறனும்....!அதுவும் உன் கையால செய்த டிபனை பரிமாறணும்...!",இட்லியைப் பிட்டு சாம்பாரில் தோய்த்து வாயில் போட்டபடி அவன் கூற..
"என்ன விளையாடறீங்களா....?எனக்கு சமைக்கத் தெரியாது...!",சண்டைக்கு வந்தாள் அவள்.
"தெரியலைன்னா கத்துக்கோ....!அதுமட்டுமில்ல...இனி தினமும் மதியம் எனக்காக சமைச்சு ஆபிஸ்க்கு எடுத்துட்டு வர்ற...!இன்னைக்கு மதியத்துல இருந்தே உன் வேலையை ஆரம்பிச்சிடு...!",கட்டளையிட்டவன் சாப்பிடுவதில் மும்முரமானான்.
"என் சமையலை சாப்பிடறதுக்கு...எனக்கு ஒரு அடிமை சிக்கியிருக்கும் போது எனக்கு என்ன வந்துச்சு....?",தோளைக் குலுக்கியபடியே அவனுக்கு வேண்டியதைப் பார்த்து பார்த்து பரிமாறினாள்.
சாப்பிட்டு கை கழுவியவன்..அவளது துப்பட்டாவிலேயே தன் கைகளைத் துடைத்துக் கொண்டு,"என்னை வந்து வழியனுப்பி வை...!",அவளுக்கு உத்தரவிட்டபடியே ஹாலுக்கு வந்தவன் அங்கு அமர்ந்திருந்த அனைவரிடமும் சொல்லிக் கொண்டு வாசலை நோக்கி விரைந்தான்.
அவன் பின்னாலேயே நாய்க்குட்டி போல் ஓடினாள் நித்திலா.வாசலுக்கு வந்தவன் அருகில் இருந்த முல்லைக் கொடியின் மறைவிற்கு அவளை இழுத்துச் சென்றான்.
"இங்கே எதுக்கு கூட்டிட்டு வர்றீங்க...?",அவன் பிடியிலிருந்து தன் கையை விடுவிக்கப் போராடியவளின் இடையை தன் இரு கைகளாலும் இழுத்து அணைத்து சிறை செய்தவன்..
"இதுக்குத்தான்....!",என்றபடி அவள் கன்னத்தில் முத்தம் வைத்தான்.
"இனிமேல் இப்படி முத்தம் கொடுத்துதான் என்னை வழியனுப்பி வைக்கணும்...!இங்கே...இப்போ முத்தம் கொடுத்து அத்தானுக்கு டாட்டா சொல்லு பார்க்கலாம்....!",அவன் தன் கன்னத்தைக் காட்ட..
"அய்ய....என்னால முடியாது....!",முகத்தை சுளித்து மறுத்தாள் அவள்.
"இப்போ மட்டும் நீ முத்தம் கொடுக்கலை...அப்புறம் முத்தம் கொடுக்க வேண்டிய இடத்தை மாத்திடுவேன்....!",அவன் மிரட்டிய மிரட்டலில் அவள்...அவன் முகத்தைத் திருப்பி கன்னத்தில் 'நச்'சென்று முத்தம் வைத்தாள்.
"வெரிகுட்...!ஒகே பேபி...!நான் கிளம்பறேன்...!மதியம் ஆபிஸ்ல மீட் பண்ணலாம்...!",அவளுக்கு ஒரு பறக்கும் முத்தத்தை அனுப்பி விட்டு...காரில் ஏறி விரைந்தான் ஆதித்யன்.
காலையில் எழுந்ததில் இருந்து...ஒன்றன் பின் ஒன்றாக அவன் பண்ணிய அழிச்சாட்டியங்கள் நினைவுக்கு வர...அவளது இதழ்கள்,"ரௌடி...!காதல் ரௌடி....!",என தனக்குள் முணுமுணுத்துக் கொண்டன.
அதன் பிறகு...காலை உணவை சாப்பிட்டு விட்டு..மதிய உணவுக்கான சமையலில் இறங்கினாள் நித்திலா.அவளது அத்தை கூட,"நீ எதுக்கும்மா இதையெல்லாம் செய்துக்கிட்டு இருக்க...?என்ன சமைக்கறதுன்னு சொல்லிடு...!அவங்க பார்த்துக்குவாங்க....!",என்று கூற..
"ம்ஹீம்...!உங்க பிள்ளையோட ஸ்ட்ரிக்ட் ஆர்டர் அத்தை....!என் கையால சமைச்சு எடுத்துட்டு வரணும்ன்னு சொல்லிட்டு போயிருக்கிறாரு...!",போலியாக சலித்தபடி கூறிய மருமகளைப் பார்த்தவர்..
'எப்படியோ...ரெண்டு பேரும் சந்தோஷமாயிருந்தால் சரி...!',மனதிற்குள் புன்னகைத்தபடி அகன்று விட்டார்.
வெளியில் சலித்தாலும் மனதிற்குள் இதை அனைத்தையும் ரகசியமாய் ரசித்தாள் நித்திலா.தன்னவனுக்காக என்று ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து சமைத்து முடித்தாள்.
அதே போல்...அவனுக்குப் பிடித்த ஆகாய வண்ண சுடிதாரை அணிந்தவள்...அழகாகத் தன்னை அலங்கரித்துக் கொண்டு...டிபன் கேரியரோடு கிளம்பினாள்.அவளுக்காக அவன் வாங்கிக் கொடுத்த ஆடி கார் வீட்டில்தான் இருந்தது.வீட்டில் இருப்பவர்கள் வெளியே சென்று வர ஏதுவாக மேலும் இரண்டு கார்களோடு...ஒரு ட்ரைவரையும் நியமித்திருந்தான் ஆதித்யன்.
அதோடு...ஆதித்யன் நித்திலாவின் திருமண பரிசாக கௌதமும்...சுமித்ராவும் ஒரு வைர நகையோடு...உயர் ரக கார் ஒன்றையும் பரிசளித்திருந்தனர்.தன்னவன் தனக்காக வாங்கிய காரிலேயே ட்ரைவரை அழைத்துக் கொண்டு கிளம்பினாள் நித்திலா.
டிபன் கேரியரோடு உள்ளே நுழைந்த தன் மனைவியை உற்சாகமாக வரவேற்றான் ஆதித்யன்.
"கம் பேபி....!ஒரு டென் மினிட்ஸ்....!இந்த வொர்க்கை முடிச்சிட்டு வந்திடறேன்...!",அவளிடம் உரைத்தவன்...தன் மடிக்கணினியில் ஆழ்ந்தான்.
'சரி...' என்பதாய் தலையசைத்து விட்டு...உணவு உண்ணும் அறைக்குச் சென்றவள்...சாப்பிடுவதற்கு வசதியாக அனைத்தையும் எடுத்து வைத்து விட்டு வெளியே வந்தாள்.
அவன் தனது வேலைகளில் ஆழ்ந்திருக்கவும்,"நான் பத்து நிமிஷத்துல வந்துடறேன்...!நீங்க உங்க வேலையை அதுக்குள்ள முடிச்சிடுங்க...!",என்று விட்டு வெளியேறினாள்.
அலுவலகத்தில் இவளைக் கண்டதும் ஒரு பட்டாளமே சூழ்ந்து கொண்டது.அனைவரது நலம் விசாரிப்புகளுக்கும்...வாழ்த்துக்களுக்கும் சிறு புன்னகையோடு பதிலளித்தவள்...சுமித்ராவைத் தள்ளிக் கொண்டு கேன்டீனுக்கு சென்றாள்.
இருவரும் சந்தித்து வெகு நாட்கள் ஆகியிருந்ததால்...பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருந்தன.
"அப்புறம்...மேரேஜ் லைப் எப்படி போகுது....?",சுமித்ரா வினவ..
"அதுக்கென்ன....அது பாட்டுக்கு போகுது...!",அலட்சியமாய் கூறினாள் நித்திலா.
"இன்னும் உங்களுக்குள்ள எதுவும் சரியாகலையா நித்தி....?அப்படி என்னதான் டி கோபம் உனக்கு...?ஆதி அண்ணா மேல இருந்த உன்னுடைய காதல் எங்கே போச்சு...?",
"அந்தக் காதல் இன்னமும் அவர்மேல் அப்படியேதான் இருக்கு...!என் விருப்பம் இல்லைன்னு தெரிந்தும் என் கழுத்துல தாலி கட்டியிருக்கிறாரேன்னு ஒரு சின்ன ஆதங்கம்...கோபம்...அவ்வளவுதான்...!சரி...அதை விடு....!கெளதம் அண்ணா உன்னை எப்படி பார்த்துக்கிறாரு....?",
'கௌதம்' என்ற பெயரைக் கேட்டதுமே அவளது கண்கள் காதலில் மின்னின.
"அவரு கிடைக்க நான் கொடுத்து வைச்சிருக்கணும் டி...!என்ன...அப்பப்ப அம்மா அப்பா ஞாபகம் வரும்...!செய்ய வேண்டிய சீர் வரிசை...சடங்கு இதையெல்லாம் குறைவில்லாம செய்தாலும்...அவங்க எங்க வீட்டுக்கு வர்றதில்லை....!மாமாவுக்கு பிடிக்காதுன்னு நானும் எங்க அம்மா வீட்டுக்குப் போறதில்லை...!",அவள் கண்களில் வலி தெரிந்தது.
அது காலம் காலமாய் பெண்கள் மட்டுமே சுமக்கும் வலி...!பெண்கள் மீது மட்டுமே சுமத்தப்படும் வலி...!என்னதான் பெண்களுக்கு சுதந்திரம் வழங்கியிருந்தாலும்...தன்னவனுக்கு கட்டுப்பட்டு நடக்கத்தான் அவர்கள் விரும்புகிறார்கள்...!ஆனால்...லட்சம் கோடி பூரிப்பையையும்...நிறைவையும் அந்த சிறை அள்ளி அள்ளித் தரும் என்பதுதான் விந்தையிலும் விந்தை....!
அந்த விந்தையை அறிந்து கொண்டிருந்த நித்திலாவும்,"எல்லாம் சரியாகும் சுமி....!",என்று ஆறுதல் கூற...அந்த விந்தையை அறிந்து வைத்திருந்த சுமித்ராவும் ஒரு புன்னகை புரிந்தாள்.
"ஒகே டி...!நான் கிளம்பறேன்....!அவருக்கு சாப்பாடு எடுத்துட்டு வந்தேன்...!நான் போகாம சாப்பிட மாட்டாரு....!",என்றபடி நித்திலா எழ..
"ஓ....!அவராம் அவர்...!",அபிநயத்துடன் கிண்டலடித்தாள் சுமித்ரா.
"ம்ப்ச்...!போடி....!",அழகாக வெட்கப்பட்டுக் கொண்டே அவ்விடத்தை விட்டு அகன்றாள் நித்திலா.
அவள் அறைக்குள் நுழைந்ததும்,"என்ன பேபி....?உன் பிரெண்ட்கிட்ட கதையளந்து முடிச்சிட்டயா....?",தன் இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி சோம்பல் முறித்தபடி வினவினான் ஆதித்யன்.
"ம்ம்...!சுமியைப் பார்த்து ரொம்ப நாள் ஆகிடுச்சல்ல...!பேச பேச பேச்சே தீரல....!",உற்சாகத்துடன் கூறினாள் நித்திலா.
"நான்தான் உன்னை ஆபிஸ்க்கு வரச் சொல்றேன்...!நீதான் வர மாட்டேங்கிற...!வந்தால் உன் பிரெண்டை தினமும் மீட் பண்ணலாம்...!",நாள் பொழுதும் அவள் தன்னருகிலேயே இருக்க வேண்டும் என்ற ஏக்கத்துடன் அவன் கூற..
"ஆபிஸ் வராததுக்கான காரணத்தை நான் ஏற்கனவே உங்ககிட்ட சொல்லிட்டேன்....!",உணவு உண்ணும் அறைக்குள் நுழைந்தபடியே கூறினாள் நித்திலா.
"ஆமா...!என்னை கவனிச்சுக்கறதுக்காக ஆபிஸ்க்கு வர மாட்டேன்னு சொன்ன...!இப்போ...நீ என்னைக் கவனிச்சுக்கிட்டு இருக்கிற லட்சணத்தைத்தான் நான் பார்த்துக்கிட்டு இருக்கிறேனே...!",அவளைத் தொடர்ந்து அந்த அறைக்குள் நுழைந்தபடியே அவன் கூற..
"ஏன்...?இன்னைக்கு உங்களை கவனிக்கலையா...?",தட்டை எடுத்து வைத்து சாப்பாடு பரிமாறியபடியே வினவினாள் அவள்.
"நான் கட்டாயப்படுத்தின பிறகுதானே நீ என்னைக் கவனிச்ச...?",கை கழுவி விட்டு சாப்பிட அமர்ந்தான் அவன்.
"சரி...!இனிமேல் உங்களைக் கவனிக்கிறேன்...!போதுமா...?இப்போ சாப்பிடுங்க...!",குழம்பை சாதத்தின் மீது ஊற்றியபடியே கூறினாள்.
"ம்ம்...!நீயும் உட்கார்...!சாப்பிடலாம்...!",அவள் கையைப் பற்றி அமர வைத்தவன்...இன்னொரு தட்டை எடுத்துப் பரிமாறினான்.அவளும் எதிர்பேச்சு பேசாமல் அமைதியாய் அமர்ந்தாள்.
தட்டில் இருந்த சாப்பாட்டை சாப்பிடாமல்...தேர்வு முடிவிற்காக காத்திருக்கும் மாணவியைப் போல் ஒரு எதிர்பார்ப்போடு அவன் முகத்தையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தவளைப் பார்த்தவன்..
"பார்த்தால் பசி தீருமா பேபி...?ஏன் என் முகத்தையே பார்த்துக்கிட்டு உட்கார்ந்திருக்கிற....?",புருவத்தை உயர்த்தியபடி அவன் வினவ..
"அது...நான்தான் சமைச்சேன்...!சாப்பாடு எப்படி இருக்கு...?",அவள் குரலில் அப்படியொரு ஆர்வம் தெரிந்தது.
வேண்டுமென்றே,"ம்...அது....",என்று யோசனையுடன் இழுத்தவன்...அவள் முகத்தில் ஆர்வம் அதிகரிப்பதைக் கண்டு,"என் பேபி மாதிரியே இந்த சாப்பாடும் ரொம்ப நல்லாயிருக்கு....!",என்றான் புன்னகையுடன்.
"உண்மையாலுமா...?",
"சத்தியமா...!வேணும்ன்னா இந்த சமையலை செய்தவங்களுக்கு ஸ்பெஷல் கிஃப்ட் கொடுக்கலாமா...?",குறும்புடன் அவன் வினவ..
"அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்...!",உதட்டைச் சுளித்தபடி சாப்பிட ஆரம்பித்தாள் நித்திலா.
"உசுரே போகுது...!உசுரே போகுது...!
உதட்டை நீ கொஞ்சம் சுளிக்கையிலே...!",
அவளது சுளித்த இதழ்களை பார்த்தபடி அவன் பாட...அவள் வழக்கம் போல் இதழ்களைக் கடித்துக் கொண்டு அமைதியானாள்.
"மாமன் ஏங்குறேன்...மடிப்பிச்சை கேட்கிறேன்...!
மனசைத் தாடி என் மணிக்குயிலே...!",
அவன் கண்களில் வழிந்த ஏக்கம்...அவளை என்னவோ செய்தது.இப்பொழுதே அவனை மார்போடு அணைத்து...அவன் கேட்பதைக் கொடுக்க வேண்டும் என்பது போல் அவள் மனம் ஏங்கியது.
அது முடியாமல் போகவும்,"இப்போ...அமைதியா சாப்பிட போறீங்களா...?இல்லையா...?",என்று அதட்டினாள்.
ஒரு பெருமூச்சை வெளியிட்டபடி அமைதியாக சாப்பிட ஆரம்பித்தான் ஆதித்யன்.இருவருமே அவ்வப்போது இதுபோன்ற சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.ஏக்கமும்...தாபமும் சுமந்த அவனுடைய பார்வைகள்...அவ்வப்போது வந்து நித்திலாவைத் தாக்கின...!
காதலிக்கும் காலங்களிலேயே அவன் சும்மா இருக்க மாட்டான்...!இப்பொழுது...அவன் கையால் தொங்க தொங்க தாலி வாங்கிக் கொண்டு...உரிமையுடன் வளைய வரும் போது...அமைதியாக இருக்க சொன்னால்...பாவம்...அவன் என்ன செய்வான்...?
*************************
நிலா மகள் வானில் ஊர்வலம் வந்து கொண்டிருந்தாள்...!படுக்கையின் விரிப்பை மாற்றிக் கொண்டிருந்த சுமித்ராவையே...யோசனையுடன் பார்த்துக் கொண்டு சோபாவில் அமர்ந்திருந்தான் கெளதம்.
"அப்படி என்ன..என் மாமாவுக்கு யோசனை....",படுக்கை விரிப்பை சரி செய்தவள்...தலையணைகளுக்கு உரைகளை மாட்டியபடி வினவினாள்.
"ம்....ஒரு யோசனை டி...!",
"அதுதான் என்னன்னு கேட்கிறேன்...?",தலையணைகளை அதனதன் இடத்தில் வைத்தவள்...படுக்கையில் சாய்ந்தபடியே அவனிடம் கேள்வியெழுப்பினாள்.
"தேவ் ஹோட்டல்ஸ் பத்தி கேள்விப் பட்டிருக்கிறயா...?",சோபாவில் இருந்து எழுந்தவன் அவளருகில் வந்து கட்டிலில் சாய்ந்தான்.
"ம்....கேள்விப்பட்டிருக்கிறேன்....!பெரிய ஹோட்டலாச்சே...?சென்னை..காஞ்சிபுரம்...தூத்துக்குடி...கோயம்புத்தூர்ன்னு நிறைய இடங்கள்ல இருக்கு...!",
"ம்...ரைட்....!அந்த அத்தனை ஹோட்டலுக்கும் உரிமையாளரான தேவதர்ஷனுக்கு நம்ம திவியை பொண்ணு கேட்கிறாங்க....!",
"வாட்....?",ஆனந்த அதிர்ச்சியுடன் கூச்சலிட்டாள் சுமித்ரா.
"ஆமாம் டி...!நம்ம திவி படிக்கற காலேஜ்ல நடந்த ஏதோ விழாவுக்கு அந்த தேவதர்ஷன் சிறப்பு விருந்தினரா வந்திருந்தாராம்...!திவ்யாவை பார்த்த உடனே அவருக்கு பிடிச்சு போயிருச்சாம்...!உடனே...அவங்க அம்மா அப்பாகிட்ட போய் திவ்யாவை பெண் கேட்க சொல்லியிருக்காரு....!",
"என்னங்க சொல்றீங்க....?",
சுமித்ரா அதிசயப்பட்டதிலும் ஒரு காரணம் இருக்கத்தான் செய்தது.வளர்ந்து வரும் இளம் தொழிலதிபர்களில் இந்த தேவதர்ஷனும் ஒருவன்...!கிட்டத்தட்ட ஆதித்யன்...கௌதமினுடைய வயதுதான் இருக்கும்.இதுவரை எந்தவொரு தவறான செய்திகளும் அவனைப் பற்றி வந்ததில்லை.
"அவருடைய அப்பா இன்னைக்கு எனக்கு போன் பண்ணியிருந்தாரு...!எங்க பையனுக்கு உங்க வீட்டு பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்காம்...!எங்களுக்கும் அவனுடைய சந்தோஷம்தான் முக்கியம்...!உங்களுக்கு சம்மதம்ன்னா...பொண்ணு பார்க்க வரலாமான்னு கேட்டாரு...!",
"அதுக்கு நீங்க என்ன பதில் சொன்னீங்க...?",ஆர்வத்துடன் குறுக்கே புகுந்து வினவினாள் சுமித்ரா.
"வீட்டில எல்லார்கிட்டேயும் கலந்து பேசிட்டு சொல்றேன்னு சொல்லியிருக்கேன்....!",
"வசதியை விட மாப்பிளையோட குணம்...குடும்பம் எல்லாம் முக்கியம்...!அவங்க எப்படி...?",சுமித்ராவின் குரலில் தாயின் அக்கறை தெரிந்தது.
"அதெல்லாம் ரொம்ப நல்ல குடும்பம் டி...!நானும் ஆதித்யனும் வெளியில விசாரிச்சிட்டோம்...!பையனுக்கும் எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லை....!ஆதியும்...நித்தியும் தாராளமா இந்த இடத்தைப் பேசி முடிச்சிடலாம்ன்னு சொல்றாங்க....!",அவன் முகம் அப்பொழுதும் யோசனையைக் காட்டியது.
"அதுதான்...எல்லாமே நல்ல விஷயங்களா கிடைச்சிருக்கே...!அப்புறம் எதுக்கு இன்னமும் யோசிச்சுக்கிட்டே இருக்கீங்க....?மாப்பிள்ளையும் நம்ம திவியைக் காதலிக்கறாருன்னு சொல்றீங்க...!நல்ல இடம் வரும் போது கல்யாணம் பண்ணிடறதுதான் சரி...!",குழப்பமில்லாமல் தெளிவான சிந்தனையோடு உரைத்தாள் சுமித்ரா.
"எனக்கும் அப்படித்தான் தோணுது...!சின்னப் பொண்ணா இருந்தாள்...இப்போ அவளுக்கே கல்யாணம் பண்ணற அளவுக்கு வளர்ந்துட்டாள் பாரேன்....!நான் நாளைக்கே அவங்களுக்கு போன் பண்ணி...கூடிய சீக்கிரம் பொண்ணு பார்க்க வர சொல்றேன்....!",என்றவனின் முகம் தங்கையின் மீதான பாசத்தில் கனிந்திருந்தது.
அவனைப் பார்த்துக் கொண்டிருந்த சுமித்ராவின் முகமும் மகிழ்ச்சியில் மலர்ந்திருந்தது...!
**********************
'எங்கே இன்னும் இவரைக் காணோம்...?',நித்திலா எண்ணிக் கொண்டிருக்கும் போதே வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.
முகம் மலர வாசலை நோக்கி ஓடினாள் நித்திலா.காரைப் பூட்டி விட்டு இறங்கிய ஆதித்யன்...வாசலிலேயே மனைவி நிற்பதைப் பார்த்து,"நைட் பதினோரு மணி ஆச்சு...!இன்னுமா பேபி நீ தூங்கலை...?",விசாரித்தபடியே அவளருகில் வந்தான்.
"உங்களுக்காகத்தான் வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன்...!போய் ஃப்ரெஷ் ஆகிட்டு வாங்க...!சாப்பிடலாம்....!",
"எனக்காக காத்திருக்க வேண்டாம்ன்னு சொல்லியிருக்கேன்ல பேபி...!நேரமா சாப்பிட்டு விட்டு தூங்க வேண்டியதுதானே....?",அவன் குரலில் சிறு கண்டிப்பு இருந்தாலும்...அவனது மனம் மனைவி தனக்காக காத்திருப்பதை எண்ணி மகிழ்ந்தது.
"பரவாயில்லை ஆது...!நீங்க போய் குளிச்சிட்டு வாங்க....!சாப்பிடலாம்...!எனக்குப் பசிக்குது...!",முகத்தைச் சுருக்கியபடி வயிற்றைப் பிடித்துக் கொண்டு கூறியவளை ரசித்தவன்..
"ஜஸ்ட் டென் மினிட்ஸ்....!வந்திடறேன்....!",என்றபடி தங்களது அறையை நோக்கி விரைந்தான்.
சிறு புன்னகையுடன் உணவை எடுத்து வைக்கச் சென்றாள் நித்திலா.இது தினப்படி நடக்கும் காரியம் தான்...!தான் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்று ஆதித்யன் கூறவில்லை.சொல்லப்போனால்...நேரமாக சாப்பிட்டு விட்டு உறங்கத்தான் சொன்னான்.ஆனால்...அவளுடைய காதல் மனம்தான் அதை ஏற்றுக் கொள்ளாமல்...இரவு அவன் வரும் வரை சாப்பிடாமல் காத்திருக்கச் சொன்னது...!
மனைவி தனக்காக சாப்பிடாமல்...உறங்காமல் காத்திருப்பதை அவனும் விரும்பத்தான் செய்தான்.எனவே...முடிந்தவரை வேலைகளை முடித்து விட்டு விரைவாக வீட்டிற்குத் திரும்பி விடுவான்.
ஆதித்யன்...ஒரு சின்ன குளியலைப் போட்டு விட்டு..உடை மாற்றி கீழே வந்த போது...அனைத்து உணவு வகைகளுள் தயார் நிலையில் டைனிங் டேபிளில் ஆஜாராகியிருந்தன.இருவரும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தனர்.
அவர்களுக்கான அந்த இரவு நேரத்தை இருவருமே விரும்பி அனுபவிப்பார்கள்...!அலுவலகத்தில் நடந்த விஷயங்களை மெல்லிய குரலில் அவன்...அவளோடு பகிர்ந்து கொள்ள...அன்று நாள் முழுவதும் நடந்த விஷயங்களை ஒன்றுவிடாமல் அவள் ஒப்பிப்பாள்.அந்த இனிமையான நேரம் அவர்களுக்கு மட்டுமேயானது...!
சாப்பிட்டு முடித்த பின்பு...இருவரும் சேர்ந்து பாத்திரங்களை ஒதுக்கி வைத்து விட்டு...தங்களது அறைக்குள் தஞ்சமடைந்தனர்.
சாப்பிட்டு முடித்த உடனே தூங்கக் கூடாது என்பது ஆதித்யனின் கட்டளை.எனவே...இருவரும் சிறிது நேரம் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டு அமர்ந்திருப்பர்.அன்றும் வழக்கம் போல்...அறைக்குள் நுழைந்தவுடன் மெத்தையில் தஞ்சமடைந்தபடி...ஆதித்யன் தொலைக்காட்சியை உயிர்ப்பிக்க...இரவு உடையை எடுத்துக் கொண்டு உடை மாற்றும் அறைக்குள் புகுந்தாள் நித்திலா.
அவள் உடைமாற்றி விட்டு வெளியே வரும் போது...ஆதித்யன் செய்தியில் மூழ்கியிருந்தான்.அவனருகில் வந்து கட்டிலில் சாய்ந்து அமர்ந்தவள்...அவன் கையில் இருந்த ரிமோட்டைப் பிடுங்கி சேனலை மாற்ற ஆரம்பித்தாள்.
"தீண்டி தீண்டி தீயை மூட்டுகிறாயே...!
தூண்டித் தூண்டி தேனை ஊட்டுகிறாயே....!
நீயே காதல் நூலகம்...!
கவிதை நூல்கள் ஆயிரம்...!
காதல் தீவிரவாதியின் ஆயுதம் ஆனதே....!",
அவள் வரிசையாக சேனலை மாற்றிக் கொண்டிருக்க...ஒரு சேனலில் இந்தப் பாடல் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்ததைப் பார்த்தவளின் கைகள் அப்படியே நின்று விட்டன.அவள் விழிகள் அவளையும் அறியாமல் திரும்பி ஆதித்யனைப் பார்க்க...பற்றியெரிந்த வேட்கையோடு அவள் விழிகளைத் தன் விழிகளால் சிறையிலடைத்தான் அந்தக் காதல் தீவிரவாதி...!
"தொடங்கினால் கூசும் இடங்களால்...
நகங்களை கீறும் படங்களா...?
தேகம் என்பதென்ன....?ஓர் ஆடை கோபுரம்...!
ஆடை வெல்லும் போது...ஓர் காமன் போர் வரும்...!",
பாடல் தொடர்ந்து பாடிக் கொண்டிருக்க...அந்தப் பாடல் வரிகள் உணர்த்திய தாபத்தை ஆதித்யனின் விழிகளில் கண்டவள்...பட்டென்று தன்னை மீட்டுக் கொண்டு சேனலை மாற்ற முயன்றாள்.அதற்குள் அவளிடமிருந்து ரிமோட்டை கைப்பற்றியவன் சேனலை மாற்றாமல்...ஒலியைக் கூட்டினான்.
"குறும்புகள் குறையாது...!
தழும்புகள் தெரியாது...!
கைகள் மேயுது மேயுது ரேகைகள் தேயுது...!",
அவனது வலிமையான கரங்கள் மெல்ல அவள் புறம் நகர்ந்து...அவளது நுனி விரலில் இருந்து...தோள் நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்தன...!அவனுடைய மென்மையான தீண்டலில் தேகம் சிலிர்க்க விழிகளை மூடிக் கொண்டாள் நித்திலா.
"இருவரே பார்க்கும் படவிழா...!
திரையிடும் மோகத் திருவிழா...!
காதின் ஓரம் சாய்ந்து நீ கூந்தல் கோதிடு...!
போதும் என்ற போதும் நீ கேட்டு வாதிடு...!",
அவனது தேகம் அவளது தளிர் மேனியின் மீது படர்ந்தது...!அவனுடைய சூடான மூச்சுக்காற்று...அவளுடைய காதோரம் படிந்து...அவளுக்குள் தீ மூட்டியது.கொந்தளிப்பான நடுக்கடலின் சுழலில் சிக்கியவளைப் போல் அவளது தேகம் கூசிச் சிலிர்த்து நடுங்கியது...!பெண்ணவளின் பூ மேனி நடுக்கத்தில்...ஆணவனின் உணர்வுகள் கட்டவிழ்ந்து கொண்டு சூறாவளியாய் அவனை சுழற்றியடித்தன...!
"வேர்வரை சாய்க்காது...முதல் புயல் முடியாது...!
காமன் தேர்விது தேர்விது...வியர்வையில் மூழ்குது...!",
தாள முடியாத வேட்கையோடு அவன்...அவள் முகம் நோக்கி குனிந்த அந்த நொடி...தொலைக்காட்சியில் பாடல் முடிந்து...ஏதோ விளம்பரம் ஒளிபரப்பாக...அது எழுப்பிய சத்தத்தில்...உணர்வுகளின் சுழலுக்குள் சிக்கி அமிழ்ந்து கொண்டிருந்த நித்திலா பட்டென்று கண் விழித்தாள்.
தன் மேல் படர்ந்திருந்தவனை வேகமாக விலக்கித் தள்ளியவள்...அதை விட வேகமாக கட்டிலை விட்டு இறங்கி நின்றாள்.கசங்கிய நைட்டியும்...கலைந்த தலை முடியும் சற்று முன் நடந்ததை பறை சாற்ற...உதடு கடித்து நின்றிருந்தவளின் தோற்றம் அவனை மயக்கியது.
தலைமுடியை அழுந்தக் கோதி...தன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்தவன்...ஒரு வித ஏக்கத்தோடு அவளது முகத்தை நோக்கினான்.அவள் விழிகளில் தெரிந்த அலைப்புறுதலைக் கண்டு கொண்டவனின் புருவங்கள் முடிச்சிட்டன.ஆழ்ந்த மூச்செடுத்து தன்னை நிலைப்படுத்தியவன்...வேகமான நடையுடன் பால்கனிக்கு சென்று விட்டான்.
அவன் தன்னை எந்தக் கேள்வியும் கேட்காது...பால்கனியில் தஞ்சமடைந்தது அவள் மனதை வருத்தியது.ஆதித்யனைப் பற்றி அவளுக்கு நன்கு தெரியும்...!அவள் மறுத்தால்...அவன் 'சரி' என்று விட்டு விட மாட்டான்...!
சீண்டி...தீண்டி...கெஞ்சி...கொஞ்சி...பிடிவாதமாய் தான் நினைத்ததை பெற்று விட்டுத்தான் மறுவேலை பார்ப்பான்...!அவன் கேட்டதைக் கொடுக்கும் வரை...அவன்..அவளை விட மாட்டான்.
அப்படிப்பட்டவன்...இன்று அமைதியாய் விலகிப் போனது அவள் மனதிற்கு வேதனையைத் தந்தது.
'வேண்டாம்ன்னு நான் மறுத்தால்...அவரு அமைதியா போயிடுவாரா...?வேணும்ன்னு பிடிவாதம் பிடிக்க வேண்டியதுதானே...!',என்ற கோபம் வந்தது.
'வேண்டாம்...!',என்று அவனை விலக்கித் தள்ளியதும் அவள்தான்...!'வேண்டும்...' என்று பிடிவாதித்திருக்க வேண்டியதுதானே என்று கோபம் கொள்வதும் அவள்தான்...!
இந்தக் காதல் இருக்கிறதே...!அது படுத்தும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல...!முரண்பாடுகளின் மொத்த உருவமே காதல்தான்....!
பால்கனியில் நின்று கொண்டு...நிலவை வெறித்தபடி...சிகரெட்டை ஊதித் தள்ளிக் கொண்டிருந்தவன்...தன் முடிவில் உறுதியாகத்தான் இருந்தான்.இருவரும் மனமுவந்து முழுக் காதலோடுதான் கூட வேண்டும் என்பதில் அவன் தெளிவாக இருந்தான்...!
வெறும் உணர்ச்சிகளின் தேடல் அல்ல காமம்...!உயிர்க் காதலின் உச்சக்கட்டத் தேடல்தான் காமம்...!என்ற உறுதி அவனுக்குள் இருந்தது.எனவேதான்...அவள் விழிகளில் தெரிந்த அலைப்புறுதலைக் கண்ட உடனேயே வற்புறுத்தாமல் விலகி விட்டான்...!
ஆனால்...எவ்வளவு நாள்தான் அவ்வாறு விலகியிருக்க முடியும்...?காமன்...லட்சம் கோடி மலர்க் காதல் கணைகளை இடைவிடாமல் தொடுத்துக் கொண்டிருக்கும் போதும்...காமன் தேரில் ஏறி ஊர்வலம் நடத்தாமல்...அவனால் விலகியிருக்க முடியுமா என்ன...?
அகம் தொட வருவான்...!!!
கருத்துகள்
கருத்துரையிடுக